Monday, 16 July 2012

சஞ்சய் தத்துடன் நடிக்க மறுத்து விட்டேன் -திரிஷா





விக்ரம், திரிஷா ஜோடி� �ாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் "சாமி". இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் இந்தியில் "ரீமேக்" செய்கிறார். விக்ரம் கேரக்டரில் சஞ்சய்தத் நடிக்கிறார். கதாநாயகியாக திரிஷாவையே நடிக்க வைக்க ரவிக்குமார் விரும்பினார். இதற்காக திரிஷாவை அணுகி கால்ஷீட் கேட்டார். ஆனால் சஞ்சய்தத்துடன் நடிக்க அவர் மறுத்து விட்டார்.

திரிஷா ஏற்கனவே "காட்டா மீட்டா" இந்திப் படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இந� ��தி ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார். காட்டா மீட்டா படம் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. எனவே தான் இந்தி சாமியில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்தியில் தயாராகும் சாமி படத்தில் கதாநாயகியாக நடிக்ககேட்டு என்னை அணுகியதும், நான் மறுத்ததும் உண்மைதான். நான் 3 தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்� �ேன். வேறு படங்களில் நடிப்பதற்கு என்னிடம் கால்ஷீட் இல்லை. இந்தி சாமி படத்தில் நடிப்பதற்காக ஆகஸ்டு மாதம் வரை என்னிடம் தேதி ஒதுக்கித் தருமாறு கேட்டனர். எனவேதான் மறுத்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.







ரிலீசுக்கு தயாராகும் ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா படங்கள்





ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா படங்கள் டிசம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக ரிலீசாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் பெரிய நடிகர� �ன் படம் ஒன்று வரப்போகிறது. இதனால் மாதந்தோறும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது.

அஜித்தின் பில்லா-2 படம் இந்த மாதம் வந்தது. கமலின் விஸ்வரூபம் பட வேலைகள் முடிந்துள்ளன. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இப்படத்தை ரிலீசுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கிறது. ஓரிரு வாரங்களில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்தி பதிப்பிலும் வி ஸ்வரூபம் வருகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாற்றான் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சூர்யா பிறந்தநாள் தினமாக வருகிற 23-ந்தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 14-ந்தேதி படம் ரிலீசாகும் என தெர� ��கிறது. இந்த படத்தில் சூர்யாக ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. இப்படம் செப்டம்பர் 28-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கலைப்புலி தாணு இயக்கத்தில் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படம் நவம்பர் 13-ந்தேதி தீபாவளி பண்டிகை அன்று ரிலீசாகிறது. இப்படத்துக்கு ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. அதை படமாக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

ரஜினியின் கோச்சடையான் படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு தற்போது டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ரஜினி பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஜப்பானில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது.







மாற்றான்... சுட்ட படமா, சுடாத படமா...?





ஹாலிவுட்டுக� ��கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர ் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அத ை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.

அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பி யுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன் றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.

அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.

ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.
அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்க� ��ப் போவோம்...!
மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், � �ப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.

இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்ற� �லும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.
.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.

ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.
மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.

ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத ்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!







இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை இயக்கும் பிரபுதேவா





பிரபுதேவா, டான்ஸர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். இப்போது புதியதாக மற்றொரு அவதாரம் எடுக்கி� ��ார். ஆம், விளம்பர படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான விராட் கோலியை வைத்து ஒரு ஆண்களுக்கான புதிய காலணி விளம்பரத்தை இயக்கவிருக்கிறார்.

பிரபுதேவா தமிழில் இருந்து தற்போது இந்திக்கு போய் இயக்குனராக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறார். இவர் இந்தியில் இயக்கிய 'ரவுடி ரத்தோர்', 'வாண்டட்' இரண்டு படங்களும் மெகா ஹிட்டானது.

முதன்முதலாக விளம்பர படம் எடுக்கும் பிரபுதேவா இதுகுறித்து கூறும்போதுஇது என்னுடைய முதல் விளம்பர படம். ஒரு நிமிடத்திற்குள் ஒரு கதையை சொல்லிவிட வேண்டும் என்பது ஒரு ப� ��து அனுபவமாக இருந்தது. விராட் கோலியுடன் பணிபுரிந்தது ஜாலியாக இருந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரபுதேவா தற்போது இந்தியில் இன்னும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் கிரிஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளனர்.







குன்னூரில் முகாமிட்டுள்ள இலங்கை ராணுவ அதிகாரிகள்-போராட்டத்துக்கு அழைப்பு!





சென்னை தாம்பரத்தில் இலங்கை விமானப் படையினருக்கு பயிற்சி தந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள்ளாகவே 4 இலங்கை ராண� ��வ அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு வந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,

இலங்கை, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 அதிகாரிகள் பயிற்சிக்காக தம ிழ்நாட்டின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமுக்கு வந்துள்ளனர்.

ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இனவெறி ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி தரக்கூடாது என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் தாம்பரத்தில் பயிற்சி பெற்ற சிங்கள அதிகாரிகள், தமிழகத்தின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குன்னூரில் மீண்டும் பயிற்சிக்காக மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. சிங்கள படையினரை குன்னூரில் இருந்து வெளியேற்றாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.