Tuesday, 10 July 2012

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்





நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முத� ��நிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி உதவி ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்காக குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் இந்த தேர்வை பட்டதாரி கள் எழுதலாம். குரூப்-2 பதவிகளில் இந்த ஆண்டுக்குரிய 3,631 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
 
தற்போது ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால், பட்டதாரிகள் முன்பு விண்ணப்பம் வாங்குவதற்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கும் தபால் அலுவலகங்களுக்கும், பின்னர் அதை பூர்த்திசெய்து அனுப்புவதற்கு தபால் அலுவலகங்களுக்கும் அலைய வேண்டியது இருந்தது.
 
ஆன்லைனில் விண்ணப்பமுறையால், இன்டர� �நெட் வசதியுடன் வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்தவாறும், கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் அருகே உள்ள நெட் கபேக்களுக்கும் சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.
 
இதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட தபால் � �லுவலகங்களிலும், இந்தியன் வங்கி கிளைகளிலும் அமைக்கப்பட்டு இருக்கும் இலவச மையங்களிலும் விண்ணப்பிக்கிறார்கள்.
 
குரூப்-2 தேர்வுக்கு இதுவரை 3 1/2 லட்சம் பேர் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பித்து இருப்பதாகவும், தினசரி சராசர ியாக 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வருவதாகவும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் டி.உதயச்சந்திரன் மாலைமலர் நிருபரிடம் நேற்று தெரிவித்தார்.
 
குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும ். இதற்கிடையே, நேற்று முன்தினம் 1,870 காலி இடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வுக்கு ஆண்களும், பெண்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்வு குறித்த அறிவிப்பு டி. என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்ட அடுத்த 2 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்து தள்ளிவிட்டனர்.
 
இந்த நிலையில், நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் வேகத்தைப் பார்த்தால் வி.ஏ.ஓ. தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் வந்துவிடும்போல் தெரிகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். வி.ஏ.ஓ. தேர்வுக்கு குறைந் தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்ற போதிலும், பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும்தான் அதிகளவில் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.







வாஜ்பாயை, விசாரணைக்கு அழைக்கமாட்டோம்:பாராளுமன்ற கூட்டுக்குழு





2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பற்றி பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரித்து வருகிறது. இந்தகுழு விசாரணை நடத்த இருப்பவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் ராணுவ மந்தி ரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.
 
ஆனால் அவர்களை விசாரணைக்கு அழைப்பது இல்லை என்று கூட்டுக்குழு முடிவு செய்து உள்ளது. குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆ� ��ியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் உடல்நலம் குன்றி இருப்பதால் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைக்க மாட்டோம் என்றும் பி.சி.சாக்கோ தெரிவித்தார்.








எந்திரனுக்கு அடுத்து பில்லா-2!





அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2, 2012-ஆம் ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற படம்.  இண்டர்னெட்டில் பில்லா-2 படத்தின் விளம்பரங்கள் இல்லாத இடமே இல்லை. பில்லா-2 படத்தின் இரண்டாவது டிரெய்லரில் வரும் வசனங்கள் தான் இளைஞர்களின் பஞ்ச் டையலாக்.

ஆக்‌ஷனும், ஆக்ரோஷமும் நிறைந்த சூடான டிரெய்லரை பார்த்த ரசிகர்களை குளிர்விக்கும் விதத்தில், பில்லா-2 படத்தின் காலண்டருக்காக எடுத்த நடிகைகளின் ஹாட்டான ஃபோட்டோஷூட் வீடியோவை  வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டார்கள் படக்குழுவினர்.

     
                                     
சமீபத்தில் பில்லா-2 மொபைல் வீடியோகேம் வெளியிட்டார் அந்த படத்தின் ஒரு ஹீரோயின் ப்ரூனா அப்துல்லா. பில்லா-2 படத்தின் பாடல்களின் முன்னோட்டத்தையும் ஒவ்வொன்றாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் படக்குழுவினர், அம ெரிக்காவிலும் பில்லா-2 படத்தின் புரமோஷன்களை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பில்லா-2 ஜூலை 13-ஆம் தேதியன்று 59 ஸ்கிரீன்களில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவின் 34 ஸ்கிரீன்களில் திரையிடப்படுகிறது பில்லா-2. ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு அடுத்து உலகம் முழுவதும் அதிக ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்படும் படம் பில்லா-2 என்பது கு� �ிப்பிடத்தக்கது.








பில்லா-2 படம் வெற்றி பெற திருப்பதி கோவிலில் அஜீத் வழிபாடு





பில்லா-2 படம் வருகிற 13-ந்தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நாளை துவங்குகிறது. படம் வெற்றிபெற அஜீத் திர ுப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். ரஜினி தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அவரை பின்பற்றி அஜீத்தும் திருப்பதிக்கு சென்றுள்ளார்.

சாதாரண இளைஞர் பெரிய தாதாவாக எப்படி மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. வெளிநாநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். பார்வதி ஓமனகுட்டன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்க� ��் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.