Friday, 11 May 2012

பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி




மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படம் சூப்பர் மேன் போன்ற ஒரு கதையமைப்பைக் கொண்டது என்பதால், இரவு நேரத்தில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் இயக்குநர் மிஷ்கின்.

வழக்கமான தன் பாணியை முற்றாக விடுத்து, வித்தியாசமான முறையில் படமாக்கி வருகிறார்.

ஜீவாவுடன் பூஜா ஹெக்டே, நரேன் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் 250 பேர் பங்கேற்று வருகின்றனர்.

ஆரம்பத்தில் திருவல்லிக்கேணியில் க்ளைமாக்ஸின் ஒரு பகுதியைப் படமாக்கிய மிஷ்கின், இப்போது மொத்த குழுவுடன் காரைக்காலுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இங்கும் இரவு நேர ஷூட்டிங்தான். இதுகுறித்து ஜீவா கூறுகையில், "இவ்வளவு பெரிய க்ளைமாக்ஸ் இதுவரை நான் நடித்த படங்களில் வந்ததில்லை. வழக்கம்போல இரவு நேரத்தில்தான் படமாகிறத� ��. படம் வந்தபிறகு இதற்கான காரணம் புரியும்," என்றார்.

யுடிவி நேரடியாக தயாரிக்கும் படங்களில் முகமூடியும் ஒன்று!



நித்தியானந்தா கெடு விவகாரம்! ஜெயேந்திரர் கருத்து கூற மறுப்பு!




மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவும் எத� �ர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், நித்தியானந்தாவை மதுரை இ� �ைய ஆதீனமாக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும். ஆனால் நித்தியானந்தா அவ்வாறு செய்யவில்லை.

மேலும் ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மீகத்துக்கு எதிரானது என்றார்.

இதற்கு பதிலளித்த நித்தியானந்தா இந்த கருத்தை காஞ்சி சங்கராச்சாரியார் 10 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என்று  கெடு' விதித்தார்.

இதுகுறித்து ஜெயேந்திரரின் கருத்துக்களை பெறுவதற்காக திங்கள்கிழமை காலை காஞ்சி சங்கர மடத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்றனர்.

அங்கு பூஜைகளை முடித்து வந்த ஜெயேந்திரர் முன் பத்திரிகையாளர்கள் நின்றனர். இதை பார்த்த ஜெயேந்திரர் தனது வாய் மீது கையை வைத்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்பது போல கூறிவிட்டு, உலக நன்மைக்காக நடைபெறும் சகஸ்கர சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டார்.

அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது ஜெயேந்திரர் மவுனவிரதத்தில் இருக்கிறார். அதனால் இவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.



பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரம் மாற்றப்படும்: கபில் சிபல்




சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 11-ம� �� வகுப்புக்கான பொலிட்டிக்கல் சைன்ஸ் பாடப்பிரிவில் அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரம் இடம் பெற்றுள்ளது. இது பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி ஏற்பட்டது. இந்த சித்திரத்தை வரைந்தவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் பதிலளித்ததாவது:
 
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் அம்பேத்காரின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக வருந்துகிறேன். இந்த பாடப்புத்தகங்கள் 2006- ம் ஆண்டே தயாரித்து பதிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது நான் அமைச்சர் பதவியில் இல்லை. எனினும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
 
இந்த விவகாரம் குறித்து ஏப்ரல் மாதமே எனது கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி. அமைப்பிடம் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.   
 
மனிதவளத்துறையினால் � ��மைக்கப்பட்ட கமிட்டியால் பாடப்புத்தகங்களில் வரும் ஆட்சேபத்திற்குரிய விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் பாடப்புத்தகங்களில் இருந்து அடுத்த வருடம் நீக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இத்தகைய ஆட்சேபத்துக்குரிய விவகாரங்கள் வராமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.



பில்லா-2 பற்றி பார்வதி ஓமனக்குட்டன்!




அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஹீரோயின் உலக அழகியான பார்வதி ஓமனக்குட்டன் இந்த படம் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அளிக்கும் என நம்புகிறார். பார்வதி ஓமனக்குட்டன் அளித்துள்ள பேட்டியில்



அறிமுகமே அஜித்துடன் இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

மிகப்பெரிய பாக்யம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்டுடன் அதுவும் மாஸ் ஹீரோவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் எனது முதல் படமே திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்

அஜித் பற்றிய உங்கள் கருத்து?

