Wednesday, 22 February 2012

ஆர்யா, சந்தானம் கூட்டு மீண்டும் ஆரம்பம்

 

பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற டெல்லி பெல்லி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யா, சந்தானம் இணைகின்றனர். பாலிவுட்டில் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள நகைச்சுவைப் படமான டெல்லி பெல்லி, இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

டெல்லி பெல்லி படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள். டெல்லி பெல்லி படம் குறித்து பல்வேறு தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன. அனைத்து தகவல்களையும் யு.டிவி நிறுவனம் மறுத்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் டெல்லி பெல்லி குறித்து செய்திகள் கோடம்பாக்கத்தை வலம் வர ஆரம்பித்துள்ளன. கொலிவுட்டின் பாஸ் கூட்டணி ஆர்யா, சந்தானம் நடிக்க கண்ணன் டெல்லி பெல்லியை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தினைத் தொடர்ந்து இப்படத்தில் ஆர்யா நடிப்பார் என தெரிகிறது.

இயக்குனர் ரோஹித் ஷெட்டி அசின்-தீபிகா கரீனா மீது படு கோபத்தில்!

 

ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக வதந்தி பரப்புவதாக அசின், தீபிகா, கரீனா மீது இயக்குனர் தாக்கி உள்ளார். பாலிவுட் இயக்குனர்களில் கோபப்பட்டு பேசாத இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இப்போது அவர் 3 முன்னணி நடிகைகளை கடுங்கோபத்துடன் தாக்கி பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. அடுத்து ஷாருக்கான் நடிக்கும் Ôசென்னை எக்ஸ்பிரஸ்Õ என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பதுபோல் கரீனாகபூர், அசின், தீபிகா படுகோன் ஆகிய 3 நடிகைகள் பில்டப் செய்து வருகின்றனர். இது மும்பை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளியாகிறது. இதைபார்த்து கோபம் அடைந்த ரோஹித் கூறியதாவது:

அடிக்கடி எனது பேட்டிகளில் கரீனா எனக்கு பிடித்தமான நடிகை என்று கூறி இருக்கிறேன். அவரை புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் இதுவரை அவரை நான் அணுகி அதுபற்றி பேசவில்லை. அதற்குள் இப்படத்தில் நடிக்கிறேன் என்றும், நடிக்கவில்லை என்றும் அவர் அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறார். 5 மாதத்துக்கு முன்பு அவரை சந்தித்தேன். சமீபத்தில் எங்கும் சந்திக்கவில்லை. ஏப்ரல் மாதம்தான் ஹீரோயினை முடிவு செய்வேன். அதேபோல் அசினிடம் இதுபற்றி கேட்கப்படுகிறது. அவரும் அவ்வப்போது ஒரு கருத்து தெரிவிக்கிறார். தற்போது 'போல் பச்சான்' பட ஷூட்டிங்கில இருக்கிறேன். இது முடிந்தபிறகுதான் அடுத்த பட வேலை தொடங்குவேன். யாரோ ஒருவர் போன் செய்து தீபிகாதான் சென்னை எக்ஸ்பிரஸில் நடிக்கிறாரேமே என்கிறார். இதுபோன்ற சர்க்கஸ் வித்தைகளை நிறுத்திக்கொள்ளுங்கள். அழகான, திறமையான பிரபல நடிகை ஒருவரைத்தான் இப்படத்துக்கு தேர்வு செயதேன். ஆனால் இதுவரை அவர் எந்த நடிகை என்பதை முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரோஹித் கூறினார்

ப்ளு பிகினியில் லட்சுமி ராய் - ரசிகர்கள் கொண்டாடம்



நடிகை ல்க்ஷ்மி ராய் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிநாயகடு படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கப் போகிறார்.

தமிழில் நடிக்கையில் போர்த்திக் கொண்டும், தெலுங்கு படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டுவதும் நடிகைகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு லக்ஷ்மி ராயும் விதிவிலக்கல்ல. தமிழில் காஞ்சனா, மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லக்ஷ்மி ராய்க்கு கிடைத்துள்ளது. இதனால் அவர் படுகுஷியாகக் காணப்படுகிறார். பரச்சூரி முரளி எழுதி, இயக்கும் இந்த படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சி உள்ளதாம். தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவும், பிரியாமணியும் ஏற்கனவே பிகினியில் வந்து டோலிவுட் ரசிகர்களை அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாகவே லக்ஷ்மி ராய் கவர்ச்சிகரமாகத்தான் வருவார், இப்போது 'ப்ளூ' பிகினியில் வரப் போவதால் ரசிகர்கள் பாடு என்னாகப் போகிறதோ என்ற பெரும் 'பரபரப்பு' ஏற்பட்டுள்ளது.

அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகளின் பெயர் அபிலாஷா



அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகளுக்கு அபிலாஷா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போதைக்கு குழந்தைக்கு செல்லமாக "பேட்டி பி" என்ற பெயர் வைத்துள்ளனர். மேலும் குழந்தைக்கு "ஏ" வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்றும், இதற்காக ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரை சொல்லுங்கள் என்று அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் தங்களது ட்விட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து லட்சக்கணக்கான பெயர்கள் வந்து குவிந்தன.

