Tuesday, 20 March 2012

இடிந்த கரையோரம் இடிந்து போன நம்பிக்கை

 
 

  • உதயகுமார் போராட்ட ஒருங்கிணைப்பாளர் 55
  • சிவசுப்பிரமணியன் போராட்டக்குழு உறுப்பினர் 44
  • ஜெயக்குமார் இடிந்தகரை சர்ச் பாதிரியார் 41
  • ஏ.எஸ்.ரவிபோராட்டக்குழு உறுப்பினர் 33
  • முத்துராஜ் கூடங்குளம் பஞ்.,தலைவர் 33
  • ராஜலிங்கம் பா.ஜ., நிர்வாகி 34
  • மைபா ஜேசுராஜன் சேரன்மகாதேவி பாதிரியார் 22
  • சுசிலன் கூட்டப்புளி பாதிரியார் 4
  • பதேயூஸ்ராஜன் கூடங்குளம் பாதிரியார் 4
  • ரட்சகநாதன் கூத்தன்குழி பாதிரியார் 2
  • இவான் அம்ப்ரோஸ் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் 2
  • சகாயராஜ் இடிந்தகரை போராட்டக்குழு 35
  • பெருமாள்சாமி கூடங்குளம் போராட்டக்குழு 19
  • புஷ்பராயன் கிறிஸ்தவ மக்கள் இயக்கத் தலைவர் 7
  • சகாய இனிதா மீனவர் அணி, இடிந்தகரை 36

இவை எல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா? முதலில் பெயர்,அடுத்து பதவி அடுத்து அவர்கள் மீது இதுவரை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு விபரம்.இதுவரை இவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் இருந்த முதல்வர் ஜெயல்லிதா தற்ப்போது அணூலைக்கு ஆதரவாளராகி விட்டதால் இவர்கள் மீதான வழக்குகள் அடிப்படியில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக,அப்பகுதி மக்களை பயமுறுத்திபொருளாதார சீர்குலைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக, உதயகுமார் குழுவினர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், ஆறு மாதங்களுக்குப் பின், நேற்று முடித்துவைக்கப்பட்டது.தமிழ் நாடு ஜெயலலிதா அரசு இந்த அளவு போராட்டத்தை வளர்த்து வேடிக்கைப்பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்குப்பின் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதுவரை ஜெயலலிதா தங்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று மெத்தனத்திலும்-உற்சாகத்திலும் இருந்த இடிந்தகரை மக்கள் இப்போது இடிந்து போயுள்ளனர். சட்டத்திற்கு எதிராக, நாட்டு நலனுக்கு எதிரான போராட்டத்தில் உதயகுமார் தலைமையிலான குழுவினர், போராட்டம் நடத்தியதாக இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
 
இடிந்தகரை லூர்து ஆலய வளாகத்தில் முகாமிட்டு, அணுஎதிர்ப்பு போராட்டம் நடத்தும் உதயகுமார், தனது சொந்த ஊரான நாகர்கோவிலை விட்டுவிட்டு, இடிந்தகரை மக்களின் பாதுகாப்பில், தற்போது உள்ளார்.
அணுஉலை விஞ்ஞானிகளை வழி மறித்தது, அணுஉலை முன், போலீஸ் உயரதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, அனுமதி வாங்காமல் ஆறு மாத கால போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில், உதயகுமார் மற்றும் அவரது குழுவினர் மீது சுமத்தப்பட்டுள்ளது..
உதயகுமார் குழுவினர் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோர் மீது, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 240 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், இந்திய இறையாண்மை, தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், உதயகுமார், புஷ்பராயன், பாதிரியார் ஜேசுராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகளின் மீது,இனி தமிழக போலீசார் மத்திய அரசின் வழிகாட்டுதலில் நடவடிக்கை மேற்கொள்வர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கடவுசீட்டுகளை, இந்தியக்குடியுரிமை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். கடல்வழியே உதயகுமார் தப்பித்து விடாமல் தடுக்க, கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவ கிராமங்களில் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.
 
