Monday, 30 July 2012

யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பாக்கம்





சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் படம் என்றாலே அப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இரு� ��்கும். அந்த எதிர்பார்ப்பில் இருந்து 'மாற்றான்' படமும் தப்பவில்லை.

'அயன்' வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் 'மாற்றான்'. இந்த மெகா பட்ஜெட் படத்தினை தயாரித்து இருக்கிறார் கல்பாத்தி S. அகோரம்.

இப்படம் ஆரம்பித்த உடனேயே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தினை யார் வாங்குவது என்று பெரும் போட்டி நிலவியது.

இப்படத்தின் மொத்த உரிமையையும் EROS நிறுவனம் 84 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு உரிமையை பேலம்கொண்டா சுரேஷ் 17 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவு� ��், வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு விலை பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் இசையை சோனி நிறுவனம் 1.2 கோடிக்கு வாங்க இருக்கிறது. இது தான் தற்போதைய ஆடியோ உரிமையில் பெரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கூட்டணியில் 'அயன்' பாடல்கள் வெற்ற� �� என்பதால் தான் 'மாற்றான்' படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு.

இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி NATIONAL DAY OF SINGAPORE என்பதால் சிங்கப்பூரில் அரசு விடுமுறை. ஆகவே அன்று அங்கே ப� ��ரம்மாண்டமாக இவ்விழாவை நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.







சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி பறிப்பின் பின்னணி





சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் இருவர் வகித்து வந்த கட்சிப் பதவிகளை பறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உ� ��்தரவிட்டதற்கு கவுன்சிலர்களின் அடங்காத அடாவடி வசூல்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் துறைமுகம் கவுன்சிலர் ஆவின் அருள், சேப்பாக்கம் கவுன்சிலர் அலிகான் பஷீர் ஆகியோ வகித்து வந்த கட்சிப் பதவிகளை நீக்கி ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டிர� ��ந்தார்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவர்களை நேரில் அழைத்து கடுமையாக டோஸும் விட்டிருந்தார். ஆனாலும் சில கவுன்சிலர்கள் இஷ்டம் போல் ஆடி வந்திருக்கின்றனர்.

அந்த வகையில்தான் ஆவின் அருளும் அலிகான் பஷீரும் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டிருக்கின்றனர். ஆவின் அருளைப் பொறுத்தவரையில் வடமாநில பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் அலிகான்பஷீர், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கார் பார்க்கிங் நடத்தி வருவதாகவும் புகார்கள் போயஸ் தோட்டத்துக்குப் போயின. இதனை விசாரித்த பிறகுதான் இருவரது கட்சிப் பதவிகளையும் பறித்து மற்ற கவுன்சிலர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார் ஜெயலலிதா என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.







என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த் பேட்டி




தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- 
தி.மு.க. நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது. பிரபாகரன் உயிரோடு இருந்தபோது அவரை தி.மு.க. தலைவர் கருணாநிதி காப்பாற்றவில்லை. இன்று முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். 

எனது ரிஷிவந்தியம் தொகுதியில் கால்வாய் தூர்வாருவத ற்காக தமிழக அரசிடம் ரூ.14 கோடி கேட்டேன். ஆனால் தரவில்லை. சென்னையில் காலரா வாந்தி-பேதியால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆனால் இதை மேயர் ஏற்க மறுக்கிறார். 

என்னை ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக முதல்வரும், அமைச்சர்களும் மதிக்கவில்லை. எனவே மக்களை நேரில் சந்திக்க இருக்க� �றேன். ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை மக்களுக்காக மக்கள் பணி செய்வதற்கு ஒரு மாதம் தீவிர சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறேன். 

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து இருக்கிறது. நெல்லையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சட்டம்-ஒழு ங்கு சீர்கெட்டு வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாதமாக கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அங்கிருந்து திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்வதாக அறிக்கை விடுகிறார். ஆனால் எந்த திட்டமும் செயல்பட்டதாக தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது எங்கள் விருப்பம். துணை ஜனாதிபதி தேர்தலையும் தே.மு.தி.க. புறக்கணிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு விஜயகாந்த் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தலைமை நிலைய செயலாளர் ப ார்த்தசாரதி எம்.எல்.ஏ., இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.








34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பேஸ்புக் மூலம் சேர்ந்தார்





லண்டனை சேர்ந்த சூசன் ஆர்டிரான் என்பவர் தனது கணவர் சிட் மற்றும் 4 குழந்தைகளுடன் கடந்த 1975ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் குடியேறி வசித்து வந்தார். 1978ம் ஆண்டில் ஒரு கார் விபத்தில் சூசனுக்கு மனநிலை பாதித்தது. அதன்� �ின், அவர் தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டார். நோய் முற்றி தன்னை பற்றியே அறியாதவராக சூசன் இருந்த நிலையில், அவரை ஒரு சாலையோரமாக விட்டுவிட்டு கணவர் வீடு திரும்பினார். பின்னர், குழந்தைகளுடன் சிட் மீண்டும் லண்டனுக்கு சென்று குடியேறினார். சூசன் காணாமல் போய் விட்டதாக, சூசனின் குடும்பத்தினரிடம் சிட் கூறி விட்டார்.

இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் சூசனை காப்பாற்றிய ஒரு குடும்பத்தினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, சூசனின் சகோதரர் மற்றும் சகோதரிகள் அவரை கண்டுபிடிப்பதற்காக ரெட்கிராஸ் உள்பட பல அமைப்புகளின் மூலம் முயற்சித்தனர். அதற்கு எந்த பலனும் இல்லாததால் அந்த முயற்சியை கைவிட்டனர்.
தற்போது 61வயதை எட்டி விட்ட சூசன் பூரண குணம் அடைந்து பழைய நினைவுகள் திரும்பி விட்டது. அவர் தனது குழந்தைகளை பார்க்க விரும்பினார். அவருக்கு உதவிய குடும்பத்தினர் அதற்காக இங்கிலாந்தில் தெரிந்தவர்கள் மூலம் தேடிப் பார்த்தனர்.

அதில் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், பேஸ்புக்கில் சூசன் படத்தை போட்டு, அவரத ு கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் விவரங்களை குறிப்பிட்டனர். இதை பார்த்த சூசனின் சகோதரிகள் டான், ஜூலி, கெயில், சகோதரர் கோலின் ஆகியோர் உடனடியாக சூசனை தொடர்பு கொண்டு பேசினர். தனது குழந்தைகளை சூசன் மறக்காமல் பெயர் சொல்லி கூப்பிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது லண்டனுக்க� �� வரவிருக்கும் சூசனுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.