Wednesday, 12 September 2012

Why you should have sex at least once a week இதப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

Why you should have sex at least once a week
Why You Should Have Sex At Least Once A Week

ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை மனிதர்களின் வெற்றிக்கு ஊக்க சக்தியாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் புத்துணர்ச்சி தரும் மன அழுத்தம் போக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஆரோக்கியமான ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது தம்பதியர் தாம்பத்ய உறவில் ஈடுபடவேண்டும் என்கின்றனர்.

செக்ஸ் மூலம் மனிதர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் காதலுடன் உங்களின் துணையை அழுத்தமாக சில நிமிடங்கள் கட்டிப் பிடித்துக்கொண்டிருந்தாலே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுகிறதாம். அதேசமயம், ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 75 முதல் 85 வயதுடைய நபர்களும் பங்கேற்றனர். ஆய்வின் போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வாரத்திற்கு ஒருமுறை தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதிகள் ஆரோக்கியமாகவும், சுறுப்பாகவும் காணப்படுவதாக தெரிவித்தனர். அதேசமயம் உறவில் ஈடுபடாத தம்பதிகள் உடல் சோம்பலாக இருப்பதாக கூறியுள்ளனர்.

30 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியரை விட 55 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியர் உடல் ஆரோக்கியம் சீராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது தெரியவந்தது. வயதானாலும் இறுதி காலம் வரை ஆரோக்கியத்தைப் பொருத்து உறவில் ஈடுபடவே பெரும்பாலான தம்பதியர் விரும்புகின்றனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடலாமா...!!

மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடலாமா...!! மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடலாமா...!!

பெண்களின் மாதவிலக்கு பருவத்தில் சிலர் தாம்பத்ய உறவில் ஈடுபடுவார்கள். ஏனெனில் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில் தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும்.

அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.brbrமாதவிலக்கு காலத்தில் கண்டிப்பாக உறவு கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆண்கள் காண்டம் உபயோகிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோய்கள் பரவாமல் இருக்க உறவின் போது கண்டிப்பாக காண்டம் உபயோகிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.brbrமாதவிலக்கு நாளில் ரத்தப்போக்கு இருக்கும் என்பதால் பெரும்பாலான ஆண்கள் உறவில் ஈடுபட விரும்புவதில்லை.

அந்த நேரத்தில் சுத்தம், சுகாதாரமாக ஈடுபடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.மாதவிலக்கின் முதல் இரண்டு நாட்களில் அதிக ரத்தப்போக்கு, வலி இருக்கும் பெண்களுக்கும் சோர்வு இருக்கும். எனவே முதல் இரண்டு நாட்களை விட்டுவிட்டு மூன்றாவது நாளில் வேண்டுமானால் உறவுக்கு முயற்சிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.அந்த நாளில் உறவில் ஈடுபடும் போது உற்சாகமான விளையாட்டுக்களோடு நிறுத்திக்கொள்ளலாம். வேகமான செயல்பாடு மூலம் உச்சக்கட்டம் வரை செல்வது பாதுகாப்பானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். மாதவிலக்கு சமயத்தில் கூடுமானவரை அதிக வேகமான உறவில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

உதயகுமாருடன் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ரகசிய சந்திப்பு

உதயகுமாருடன் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ரகசிய சந்திப்பு உதயகுமாருடன் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ரகசிய சந்திப்பு
அன்னாஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் இடிந்தகரைக்கு நேற்று இரவு வந ்தார். வெகுநேரம் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் பந்தலிலேயே இருந்தார். அப்போது பேசிய அவர் உதயக்குமார் சரணடைய தேவையில்லை. உதயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். 

பின்னர் அவர், நள்ளிரவில் இடிந்தகரையில் உள்ள பாதிரியார் பங்களாவிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசியஇடத்தில் இருக்கும் உதயகுமாரை சந்திப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ரகசியமாக சென்றுள்ளார். 

இதற்காக அவரை போராட்டக்குழுவை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இன்றுஅதிகாலை இடிந்தகரை கடற்கரையில் இருந்து படகு மூலம் அழைத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று போலீஸ் அதிகாரிகள், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசும்போது, உதயகுமாரை சரணடைய வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆகவே அதுபற்றி பேசுவதறà ��காக அரவிந்த் கெஜ்ரிவால், உதயகுமாரை சந்திக்க சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


/

தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்



தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம் தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்
தமிழ்நாட்டில் மின் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவà ��கிறது. தமிழ்நாடு முழுவதும் சாதாரண நேரங்களில் 10,000 மெகாவாட் மின்சாரமும், காலை, மாலை, இரவு நேரங்களில் 12,000 மெகா வாட் மின்சாரமும் தேவைப்படுகிறது. ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. 30சதவீத மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பற்றாக் குறையை சமாளிக்க சென்னை நகரில் 1 மணி நேரமும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் கூடுதல் நேரமும் மின்வெ�® �்டு அமல் படுத்தப்படுகிறது. 