மிகவும் எளிமையானவர் அஜித். லொக்கேஷனில் ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன், முதல் கொண்ட� �� ப்ரொடக்‌ஷன் பாய் வரை எல்லோரிடமும் சகஜமாக பழகுவார். கேமரா முன் நாம் ஏதாவது தவறாக செய்தால் பக்குவமாக எப்படி நடிக்க வேண்டும் என்று அறிவுரை கொடுப்பார். அவரோடு ஜோடி சேரும் முன்பு நான் அவர் மனைவியின் தீவிர ரசிகை. இதை நான் சொன்ன போது அவரும்
அப்போது ஷாலி� �ியின் ரசிகராக இருந்தார் என்று தெரியவந்தது. ரசிகராக இருந்து வாழ்க்கைத் துணையாக மாறியதில் அவருக்கு நான் வாழ்த்து சொன்னேன்.

'பில்லா-2' படத்தின் கதை என்ன? உங்கள் கதாபாத்திரம் என்ன?

கதை பற்றி சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். கதையை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அஜித்துக்கு ஜோடியாக படத்தின் கதையை திசைதிருப்பும் கதாபாத்திரத்தில் தான் ஜேஸ்மின் நடிக்கிறார். பில்லா-2, ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக சொல்லுகிறேன்.

ஒரு நடிகையை நிலைநாட்டுவது கவர்ச்சி தான். நீங்கள் கவர்ச்சிக்கு ஏதாவது எல்லை வகுத்துள்ளீர்களா?

பார்வதி ஓமனக்குட்டன் உலக அழகி என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் என்னை அணுகாதீர்கள். கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு கவர்ச்சியை கொடுப்பேன். நடிப்பதற்கு வந்த பிறகு இதிலிருந்து பின்வாங்கமாட்டேன். அப்படி செய்வது நடிகைக்கு அழகல்ல.

சினிமாவில் சாதிக்க நினைப்பது?

மிகச் சிறந்த நடிகை என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். எவ்வளவு கடினமான கதாபாத்திரம் என்றாலும் பார்வதி ஓமனக்குட்டன் வெலுத்துகட்டுவார் என்று எல்லோரும் பெருமிதப்பட வேண்டும். நான் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டு. சிறந்த நடிகையாவதற்கா� �� அயறாது உழைக்கவும் தயாராக உள்ளேன்" என்று கூறினார்.



ஏ. ஆர். ரஹ்மானை மிஞ்சிய இளையராஜா ; நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!!





இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார்.

இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு.

இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் எந்த நிறுவனத்துக்கும் ஆடியோவை விற்கவில்லை கவுதம் மேனன். அநேகமாக ரூ 2.50 கோடிக்கு இந்தப் படத்தின் ஆடியோ விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

கவுதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா பட ஆடியோ ரூ 1.75 கோடிக்கு விற்பனையானது. இதைவிட முக்கால் கோடி அதிக விலைக்கு நீதானே என் பொன்வசந்தம் விற்பனையாகவிருக்கிறது.





2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ. ராசாவின் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு




2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக ்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலை தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.  
 
அவர்களில் ஆ. ராசா தவிர அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டார்கள்.   ஆ. ராசா கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு வரை ஜ� ��மீன் மனு தாக்கல் செய்யாமலே இருந்தார். சில தினங்களுக்கு முன் சித்தார்த் பெகுராவுக்கும் ஆர்.கே.சந்தோலியாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, ராசாவும் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.   
 
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அவருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. மறுப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்த ஜ ாமீன் மனு மீதான விசாரணையை மே 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.



தபால் அலுவலகங்களில் வங்கிகள் தொடங்கப்படும்: கபில் சிபல்




பாராளுமன்ற மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய மனிதவளத்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர� � கபில் சிபல் கூறியதாவது:

இந்தியா 154,688 தபால் அலுவலகங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய தபால் துறையாக உள்ளது. இதில் 25,154 தபால் அலுவலகங்கள் மிதமுள்ளவைகள் கிராம சேவாவின் கீழ் செயல்படுகிறது.

24, 969 தபால் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதில் 19,890 அலுவலகங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராம சேவாவின் கீழ் உள்ள அலுவலகங்கள் விரைவில் கணினிம யமாக்கப்படும். இதுபோன்ற தபால் துறை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக ரூ. 1,877.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தபால் துறை அலுவலகங்களில் ஏ.டி.எம். நிறுவனங்கள் அமைப்பதும் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. விரைவில் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும். மேலும், தபால் அலுவலகத்தை வங்கிகளா� �� மாற்ற ஆகும் செலவு ஒரு வங்கியை தொடங்க ஆகும் செலவில் ஒரு பங்குதான் ஆகும். இதன்மூலம் தபால் துறைகள் வங்கிகளாக செயல்படும். இதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி கோரப்பட்டுள்ளது என கூறினார்.



சினேகாவை இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!(போட்டோக்கள்)



நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்� �ென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர். < /span>

முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.