இந்நிலையில் மூன்று மாத தேடலுக்கு பின்னர் ஒரு நல்ல பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர் அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியினர். குழந்தைக்கு அபிலாஷா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது அமிதாப், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் வீடு திரும்பிய பின்னர், குழந்தையின் பெயர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

நடிகர்களுக்கு சவால் விடும் சேரன்



பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா 21.02.12 காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் திரு சண்முக சுந்தரம், T.K.ராமமூர்த்தி, T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ், திருமதி P.சுசீலா ஆகியோர் கலந்துகொண்டனர். திரு ராம்குமர் கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.



நிகழ்ச்சியில் சேரன் பேசும் போது " இன்றைய நடிகர்கள் பில்லா, மாப்பிள்ளை என்று பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள். அவர்களுக்கு தில் இருந்தால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தையாவது ரீமேக் பண்ணி நடிக்க முடியுமா? என்று சவால் விட்டார். மேலும் அவர் " சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு நிகரான படம். ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் எடுக்கிறோம் என்று சொல்கிறார்களே, சிவாஜி படம் அளவிற்கு யாராலாவது முயற்சியாவது செய்ய முடியுமா. சிவாஜி சிகிரெட் பிடிக்கும் போது விடும் புகைக் கூட ஒரு விதமான நடிப்பாகத் தான் இருக்கும்.

படங்களில் அவருடைய அழகை பிரதிபலிக்க போட்ட மேக்கப் எந்த ஹாலிவுட் கலைஞரால் போடப்பட்டது. எல்லாமே இங்கிருப்பவர்கள் செய்தது தான்.நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன். இளம் வயதில் எல்லோரும் சிகிரெட் பிடிக்கத்தான் தீப்பெட்டி வைத்திருப்பார்கள். ஆனால் நான் என் தலைவன் சிவாஜி படத்திற்கு உள்ளங்கையில் சூடம் ஏற்றுவதற்காகத் தான் தீப்பெட்டி வைத்திருப்பேன்.

சிவாஜிக்கு சினிமாவில் மட்டும் தான் நடிக்கத் தெரியும். நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அதனால் தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை" என்று கூறினார் சேரன்.

புது படங்களுக்கு நோ சொல்லும் அஞ்சலி

 


தற்போது இருக்கும் தமிழ் கதாநாயகிகளில், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தும் அஞ்சலிக்கு இந்த வருடம் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது அஞ்சலி சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கரிகாலன் படத்திலும், சுந்தர் சி.படம் இயக்கும் படத்திலும், மற்றும் முருதாஸ் தயாரிக்க படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தான் நடித்து வரும் படங்களுக்கு சரியாக கால்ஷிட் கொடுத்து அனைத்து இயக்குனர்களின் பாராட்டுகளை வாங்கியுள்ளாராம் அஞ்சலி. இந்த படங்கள் முடியும் வரை, யார் கதை சொல்ல வந்தாலும் பிஸி என சொல்லிவிடுகிறாராம் அஞ்சலி.

மணந்தால் ஆஞ்சநேயன்...! அனன்யா உறுதி!

 
 
ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியும் என்றும், அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் நடிகை அனன்யா. நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனன்யா. மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் இந்த திருமண நிச்சயம் நடந்தது.
 
இந்நிலையில் ஆஞ்‌சநேயனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து, அதை மறைத்துவிட்டதாக அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதனால் இவர்களது திருமணத்திற்கு சிக்கல் உருவானது. இதனிடையே தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது அனன்யாவுக்கு தெரியும் என்றும், அவர் தான் அவரது தந்தையிடம் மறைத்துவிட்டார் என்று ஆஞ்சநேயன் கூறியிருந்தார். மேலும் அனன்யாவுக்கு, ஆஞ்சநேயனை திருமணம் செய்ய விருப்பம் தான் என்றும், அனன்யா பெற்றோருக்குத்தான் இதில் விருப்பம் இல்லை என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் ஆஞ்‌சநேயனை மணப்பதில் உறுதியாக இருக்கிறார் அனன்யா. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய திருமணம் பற்றி தேவையில்லாத வதந்திகள் பரவி வருகிறது. அதைப்பற்றி கவலைப்பட போவது இல்லை, இது எங்களுடைய உறவை வலுப்படுத்தும். உறுதியாக ஆஞ்சநேயனைத்தான் திருமணம் செய்வேன். அது விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்..




நாடு முழுவதும் இன்று சினிமா காட்சிகள் ரத்து!

