விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Thursday, 23 February 2012
வெள்ளைக்காரன் காலத்துல நல்லா இருந்தோமே..ஆர்.எஸ்.எஸ்.புலம்பல்!
ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்
தோனி Vs சேவக் நிறுத்துவார்களா சண்டையை?
பசங்க பாண்டியராஜின் அடுத்த படத்தில் சீயான்

'மெரினா' படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் பசங்க பாண்டிராஜ்.
சமீபத்தில் வெளியான பாண்டிராஜின் 'மெரினா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை 'பசங்க புரடக்ஷன்ஸ்' தயாரிப்பில் வந்தது. மெரினாவில் 'வணக்கம், வாழவைக்கும் சென்னை..' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இச்சமயத்தில் விக்ரமுக்கும், இயக்குனர் பாண்டிராஜீக்கும் ஒரு நல்ல நட்பு உருவானது. இதைதொடர்ந்து பாண்டிராஜ், விக்ரமை வைத்து புது படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
தற்போது விக்ரம் டைரக்டர் விஜயின் "தாண்டவம்" படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷீட்டிங் டெல்லி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் வேலைகள் முடிவடையும் நிலையில், விக்ரம் அடுத்த கட்ட படத்திற்கு தயாராகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மூன்று நாள்களுக்குள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கருணை மனு விளக்கம் கோரல்
தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களின் நிலவரம் குறித்த விவரங்களை மூன்று நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மறு ஆய்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றக் கோரும் மனு மீது பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தேவேந்திரநாத் புல்லரின் மறுஆய்வு வழக்கு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, சுதான்ஷு ஜோதி முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்குப் பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சித்தார்த் தவே, ""கருணை மனுக்களின் விவரங்களை அளிக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அதற்கு இன்னும் பதில் வரவில்லை´´ என்று கூறினார்.
கருணை மனுக்கள் தாக்கல் செய்து 8 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை கடந்த பிறகு அவற்றின் மீது இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. அதனாலும் காலதாமதம் ஏற்படுவதாக கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
கருணை மனுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அனைத்து மாநில உள்துறைச் செயலர்கள் மூன்று நாள்களுக்குள் தபால், தொலைபேசி அல்லது பிரதிநிதிகள் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து, புல்லர் தொடர்பான மறு ஆய்வு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 1ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மறுஆய்வு மனு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டு நிராகரித்தார். இதையடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது.
"இந்த வழக்கில், நீதிபதி, வழக்குரைஞர்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் மொழி பேசுபவர்கள். அதனால், வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும்´´ என்று கோரி மூப்பனார் பேரவைத் தலைவர் எல்.கே. வெங்கட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
எல்.கே. வெங்கட் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் ஆஜராகி வருகிறார்கள்.
வெங்கட் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நந்தகுமார், புல்லர் வழக்குடன் தமது கட்சிக்காரரின் மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், புல்லர் வழக்கில் முடிவு செய்த பிறகே, வெங்கட் மனு மீது வேறு திகதியில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அடுத்த நமீதா ஆவதற்கான அனைத்து சிறப்பம்சங்களையும், கொண்ட சஞ்சானா!
ரேணிகுண்டா புகழ் சஞ்சனாவுக்கு சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தங்கிவிட விருப்பம்தான்… ! ஆனால் தான் வளர்க்கும் பாசமான முயல்கள் என்னாவது.. ?அதனால் வாரத்துக்கொருமுறை மும்பை ஓடிவிடுகிறார்.வளர்ப்பு பிராணியாக அதாவது வீட்டிலேயே அதற்கென அறை ஒதுக்கி மெத்தை போட்டு அழகாக வளர்கிறார். என்ன முயல் மீது வித்தியாச பாசமென்றால்… மென்மையான மனதுடையவை அவை. நாய்களுக்கு கூட அதற்கென ஒரு குணம் உண்டு.. ஆனால் முயல் அற்புதமான பிராணி..
ரொம்ப அமைதியாக இருக்கும்..எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அதைப்பார்த்த நொடியில் யோகா செய்ததுபோல் ஒரு நிம்மதி பரவும்.. என்ன கவனித்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்.. எனக்கு அவைகளை கவனிப்பதில் தான் சந்தோசமே .. இப்போது நான்கு குட்டிகள் வேறு போட்டிருக்கிறது என்று துள்ளிக் குதிக்கிறார்.. சரி என்ன படங்கள் கைவசம் என்றால்..
ரேணிகுண்டாவில் அவ்வளவு அழுத்தமான ரோல் கிடைத்தது.. இயக்குனர் பன்னீர் செல்வம் என்னை அவ்வளவு மெனக்கிட்டு மாற்றினார். அதேபோல் அழுத்தமான பாத்திரங்களில் நடிக்கவே காத்திருந்தேன். இடையில் கேட்டுக்கொண்ட நண்பர்களுக்காக கோ மறுபடியும் ஒரு காதல், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு போன்ற படங்களில் எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடிக் கொடுத்திருக்கிறேன்.
சினிமாவில் நண்பர்கள் முக்கியம். அதன்பிறகு கிடைத்தார் இயக்குனர் கணேசன் காமராஜ். யாருக்குத் தெரியும் படத்தில் ஹீரோயினாக அதிர்ந்து பயந்து பயப்படவைக்கிற நடிப்பைக் கொட்டியிருக்கேன். அடுத்து அதியமான் சார் இயக்கும் தப்புத் தாளங்கள் படத்தில் ஒரு கிளாமர் ஹீரோயின்… சி எஸ் அமுதன் சார் இயக்கும் இரண்டாவது படம் படத்திலும் நடிக்கிறேன்.
இப்போதான் ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்.. இருந்தாலும் அவார்டுக்குரிய படங்களில் நடிக்க பெரிய ஆசை இருக்கு.. பணம் பற்றி கவலையில்லை.. ஒரு சிலருக்கு உதவியாக இருக்கவும், என் தேவைக்கு பணம் இருந்தால் போதும்.. மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள்… நல்ல நடிகை என்ற பெயர், புகழ் தான் வேண்டும்.. ஹோம்லி, கிளாமர் எது உங்க ரூட்? ரெண்டுமே பண்ணனும்.
எதையும் விட்டு வைக்கக்கூடாது. சவாலா எடுத்து நடிக்கணும். ஷோ கேஸ் மாதிரி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும்.. இல்லைன்னா, கிரங்கடிக்கணும் பாஸ்.. நமக்கு ரெண்டு ரூட்டுமே ஓகே தான் என்கிறார். உங்களை அடுத்த நமீதா என்கிறார்களே கோடம்பாகத்தில்..
சிம்ரன், நமீதா இந்த இரண்டு பேருமே கவர்ச்சியில் தங்களுகென்று தனி முத்திரை பதித்து விட்டார்கள். அதேபோல நானும் தரமான கவச்சியில் கலக்கவே விரும்புகிறேன். தரமான கவர்ச்சியென்றால் என கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அது ரசிகர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
தப்பாக அவர்களை தூண்டக்கூடாது. என்னை உதாரணமாக வைத்து நாளை வரும் புதிய நடிகையிடம் நீங்கள் அடுத்த சஞ்சனாவா என்று நீங்கள் கேட்க வேண்டும். குறைந்த பட்சம் அதற்காகவாவது நான் உழைக்க வேண்டும் அல்லவா? சஞ்சானாவிடமிருந்து அசத்தலான பதில் வருகிறது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் பொலீசாரிடம் சிக்கினர்

சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங், விபசார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சாண்டி யாகோவுக்கு சினிமா படப் பிடிப்பு இல்லாத நாட்களில் துணை நடிகைகளை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது.
ஒரு பெண்ணிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். வாடிக்கையாளர் போல் பேசினர். மறுமுனையில் பேசிய பெண் தன்னிடம் அழகான இளம் துணை நடிகைள் இருவர் இருப்பதாகவும் துணை நடிகைக்கு ரூ. 25 ஆயிரம், அவரது தங்கைக்கு ரூ. 15 ஆயிரம் என ரூ. 40 ஆயிரம் பணத்துடன் குறிப்பிட இடத்திற்கு வந்தால் அழகான துணை நடிகைகளை அழைத்து சென்று உல்லாசமாக இருக்கலாம் என கூறினார்.
இதற்கு சம்மதம் தெரிவித்து வாடிக்கையாளர் போல் பேசிய விபசார தடுப்பு பிரிவு போலீசாரை கிண்டி ரெயில் நிலையம் அருகில் பணத்துடன் வருமாறு கூறி வரவழைத்தார்.
மாறு வேடத்தில் இருந்த போலீசாரிடம் மாடர்ன் உடையில் இருந்த பெண்களை காட்டி பணம் வாங்க முற்பட்டபோது அப்பெண் விபசாரம் செய்வதை உறுதி செய்த விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அப் பெண்ணை கைது செய்து அங்கு அவருடன் விபசாரத்தில் ஈடுபட வைத்திருந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.
விசாரணையில் விபசாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சோபனா (46) என்றும் இவர் சில திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாகவும் தற்போது வெளிவர இருக்கும் ஒரு சினிமாவில் நடித்திருப்பதாகவும் மறைந்த பழம் பெரும் நடிகர் ராமதாசின் நெருங்கிய உறவினர் என்பதையும் தெரிவித்தார்.
மேலும் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்த சகோதரிகள் இருவரை வைத்து படப்பிடிப்பு இல்லாத நாட்களில் விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.மீட்கப்பட்ட அப்பெண்கள் சில படங்களில் துணை நடிகைகளாக நடித்து இருக்கிறார்கள்.
இதே போன்று சென்னை சூளைமேடு பகுதியில் சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஜெயராஜ், மோசஸ் என்பவரையும், சாந்தி என்ற பெண்ணையும் கைது செய்தனர். அவர்களுடன் 4 இளம்பெண்களையும் போலீசார் மீட்டனர். சாந்தி சில திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருப்பது விசாரணையில் தெரிந்தது.
வித்யா பாலனின் ஆபாச குலியல் வீடீயோ - இணைய பரபரப்பு

நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதனையே ஒரு வீடியோவாக எடுத்துவிட்டார்கள். இந்த வீடியோ இப்பொழுது You Tube இல் வெளியாகியுள்ளது. You Tube இல் வெளியிட்டால் சொல்லவா வேண்டும்..? செக்கனில் இணையப்பரப்பில் இவர் வீடியோ பிரபல்யமாகிவிட்டது

