Saturday, 30 March 2013

இந்தியாவில் கற்பழிப்பு அதிகம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்துவந்த இந்தியா, தற்போது பெருகி வரும் கற்பழிப்பு சம்பவங்களால் தனது கவர்ச்சியை இழந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.சுற்றுலா துறைக்கான ஆய்வு அமைப்பான அசோச்சம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவீதமும், பெண்களின் எண்ணிக்கை மட்டும் 35 சதவீதமும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.புதுடெல்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட செய்தியின் சூடு தணிவதற்குள், மத்திய பிரதேச மாநிலத்தில் 8 பேரால் சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலா பயணி கற்பழிக்கப்பட்டது, ஓட்டலில் தங்கியிருந்த இங்கிலாந்து சுற்றுலா பயணியிடம் அந்த ஓட்டலின் ஊழியர் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த போது, மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பெண் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தது போன்ற செய்திகள், இந்திய சுற்றுலா துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மந்தநிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியாக இந்தியாவிற்கு சுற்றுலாசெல்ல வேண்டாம் என பலநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.இதன் தாக்கத்தால், கடந்த 3 மாதங்களில் மட்டும் பல வெளிநாட்டினர் இந்தியா வருவதற்காக செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துக்கொண்டிருப்பதாக சுற்றுலா அமைப்பாளர்கள் 72 சதவீதம் பேர் கூறுகின்றனர்.இவர்களில் பெண்களின் எண்ணிக்கைஅதிகம்

Sunday, 24 March 2013

அமலா பாலை அமுக்கிய அமைச்சர்

அமலாபாலை தனது பங்களாவுக்குகொண்டு சென்ற பிரபல தமிழக அரசியல்வாதி!சற்றேறக்குறைய ஒரு மாதம் முன்பு, காதலில் சொதப்பிய நடிகைஒருநாள் திடீரென காணாமல் போய்விட்டாராம்.பதறிப் போனார்கள் வீட்டில்… லட்சம் கோடிகளைக் கொட்டும் மகராசி காணாமல் போனால் சும்மா இருக்க முடியாதல்லவா!தொடர்ந்து போலீஸ் துணையுடன் வலை வீசித் தேடியதில், ஒரு அதிமுக முக்கியப் பிரமுகர் வீட்டில் நடிகை அமுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.அத்தனை சுளுவாக போலீஸ் நெருங்கமுடியாத இடம். அதிகாரத்தில் இருப்பவர் வேறு.பின்னர் போலீசார், ரொம்ப ரொம்ப இறங்கிப் போய் பிரமுகரை கெஞ்சிக் கூத்தாடி நடிகையை விடுவித்து ஒப்படைத்தார்களாம்.இந்தத் தகவல் மேலிடத்துக்குப் போன அடுத்த கணம், பலிபீடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டார் அந்த முக்கியப் பிரமுகர்! இதானாய்யா உன் ‘உயர் கல்வி’ லட்சணம் என வறுத்தெடுத்ததோடு ப்யூஸைப் பிடுங்கிவிட்டார்கள்.

Friday, 22 March 2013

அண்டிகள் அழகாக ஜொலிக்க சில ஆயில் ட்ரீட்மெண்ட்!

 ஆண்டிகள்  அழகாக மாற ஆயில்  மசாஜ்
இன்றைய காலத்தில் முப்பது வயதானாலே அவர்கள் வயதானவர்கள் போன்று இருக்கிறார்கள். ஏனெனில் அதற்கு நாம் உண்ணும் உணவு முறை
தான் காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை.
அதிலும் குழந்தை பிறந்துவிட்டால், சருமம் சற்று தளர்ந்தது போல் இருக்கும். ஆகவே அப்போது முதுமைத் தோற்றத்தை தடுக்க ஏதேனும் ஒரு சில
மசாஜ்களை செய்ய வேண்டும்.
மேலும் ஆயில் மசாஜ் செய்வதால், உடலும் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு பயன்கள்
இருக்கின்றன. இப்போது எந்தெந்த எண்ணெயில் என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போமா!!!
கடுகு எண்ணெய் – இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், தளர்வாக மார்பகங்கள் மற்றும் பெல்லியை சற்று பிட்டாக மாற்றும்.
மேலும் இந்த எண்ணெயில் மசாஜ் செய்யும் போது, லேசாக சூடேற்றி, பின் அதனை கைகளில் ஊற்றி, இரண்டு மார்பகங்கள் மீதும் சிறிது நேரம்
மசாஜ் செய்து வந்தால், தளர்வாக இருக்கும் மார்பகங்கள் சற்று பிட்டாக இருக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் என்றால் தினமும்
இவ்வாறு செய்வது நல்லது.
திராட்சை எண்ணெய் – இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், இந்த எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோட, ஏதேனும் தளும்புகள் இருந்தால், நாளடைவில்
மறைந்துவிடும்.
முகம் நன்கு பொலிவோடு, எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முகத்திற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தி
மசாஜ் செய்தால், முகச்சுருக்கங்கள் நீங்கும்.
அவோகேடோ எண்ணெய் – நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக
இருப்பது தான்.
ஆனால் இந்த அவோகேடோ எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை
குறைத்துவிடும்.
ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து, முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும், அவற்றை
விரைவில் போக்கிவிடும்.
நல்லெண்ணெய் – உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய்
மசாஜ் பருக்களை ஏற்படுத்தும்.
ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்சனையும் வராது. மேலும் இந்த எண்ணெய் சருமத்தினை உறுதியாக்கி, பருக்கள்
மற்றும் பிம்பிள்களை நீக்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய் – எண்ணெய்களிலேயே மிகவும் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய் என்று சொல்லலாம். இது ஒரு அதிசய எண்ணெய்
என்றும் கூறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது.
இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதோடு, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மசாஜ்
செய்யும் போது, எந்த காரணத்தைட்க கொண்டும் சூடேற்ற வேண்டாம். அவ்வாறு சூடேற்றினால், அதில் உளள சத்துக்கள் அனைத்தும்
அழிந்துவிடும்.
எனவே சருமம் சற்று தளர்ந்து போல் இருந்தால், மேற்கூறிய எண்ணெய்களில் எவற்றைப் பயன்படுத்துவது என்று நீங்களே தேர்ந்தெடுத்து
பயன்படுத்தி, பட்டுப் போன்று மின்னுங்கள்.