 
 
 
மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் திரையுலகம் சார்பில் இன்று (23ம்தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. இதையொட்டி சினிமா சூட்டிங்குகள் மற்றும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகத்துக்கான சேவை வரியை 30 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் உள்ள திரையுலக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டிரைக்கில் ஈடுபட திரையுலக சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
 
இதுகுறித்து இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லம்பா கூறுகையில், திரையுலகம் ஏற்கனவே ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஏறக்குறைய 95 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. 5 சதவீத படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. சினிமாவுக்கு ஏற்கனவே பொழுதுபோக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்திய திரையுலக சம்மேளனம் ஒரு முழுமையான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. இதற்காக, இன்று(நாளை -23ம்தேதி) நாடு தழுவிய அளவில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும். ஸ்டூடியோக்கள் மூடப்படும். படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். திரையுலகம் சம்பந்தப்பட்ட அத்தனை அமைப்புகளும் நாளை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன, என்றார்.



பிரபல 20 சமூக வலைதளங்கள், தங்களின் வலை பதிவுகளை பகிர

 
 
 
நம் வலைபூக்களில் எழுதும் பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலை தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் நம் பதிவுகளை வெளியிடுவதால் நம் பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் நம் பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.
 
இதனால் தங்களின் வலைபூக்கு வரும் வாசர்கர்கள் அதிகரிக்கலாம். இந்த பதிவில் நான் தங்களிடம் 20 பிரபல சமூக வலைதளங்களை பற்றி தான் கூறயிருக்கிறேன். நாம் அறிந்ததுலாம்FACEBOOK, TWITTER மேலும் சென்றால் DIGG, மற்றும் STUMBLEUPON.
பிரபல 20 சமூக வலைதளங்கள்

20*LINK GO GO
 
 

இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.
 

நாய்க்கு நூடுல்ஸை தீத்திவிடும் பறவை! வினோதமான காணொளி இணைப்பு

 
ஒரு வேளை அதைப் புழுக்கள் என்று அந்தப் பறவை நினைத்திருக்கலாம். இந்த இரண்டு கால் பறவை தனது நான்கு கால் நண்பனுக்கு உதவி புரியும் விதத்தைப் பாருங்கள்.
 
சமையல் கட்டின் மேலிருக்கும் பறவை நூடுல்ஸை ஒவ்வொன்றாக எடுத்து தனது சிறிய அலகால் நாய்க்கு ஊட்டி விடுகின்றது.
 
நாயும் ஒன்றைச் சாப்பிட்டு விட்டு அடுத்தற்காக காத்து நிற்கின்றது.
 
'Bird Feeds Dog Noodles' என்கிற தலைப்பிட்டு வீடியோ Youtube இல் பதிவிடப்பட்டுள்ளது.
 
இதுவரை குறித்த வீடியோவை 240,000 க்கு மேற்பட்ட மக்கள் பார்த்து இரசித்துள்ளனர்.
 

வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான வீடியோ காட்சி

 
 
 
பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி கொள்ளை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வங்கி கொள்ளையன் பற்றி 1 நிமிடம் ஓடக்கூடிய பரபரப்பான வீடியோவை வெளியிட்டார்.
 
அந்த வீடியோவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீசை மற்றும் குறுந்தாடியுடன் காட்சி அளிக்கிறார். இளம் சிவப்பு, கறுப்பு வெள்ளை கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்துள்ள அவர் ஜீன்ஸ் பேண்டு போட்டுள்ளார். அவரது கையில் பேனா போன்ற தோற்றத்தில் ஒரு பொருளும் உள்ளது. வங்கியினுள் அங்கும், இங்கும் சென்றவாறு நாலா புறமும் அவர் நோட்டமிடு வது தெளிவாக தெரிகிறது.
 
தென்சென்னை பகுதியில் உள்ள வங்கி கேமிரா ஒன்றில் இருந்து இந்த காட்சியை போலீசார் பதிவு செய்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை யும், கொள்ளையனின் போட் டோக்களையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி களுக்கு போலீஸ் கமிஷனர் திரிபாதி வழங்கினார். பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
சென்னையில் மொத்தம் 1,300 வங்கிகள் உள்ளன. இவற்றில் சுமார் 400 வங்கிகளில் தான் காமிரா பொருத்தப்படாமல் உள் ளது. பெருங்குடி வங்கி கொள்ளை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் உள்ள வங்கிகளில் கேமிராக்களை ஆய்வு செய்தோம். அப்போது வீடியோவில் காணப்படும் வாலிபர் பல்வேறு வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது.
 
இதையடுத்து அந்த வாலிபரின் போட்டோவை பிரிண்ட் எடுத்து பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி ஊழியர்களிடம் காட்டினோம். அவர்கள் கொள்ளையர்களில் ஒருவன் இதுபோன்ற தோற்றத்தில் இருந்ததாக தெரிவித்தார் கள். இதனால் இந்த வாலிபர் மீது வலுவான சந்தேகம் ஏற்பட்டது.
 
இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. இந்த போட்டோக்களை சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வெளி மாநிலங்களுக்கும் இந்த போட்டோக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த வாலிபர் பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் நாங்கள் அறிவித்த கட்டண மில்லா 24 மணி நேர தொலைபேசி எண்களில் தகவல்களை தெரிவிக்கலாம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின் போது, கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சேஷசாயி, நல்லசிவம் (உளவுப்பிரிவு), செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.