தமிழ் நாட்டில் இப்போது மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்தும், ஆரல்வாய் மொழி, பாலகாட், தென்காசி, தேனி ஆகிய இடங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றின் வேகம் அ திகரிக்கும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் முழு அளவில் கிடைக்கும் போது தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்படுகிறது. ஆனால் காற்றின் வேகம் நிலையற்ற தன்மையில் இருப்பதால் சில சமயம் முழு மின்சாரமும், சில சமயம் மின் உற்பத்தியே இல்லாமலும் போய் விடுகிறது. இதலால் திடீர் என்று மின்வெட்டு அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. 

காற்றாலை மூலம் அதிக பட்சம் 2,500 மெகா வாட்டில் இருந்து 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இந்த மாத இறுதியில் காற்று சீசன் முடிவடைகிறது. அடுத்து வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் மீண்டும் காற்று சீசன் தொடங்கும். எனவே அடுத்த சில வாரங்களில் மின்தட்டுப்பாடு நிலைமை மோசம் அடையும் நிலை உருவாகிறது. 

தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய மின்நிலையங்களில் இருந்தும், கல்பாக்கம் அணுமின் நிலையம், கர்நாடக மாநில�® �் கைகா அணுமின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 2,481 மெகாவாட் மின்சாரத்துக்கு பதில் 1,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. மேலும் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் காற்றாலை மின்சாரம் தான் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. அதுவும் இந்த மாத இறுதியில் குறைந்து விடும் நிலை உள்ளதால் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை இனிவரும் காலங்களில் மின்சார பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை நகரில் 1 மணி நேர மின்வெட்டு அமலில் இருந்தாலும் சில இடங்களில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு பகுதியாக நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அடுத்து வரும் காலங்களில் மின் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மின் வாரியம் ஆலோசித்து வருகிறது.



/

நாடித்துடிப்பை வச்சும் உடலை பற்றி அறியலாம்!!!

நாடித்துடிப்பை வச்சும் உடலை பற்றி அறியலாம்!!!

 உடலில் ஏற்படும் இதயத்தின் துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களில் நன்கு உணர முடியும். அதிலும் நிறைய பேர் அத்தகைய துடிப்பை மணிக்கட்டில் மட்டும் தான் உணர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த துடிப்பை கழுத்து, கால்களில் கூட உணர முடியும். இப்போது உடலில் உள்ள நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ துடித்தால், உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், உடலில் ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் முதலில் அந்த துடிப்பை பார்த்து தான் மற்ற முடிவுகளை எடுப்பார்கள். மேலும் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதையும் அந்த நாடித்துடிப்பை வைத்து தான் முடிவெடுப்பார்கள்.


ஒருவருக்கு சரியான துடிப்பு என்றால் எவ்வளவு?
 
ஒரு ஆரோக்கியமான இளைஞனுக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். ஆனால் அந்த துடிப்பு, பாலினம், வாழ்க்கை முறையை பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர்களுக்கு நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை துடிக்கும். அதுமட்டுமல்லாமல், கைக்குழந்தைகளுக்கு அதிகமாக 100 முதல் 160 வரையில் துடிக்கும். சிறு குழந்தைகளுக்கு 100 முதல் 120 வரை துடிக்கும். அதுவே சற்று பெரிய குழந்தைகள் என்றால் 70 முதல் 80 வரை துடிக்கும். ஆனால் இயற்கையாகவே சாப்பிடும் போது, உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் நாடித்துடிப்புகள் அதிகரிக்கும்.
 
நாடித்துடிப்புகள் எதற்கெல்லாம் அதிகமாகும்?
 
* அதிகமான எடை இருந்தால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் உடலில் அதிக அளவு கொழுப்புக்கள் சேர்வதால், இதயத்திற்கு அதிக அளவு அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்களால் சரியாக மூச்சு விட முடியாத அளவு போய்விடும். அதனால் தான் குண்டாக இருப்பவர்களுக்கு விரைவில் இதய நோய் வந்துவிடுகிறது.
 
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நாடித்துடிப்புகள் ஒரு நிமிடத்திற்கு 150 துடிப்புகள் ஏற்படும். பழைய காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று அறிய எந்த ஒரு டெஸ்ட்களும் இருக்காது. அப்போது அவர்கள் நாடித்துடிப்பை வைத்து தான் கர்ப்பத்தை அறிவார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவதற்கு சற்று கடினமாக வேலை செய்யும். இது மிகவும் சாதாரணமானது தான். இருப்பினும் கர்ப்பமாக இருக்கும் போது இரத்த அழுத்தத்தை அறிய வேண்டும்.
 