உதயகுமாரின் போராட்டத்தால், ஆறு மாதங்களில், தினமும், ஐந்து கோடி ரூபாய் வீதம், 900 கோடி ரூபாய் அணுமின் கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க செய்த போராட்டமாகவே மத்திய அரசு கருதுகிறது. உதயகுமாரை கைது செய்து, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நிரந்தரமாக சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தொடர்பான தகவல்கள்தெரிவிக்கிறது.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களைச் சுற்றி சோதனை சாவடிகள்,சாலையில் தடைகள் அமைக்கப்பட்டு, சோதனை நடந்து வருகிறது.
இன்று இரவு அநேகமாக கைது படலம் ஆரம்பமாகலாம்.ஜெயலலிதா அரசு தங்களுக்கு ஆதரவு தருகிறது என்று இருந்த போராட்டக்குழுவிறகு இது சம்மட்டியடி.இதுவரை தமிழக காவ்ல்துறையும்,வருவாய்துறையும் உதயகுமாருக்கு பாதுகாப்பாகவும்,அவர் கூறியபடி அணு உலைக்கு பணிக்கு சென்றவர்களை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பணிக்கு

செல்லவிடாமல் தடுத்தது.அணு உலை அருகே தடை செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் போராடவும் ,பணிக்கு செல்பவர்களை கண்காணிக்க அறையை அமைக்கவும் பாதுகாப்புக்கொடுத்தது ஆனால் அதை இன்று அவர்களே அகற்றி எறிந்துள்ளனர்.
எல்லாம் நன்மைக்கே.முன்பே ஜெயலலிதா முறையாக நடந்திருந்தால் போராட்டம் இவ்வளவு தீவிரமாக வளர்ந்திருக்காது என்பதுதான் சுற்றியுள்ள இடங்களில் உள்ளவர்கள் கருத்து.
___________________________________________________________________________________________________________
 
 

வென்றது விராத் திட்டம்! * பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி

மிர்புர்:""பெரிய இலக்குகளை விரட்டும் போது கைவசம் விக்கெட்டுகள் இருந்தால், எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும். இந்த திட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுத்தி, வெற்றி பெற்றோம்,'' என, இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான கட்டாயம் வெல்ல வேண்டிய முக்கிய லீக் போட்டியில், விராத் கோஹ்லி 148 பந்துகளில் 183 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:
பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த 2, 3 போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடவில்லை. இது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. இம்முறை எப்படியும் நன்கு விளையாட வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன்.
பொதுவாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பது எப்போதும் கடும் நெருக்கடியானது. தவிர, எல்லோரது கண்களும் இப்போட்டியின் மீதே இருந்தது. இந்நிலையில் பேட்டிங்கின் போது அதிக பதட்டம் இருந்தது. மற்றபடி, எவ்வித நெருக்கடியும் இல்லை என்றும் கூற முடியாது.
விக்கெட் முக்கியம்:
ஹோபர்ட்டில் 133 ரன்கள் எடுத்ததை, இந்த போட்டியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் சமமல்ல என்பது தான் உண்மை. ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டி, எங்களுக்கு மிகவும் "ஸ்பெஷலானது'. அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவது என்பது மிக முக்கியமானது. இப்போது எனது விக்கெட்டின் முக்கியத்துவத்தை நன்கு தெரிந்து கொண்டேன்.
சரியான திட்டம்:
இரண்டாவது பந்தில் விக்கெட் விழுந்து இருந்ததால், நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைத்து விளையாட திட்டமிட்டோம். 300 அல்லது அதற்கு மேல் எந்த இலக்கைத் துரத்தும் போதும், கடைசி நேரத்தில் அதிக விக்கெட்டுகள் இருந்தால், எதிரணிக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும். இதை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தினோம். அணி வெற்றி பெறும் வரை களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தோம். இதற்கேற்ப, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் விளையாடினோம். கடைசியில் வெற்றி கிடைத்தது.
போட்டிக்கு இடையே "ஸ்கோர்போர்டை' பார்த்த போது, இரட்டை சதம் அடிப்பது குறித்து லேசான எண்ணம் தோன்றியது. இது சில விநாடிகளே நீடித்தது. இதன் பின், அணிக்கு வெற்றி தேடித்தருவது தான் முக்கியம். இதுதான் நமது வேலை என, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதன் பின் பந்துகளை அடித்து நொறுக்கினேன்.
பெரும்பாலும் 40 அல்லது 42 ஓவர்களுக்குள் அவுட்டாகி விடுவேன். சதம் அடித்த பின் பெரிய அளவில் ரன்கள் சேர்த்தது இல்லை. இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில், சற்று கூடுதல் நேரம் நிலைத்து விளையாட வேண்டும் என தீர்மானித்து இருந்தேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிக விரைவாக 11 சதம் அடித்து விட்டதால், எவ்வித லட்சியத்தையும் அடையும் எண்ணம் எல்லாம் இல்லை. ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும் போதும் அணிக்கு சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்த வேண்டும். இது தான் எனது முதல் லட்சியம்.
இவ்வாறு விராத் கோஹ்லி தெரிவித்தார்

