Saturday, 5 May 2012

மணமகன் வர தாமதம்: மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்




கேரள மாநிலம் காயங்குளம� � பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
 
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை உரிமையாளர் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார்.
 
அங்குள்ள தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூலம் சமரசம் பேசியும், குறிப்பிட்ட நேரத்தில் கமலேஷின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.
 
இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த மாப்பிள்ளை கமலேஷ், குறிப்பிட்ட நேரத்தில் ஊருக்கு வர முடியவில்லை. என்றாலும், சுபமுகூர்த்த நேரத்தை தவறவிட விரும்பாத இரு வீட்டாரும் துணிச்� �லான முடிவை எடுத்தனர்.
 
அதன்படி, கமலேஷின் சகோதரி தகவிதா மணமகன் சார்பில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். திருமண விருந்து முடிந்ததும், புதுப்பெண் சாரி கிரிஷா, மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



மறுபடியும் அமைச்சரவை மாற்றமா? அதிர்ச்சியில் அமைச்சர்கள்




தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்த ுள்ளதாக வெளியாகும் செய்திகளால் பல அமைச்சர்கள் கலக்கமடைந்து போயுள்ளனர்.

அதிமுகவில் சசிகலா, ராவணன் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மட்டும் போயஸ் கார்டன் திரும்பியுள்ளார். அப்போதே அமைச்சரவை மாற்றம் என்று பேச்சு அடிபட் டது. ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக அமைச்சரவையை மாற்றியமைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நடப்புக் கூட்டத்தொடர் மே 10-ந் தேதி முதல் மே 13-ந் தேதிக்குள் முடிவடைய உள்ளது.

கூட்டத்தொடர் முடிந்த கையோடு ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து அமைச்சரவை மாற்ற லிஸ்ட்டை ஜெயலலிதா கொடுப்பார் என்று கூறப்படுகிறது. அனேகமாக பல அமைச்சர்கள் பத வி இழக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் அமைச்சரவை எண்ணிக்கையை 27 ஆகக் குறைத்துக் கொள்ளவும் ஜெயலலிதா திட்டமிட்� �ுள்ளதாகத் தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரைத் தவிர மற்ற அமைச்� ��ர்கள் அனைவருக்குமே கல்தா கொடுத்துவிடுவார் ஜெயலலிதா என்கிறது கோட்டை வட்டாரம். இதனால் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களோ பதவி பறிபோகிறதே என கலங்கிப் போய் கிடக்கின்றனர்.

தற்போது அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றினால் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்படும் 7-வது அமைச்சரவை மாற்றமாக இருக்கும்.



மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை சோதனை ஏன்?: பரபரப்பு தகவல்கள்




மதுரை ஆதீன மடத்தில் இன்� ��ு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
 
மதுரை ஆதீனம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்ட்ட இந்த ஆதீனத்துக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. ஆதீனத்தின் 293-வது ஆதீனம ாக கடந்த வாரம் நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடந்த விழாவில் மதுரை ஆதீனத்துக்கு, நித்யானந்தா தங்க மூலாம் பூசப்பட்ட செங்கோலை பரிசாக வழங்கினார். ஆதீனமும் நித்யானந்தாவுக்கு தங்க கீரிடம் சூட்டினார். இதே போல் பெங்களூரில் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டிக் கொண்ட விழாவிலும் மதுரை ஆ தீனத்துக்கு, நித்யானந்தா தங்க செங்கோல், கீரிடங்களை வழங்கினார்.
 
கடந்த சனிக்கிழமை மதுரை வந்த நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியில் 2 பேரும் அதிகமான விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்திருந்தனர். சித்ரா பவுர்ணமி தினமான இன்று இரவு (5-ந்தேதி) திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு ப ட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் இன்று மதியம் புறப்பட திட்டமிட்டு இருந்தார். இந்த விழாவிலும் தங்க செங்கோல், தங்க கீரிடம், தங்க சிம்மாசனம், பாதுகைகள் ஆகியவற்றை மதுரை ஆதீனத்துக்கு அணிவிக்கப்படும் என நித்யானந்தா அறிவித்து இருந்தார்.
 
அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மதுரை ஆதீனத்துக்கு பல க� �டி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களும் அடிக்கடி உலா வந்தன. மதுரை ஆதீனத்துக்குட்பட்ட சொத்துகளுக்கு வரி செலுத்தாமல் ஆதீனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இந்நிலையில் இன்று காலை 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஆதீனமடத்தில் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் மடத்தின் அனைத்து கதவுகளை உள் புறமாக பூட்டி கொ ண்டு மடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். சோதனையில் அறைகளில் இருந்து பல கோடிகள் மதிப்புள்ள தங்க நகை, பணம் ஆகியவை ஒரே இடத்தில் குவித்து வைத்து அதனை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர்.
 
மேலும் நகை, பணத்துக்கு முறைப்படி வருமானவரி கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆதீனத்தின் சொத்துக்களின் ஆவணங்களை சோதித்து விசாரணை ந� �த்தினர். ஆதீனத்துக்குட்பட்ட சொத்துக்கள், மடத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களின் சம்பளம் ஆகிய விபரங்களை மதுரை ஆதீனத்திடம் கேட்டு பெற்றனர். சமீப காலமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் அதிகளவு ஆபரணங்களை அணிந்து வருகின்றனர். மேலும் மதுரை ஆதீனத்துக்கு பல கோடி ரூபாய் கைமாறி உள்ளதாக என அடிக்கடி வந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக தெரியவ� �்துள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது.
 
ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார்.



லெனினை விஷம் கொடுத்து கொன்றாரா ஸ்டாலின்?




ரசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான ஜோசப் ஸ்டாலின்தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக புதுகதை ஒன்� ��ு கிளம்பி உள்ளது.

கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் புரட்சியை உருவாக்கியவர் விளாடிமிர் லெனின். ரசியாவில் வீரஞ்செறிந்த புரட்சியை நடத்தியவர். ரசிய அதிபராக லெனின் இருந்த காலத்தில் அவருக்குப் பின் அதிபர் பொறுப்பேற்கக் கூடிய வகையில் செல்வாக்குமிக்க மனிதர்களாக இருந்தவர்கள் ஸ்� �ாலின் மற்றும் டிராட்ஸ்கி.

தொடக்க காலத்தில் லெனின், ஸ்டாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்ஸ்கிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்டாலினின் சர்� ��ாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை நீக்கவும் லெனின் முடிவு செய்திருந்ததாகவும் கூறுகிறார் ரசிய வரலாற்று ஆய்வாளர் லெ லுரி.

இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், விஷத்தைக் கொடுத்து லெனினை கொலை செய்ததாகவும் எப்பொழுதுமே தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட ஸ்டாலின் விஷத்தைத்தான் கையிலெடுப்பார் என்று� �் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

இத்தோடு விட்டுவிடாத லுரி, இந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வழி இருக்கிறது.. ஏனெனில் லெனினின் பதப்படுத்தப்பட்ட மூளை இன்றும் மாஸ்கோவில்தானே இருக்கிறது என்றும் ஒ ரே போடாய் போடுகிறார். இதற்கெல்லாம் ஆதாரமாக அவர் பேசுவது லெனினின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்துத்தான்! லெனின் பிரேத பரிசோதனை அறிககையில் மூளை மிகவும் கடினமாகிப் போயிருந்தது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும் இதுவரை எப்படிக் கடினமாகிப் போனது என எவரும் சொல்லவில்லை என்பதாலே மர்மம் நீடிக்கிறது என்றும் லுரி சொல்கிறார்.

புரட்சியாளர்களுக்கு எப்பொழுதும் சகாக்களே சங்கட கர்த்தார்க்கள் என்பதே நிதர்சனம் போல...