* உடலில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவர்கள் புகை பிடிப்பதை நிறுத்த சொல்வார்கள். ஏனெனில் அதில் இருக்கும் நிக்கோட்டின் மற்றும் புகையிலை, இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் உடலில் சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தம், இதைப் பிடிப்பதால், நாடித்துடிப்புகள் மிகவும் அதிகரிக்கும்.எனவே உங்கள் நாடித்துடிப்புகளை அறிந்து கொண்டு, உடலை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருதலைக் காதல்


ஒருதலைக் காதல்


  ஒருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் &#2958 ;ன்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம்.

 
ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்ம&#301 6; புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது.
 
பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏ& #2993;்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவருக்கு தொந்தர வாகவும் இருக்கும். சமூகம் ஒருதலைக்காதலரை எரிச்சலோடு பார்க்கும். அந்த ஒருதலைக் காதலர் ஆணாகவும் இருக்கல&#30 06;ம். பெண்ணாகவும் இருக்கலாம்.
 
இருபக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்த மாதிரியான காதலர்களை பக்கு வமாக கையாள வேண்டும்.
 
ஒருதலைக்காதலை பொறுத்தவரை, நடந்தால் நடக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்' என்று மேம்போக்காக காதலிப்பவர்களும் உண்டு. தன்னை திரும்பிப் பார்த்து தன் காதலை ஏற்று& #2965;் கொள்ள வேண்டும் என்று இன்னொருவர் மீது காதலை திணிப்பவர்களும் உண்டு. தான் விரும்புகிறவர் தன்னை காதலிக்க எந்த முகாந்திரமும் இல்லாத போதும் எப்படியாவது தன் காதல் &#2 972;ெயித்து விடாதா என்ற தவிப்புடன் காதலிப்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் ஒருதலைக்காதல் அன்பு நிறைந்ததல்ல! வம்பு நிறைந்தது!
 
ஒற்றை சக்கர வண்டி ஊர் போய் சேராது. அதனால் இந்த ஒருதலைக் காதலை கைவிடுவது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக &#2 951;ருப்பது காதலுக்கு தரும் மரியாதையாக இருக்கும்.
 
புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவல், ஒருதலை காதலின் தியாகத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத நாயகி, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் ச&#3 014;ய்து கொள்வாள். அப்போது கதாநாயகன் என் உண்மை காதலை உணர்ந்து என்றாவது ஒரு நாள் நீ கண்ணீர்விடுவாய். அப்போது தான் என் தூய்மையான காதல் உனக்குப் புரியும்" என்று கூறுவா&#2 985;். கடைசியில் நாயகியின் கணவனை தூக்கிலிருந்து காப்பாற்றிவிட்டு அவனுக்கு பதில் அவன் தூக்கு மேடையேறிவிடுவான். இறுதியில் அந்த ஒருதலைக்காதலனின் கல்லறையில் நாயகி க& #2979;்ணீர் விடுவாள். உன் ஒருதலை காதலுக்கு நான் தரும் அஞ்சலி இந்த கண்ணீர் துளிகள்' என்று கூறுவதாக கதை முடியும்.
 
இப்படி ஒருதலைக்காதலை தியாகத்தில் முடிக் கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? இதை ஒருவிதத்தில் பக்குவமாக எடுத்துக் கொண்டாலும், இன்னொரு கோணத்தில் பார்த் தா ல் இந்த ஒருதலைக்காதலிக்காக அவர் தூக்கு கயிற்றில் ஏறி இருக்கவேண்டுமா?' என்ற கேள்வியும் எழும்.
 
காதல் என்றாலே அது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது.
 
ஆனால் ஒருதலைக்காதல் மேற்கூறியவைகளுக்கு நேர் எதிராக மாறுகின்றன. தெய்வீகத்திற்கு பதில் வெறியையும், மென்மைக்கு பதில் முரட்டுதனத்தை அது உருவாக் கும்.
 
தான் காதலிக்கும் நபர் தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம், ஏமாற்றம், வேதனை, ஒரு பொறுமையற்ற நிலையை மனதில் ஏற்படுத்தி அவர்களை ஒரு "சைக்கோ"வாக மாற்றிவி&#297 5;ும் கொடுமையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தான் காதலித்த பெண்ணுக்கு நடந்து விட்ட திருமணத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தனியாக இருக்கும் &# 2984;ேரத்தில் வம்பு செய்யும் சோகமும் நிகழத்தான் செய்கிறது. இது சமூகத்தை பெருமளவில் பாதிக்கிறது.
 