Friday, 15 March 2013

கேரளா ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் பரிசோதகர்கள்

ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகீதா. கொல்லத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அரசு அலுவலகத்தில் எழுத்தராக அவர் பணிபுரிந்து
வருகிறார். இவர் கவிஞரும் கூட.
கொல்லம்-சென்னை ரயிலில் பணிக்கு செல்வது வழக்கம். ரயிலில் பணிக்கு செல்லும் போது டிக்கெட் பரிசோதகர்கள் ஜாபர், பிரவீன் ஆகிய 2
பேரும் வழக்கமாக பயணிக்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கின்றனர்.
இந்த தொல்லையை ஜெயகீதாவும் நாள்தோறும் எதிர்கொண்டிருக்கிறார். பரிசோதகர்களின் அத்துமீறல் அதிகரித்த நிலையில் ரயில்வே மேலாளர்
மஜீத்திடம் அவர் புகார் கொடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பரிசோதகர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Tags: பெண் பயணிகளை பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர்கள்!

Tuesday, 12 March 2013

இளசுகளை குறிவைக்கும் எஸ்.எம்.எஸ்

அந்த நகரை சேர்ந்த அரசு அதிகாரியின் மகன் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு பெண்ணிடம் நட்பு வயப்பட்டார்.
கொடைக்கானலில் சந்திக்க விரும்புவதாக அப்பெண்ணிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பி சென்றார். அவரை அழைத்தது பணம் பறிப்புக் கும்பல் என அங்கு சென்ற போதுதான் தெரிந்தது. பின் அக்கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டார்.
மதுரை வாலிபர் செந்தில்: கிருஷ்ணன் மொபைல் போனில் உங்களுக்கு ஏழரை லட்சம் பவுன்ட் (இந்திய மதிப்பு ரூ.5.50 கோடி) பரிசு தொகை விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., தகவல் வந்தது. பரிசுதொகை வழங்க ரூ.ஐந்தரை லட்சம் பண பரிவர்த்தனை செலவுக்கு கொடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.
அவரும் அத்தொகையை இரு தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை. பின்னர் ஏமாற்றப்பட்டது தெரிந்து புகார் செய்தார்.
மொபைல் போன், இன்டர்நெட், கிரெடிட், ஏ.டி.எம்., கார்டுகள் மூலம் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நவீன மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. அறுபது சதவீத இளைஞர்கள் மொபைல் போன்களில், ஆபாச படங்களை டவுன் லோடு செய்கின்றனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Saturday, 9 March 2013

மாணிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசிரியர்

தமிழகத்தின் மதுரை அருகே, குலமங்கலத்திலுள்ள அரச மேல்நிலைப்பள்ளியில் சில மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.
இதுபற்றி பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கூடல் புதூர் பொலிசில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரில் பள்ளியில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரபு கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து பொலிசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஆங்கில பாட ஆசிரியர் டெரன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுத்தாயிடம் தெரிவித்தனர்.
மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் பொன்னுத்தாயி பொலிசில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: மாணவிகளிடம் சில்மிசம் செய்த ஆசிரியர்கள்!

Sunday, 3 March 2013

கத்திமுனையில் மாணவி கற்பழிப்பு

பூந்தமல்லி, மார்ச். 3-
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. இவரது தங்கை தேவி (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய்-தந்தையை இழந்த இருவரும் போரூர் லட்சுமி நகரில் வசித்து வந்தனர். வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் குறைந்த பணத்தில் விஜயா தங்கையை காப்பாற்றினார். வறுமையில் வாடிய நிலையிலும் தேவியை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார். அவர் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
விஜயா தங்கி இருக்கும் வீட்டின் மாடியில் கட்டுமான பணிகளை உரிமையாளர் மேற்கொண்டார். இதற்காக சில நாட்களாக மணல், ஜல்லி இறக்கி வந்தனர். நேற்று காலை வீட்டு வேலைக்காக விஜயா வெளியில் சென்றார். தேவி மட்டும் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் லோடு ஆட்டோ டிரைவர் மதுரவாயலை சேர்ந்த மகாதேவன் (34) கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து இறக்கினார். தேவி தனியாக இருப்பதை அறிந்து அவர் நைசாக பேச்சு கொடுத்தார். தண்ணீர் கேட்பது போல நடித்து வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டினார்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி தேவியை கற்பழித்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய விஜயா, உடலில் காயத்துடன் தங்கை தேவி அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் கேட்ட போது கற்பழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பூந்தமல்லி உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ் பெக்டர் ஷேக்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த டிரைவர் மகாதேவனை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவி தேவியை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.