நகைகள், பல கோடி ரொக்கத்துக்கு கணக்கு எங்கே? - மதுரை ஆதீனத்திடம் அதிகாரிகள் விசாரணை




மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள நகைகள், தங்க கிரீடங்கள், செங்கோல்கள் மற்றும் ரொக்கப் பணத்துக்கு கணக்கு தருமாறு மதுரை ஆதீனம் அருணகிரியிடம் விசாரணை நடந்து வருகிறது.

மண்டல இணைக் கமிஷனர் தலைமையில் 5 அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது மதுரை ஆதீனம் ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சார்யா மட்டுமே இருந்தார். இளைய ஆதீனம் நித்யானந்தா இல்லை.

நித்யானந்தா பெங்களூர் சென்று விட்டதால், அவரது சீடர்கள் சிலர் மட்டுமே ஆதீன வளாகத்தில் இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள், ஆதீனத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதுபோல வெளியில் இருந்து யாரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டு சோதனை நடத்தினார்கள்.

மதுரை ஆதீனம் 2 மாடி கட்டிடம் மற்றும் வளாகத்தை கொண்டது. அந்த வளாகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று அருணகிரி அனுமதி கொடுத்தார்.

இதையடுத்து ஆதீனம் முழுக்க ஒவ்வொரு அறையாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் 2 குழுவாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

நித்யானந்தா இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. கையில் தங்க செங்கோல் கொடுக்கப்பட்டது. அதுபோல பெரிய ஆதீனமும் தங்க கிரீடம் மற்றும் கையில் தங்க செங்கோலுடன் காணப்பட்டார்.

ஸ்ரீஅருணகிரி ஞானசம்பந்தரும், நித்யானந்தாவும் ஏராளமான தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தனர். அந்த நகைகள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நகைகள் தவிர ஆதீனத்தில் பல கோடி பணம் கையிருப்பு உள்ளது. அந்த பணத்துக்கு முறையாக கணக்கு உள்ளதா? என்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இது தவிர ஏராளமான ஆவணங்கள் க� ��ப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு மதுரை ஆதீனம் சார்பில் முறைப்படி வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? என்று கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.



பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்




அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டு கொல்� �ப்பட்டார். அமெரிக்காவின் நேவிசீல் ராணுவ பிரிவினர் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக முடித்தனர். 

பின்லேடன் உடலை புதைத்தால் அந்த இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நினைவு சின்னம் அமைக்க கூடும் என கருதி அவரது உடலை உறவினர்களிடம் அமெரிக்கா வழங்கவில்லை.   மாறாக போர்க்கப்பலில் உடலை எடுத்து சென்று ஆழ் கடலில் புதைத்து விட்டனர். ஆனால் எந்த கடலில் உடல் புதைக்கப்பட� �டது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சமீபத்தில் பின்லேடன் அடக்கம் செய்யப்பட்ட படம் வெளியிடப்பட்டது. இருந்தாலும் உடல் புதைக்கப்பட்ட கடல் எது என்று கண்டறிய முடிய வில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பில் வார்ரென் என்பவர் பின்லேடன் உடல் அரபிக்கடலில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அருகே 320 கி.மீட்டர் தூரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என � �ூறியுள்ளார்.

ஏனெனில் இவர் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் இருந்து புதையல் வேட்டை நடத்தி வருகிறார். இது குறித்து ஸ்பெயின் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- 

பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்த போட்டோவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வெளியிட்டது. அதை வைத்து பார்க்கும் போது அது அரபிக்கடல் போன்று தெரிகிறது. மேலும் குஜராத் மாநிலம் சூரத் கிழக்கே 320 கி.மீட்டர் ஆழத்தில் அவர் ஜலசமாதி செய்யப்பட்டிருக்கலாம். அவரது உடலையும� �� அது வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் நான் மீட்பேன். அதற்கான நடவடிக்கையை வருகிற ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறேன். இதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும்.

நான் அமெரிக்காவின் தேச பக்தன். பின்லேடன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தெளிவாக காட்டுவதில் ஒபாமா தோல்வி அடைந்தார். எனவேதான் அந்த முயற்சியில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். இப்பணியில் 3 மாதங்கள் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.