காதல் என்பது உலகையே வாழ வைக்கும் ஒரு உன்னதம். அது இப்படி பழி பாவத்தில் போய் முடிய இந்த ஒருதலை காதல் காரணமாகக் கூடாது. காதலர் தினம் கொண்டாடும் யுகத்தில் உண்மையான க& #3006;தல் என்பது என்ன என்பதையும் விளக்கிச் சொல்லி இளைய தலைமுறையை வழி நடத்த வேண்டியுள்ளது.
 
இந்த உலகம் மிகப் பெரியது. ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இந்த பெரிய உலகத்தை மறந்து விடுகிறார்கள். தான் செய்யத் துணியும் காரியத்தின&#3021 ; எதிர்விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியாவது போராடி காதலில் வென்றுவிட வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிற&#3006 ;ர்கள். வேதனையின் விளிம்பிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டவும் செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் ப&#30 09;ரியாதவர்கள்.
 
இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருதலைக்காதலின் சோகத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டும். சமூகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வழிவிட வேண்டு& #2990;்

உடற்தகுதி குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவராஜ் சிங்


உடற்தகுதி குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவராஜ் சிங்



 புற்றுநோய்க்கு பின்பும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங், நேற்றைய ஆட்டத்தில் அத&#300 7;ரடியாக விளையாடி ரசிகர்களின் கை தட்டல்களை பெற்றார்.யுவராஜ் சிங், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை ப&# 3014;ற்றுத் திரும்பினார்.

 
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர், இந்திய அணிக்காக நியூசிலாந்திற்கெதிரான டி20 போட்டியில் நேற்று விளையாடினார்.
 
வழக்கம் போல் அதிரடியாக ஆடிய யுவராஜ் 26 பந்தில் 2 சிக்சர் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
2 ஓவர்கள் மட்டுமே வீசினாலும் எதிர்தரப்பினருக்கு 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார்.
 
புற்றுநோய்க்கு பின்னர் யுவராஜால் முன்புபோல் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்விகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
 
ஆனால், நேற்றைய போட்டியில் இந்திய அணி போராடிய போதும் 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

உதயகுமார் :கைதாவதை தடுக்கு ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?



உதயகுமார் :கைதாவதை தடுக்கு ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு? உதயகுமார் :கைதாவதை தடுக்கு ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிà ��ாக நேற்று முன்தினம் நடந்த முற்றுகை போராட்டத்தில் பயங்கர மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். 

போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வ�® �்தனர். எனினும் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் இன்று 3-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது. 

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட வர்களை கைதுசெய்ய போலீசார் கடந்த 2 நாட்களாக இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய 51 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜன் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் உதயகுமார் அரசியல் பிர�® �ுகர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் (நேற்று இரவு) சரணடைவதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு இடிந்தகரை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் உதயகுமார் நேற்று மாலை திடீரென இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். நிருபர்களுக்க�¯ பேட்டியளித்த பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உருக்கமாக பேசினார். 

அப்போது ஆண்களும், பெண்களும் கதறி அழுது உங்களை கைதாக விடமாட்டோம் என்று கூறினர். இந்த சமயத்தில் உதயகுமாரை கைது செய்ய அதிரடிப்படை போலீசார் இடிந்தகரை நோக்கி கடற்கரை வழியாக பதுங் கி, பதுங்கி சென்றனர். 

இதனை அறிந்த இளைஞர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த உதயகுமார் மற்றும் புஷ்பராயன், முகிலன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். கடற்கரையில் தயாராக நிறுத்தி வைத்திருந்த 4 படகுகளில் அவர்களை ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டு சென்றனர். இந�¯ �த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

படகுகளில் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட உதயகுமார், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்துக்கு திரும்பினர். அங்கு அவர்கள் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக �® �ங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதனை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்வதற்காக கூத்தங்குழி கிராமத்தை முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் ஊருக்குள் புகுவதை தடுக்க கூத்தங்குழி கிராம மக்கள் ஊரை சுற்றிலும் மணல் பரப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக �® �ூறப்படுகிறது. மேலும் வலைகளையும் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

எனவே கூத்தங்குழி கிராமத்துக்குள் நுழைய போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்தால் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் உதயகுமார் உள்ளிட்டோரை எவ்வாறு கைது �® �ெய்வது என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

போலீஸ் ஐ.ஜி.க்கள் கண்ணப்பன், ராஜேஷ்தாஸ், இடிந்தகரை வந்துள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்பு கொண்டு உதயகுமாரை போலீஸ் நிலையத்திலோ அல்லது கோர்ட்டிலோ சரணட ைய வைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கெஜ்ரிவால் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை. 

இதனிடையே உதயகுமார் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் கைது ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதை யடுத்து கடலோர காவல்நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இடிந்தகரை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.



/