அதிர்ஷ்டம் கிடைக்குமா
சமீபத்திய முத்தரப்பு தொடரில், இலங்கைக்கு எதிராக 321 ரன்கள் என்ற இலக்கை, 40 ஓவரில் எட்டினால் தான், பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்கலாம் என்ற நிலையில், கோஹ்லி 133 ரன்கள் விளாசினார். கடைசியில் ஆஸ்திரேலியாவை இலங்கை வெல்ல, இந்தியா வெளியேற நேர்ந்தது.
நேற்று முன்தினம், 330 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானை வீழ்த்தினால், பைனல் வாய்ப்பு குறித்து பார்க்கலாம் என்ற நிலையில், கோஹ்லி (183) சதம் கைகொடுத்தது. இன்று இலங்கை வென்றால் மட்டுமே, பைனல் வாய்ப்பு என்ற நிலையில், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வேண்டும்.

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை அமீருக்குத் தெரியுமா?

 

சில சமயம் சினிமாக்காரர்கள் அடிக்கிற பல்டியைப்பார்த்து, அரசியல்வாதிகளே வெட்கித்தலை குனிவதுண்டு.அந்த வகையில் இயக்குனர் அமீர் அடித்திருக்கும் ஒரு பல்டி சரித்திரச்சிறப்பு வாய்ந்தது.கடந்த வாரம் ஃபெப்ஸி ஊழியர்கள் சிலரைக்கைக்குள் போட்டுக்கொண்டு தயாரிப்பாளர் ஞானவேலின்' அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பை நிறுத்திய செய்தியை ஹல்லோதமிழ்சினிமாவில் தான் முதல் முதலாக எழுதியிருந்தோம்.

அதை ஒட்டி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொடர்ந்து அமீருக்கு குடைச்சல் தந்துகொண்டே இருந்தார்கள். இன்று ஒரு நாள் அடையாள படப்பிடிப்பு நிறுத்தமும், அமீரும் ஃபெப்ஸி ஊழியர்களும், தயாரிப்பாளர் ஞானவேலுவுக்கு எதிராக நடந்துகொண்டதை ஒட்டித்தான்.இந்நிலையில் தனக்கு எதிரான விமரிசனக்குரல்கள் கவுன்சிலில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரவே,அதை திசை திருப்ப எதையாவது செய்யவேண்டுமே என்ற முடிவில், அசிஸ்டெண்ட் டைரக்டர்களின் ஆபத்பாந்தவனாக, நேற்று திடீரென்று அவதாரம் எடுத்தார் அமீர்.

ஃபெப்ஸி தொழிலாளர்களின் கோரிக்கைகளை விசாரித்துவரும் தொழிலாளர் ஆணையத்தின் முன் அனைத்து உதவி இயக்குனர்களையும் அணிதிரளும்படி அமீர் செய்தி அனுப்ப, பாவம் உதவி இயக்குனர்கள் அமீரின் சூழ்ச்சி புரியாமல் 'ஆஹா, அமீருக்கு நம்ம மேல அக்கறை வந்துருச்சி' என்ற படி அணிதிரள ஆரம்பித்திருக்கிறார்கள்.

தன் சொந்த அரசியலுக்காக, வாழ்க்கையில் நொந்த உதவி இயக்குனர்களப்பயன்படுத்த அமீர் நினைப்பதைப் பார்க்கும்போது, தலைப்பில் உள்ள அமீர் படப்பாடல்தான் நினைவுக்கு வந்து தொலைகிறது.