Tuesday, 21 February 2012

நடிகைக்கு லவ் டாச்சர் கொடுக்கும் சந்தானம்




நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார். அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார். பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன். இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார். சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.

நடிகை கார்த்திகா ரகசிய திருமணம்?

 



நடிகை கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

தூத்துக்குடி படத்தில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. அவரும், ஹரியும் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு மிகவும் பிரபலம். அதைத் தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்தார். வாய்ப்பு குறைய ஆரம்பித்தவுடன் புதுக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு பேக்கப் செய்தார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அவரது அம்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் அவர் தற்போது கணவர் வீட்டில் வசித்து வருகிறாராம். இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் கேட்டதற்கு, நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்துள்ளது என்றனர்.

கார்த்திகா மீண்டும் சினிமாப் பக்கம் போவதை விரும்பாத அவரது குடும்பத்தார் அவருக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியுமோ அதுவரை நடிப்பேன் - ஸ்ரேயா




'தினம் ஒரு புது நடிகைகள் வராங்க... மார்க்கெட் சரியாம என்ன பண்ணும்' என்கிறார் ஸ்ரேயா.

எனக்கு 20 உனக்கு 18 மற்றும் மழை படங்களின் தோல்வியால் தமிழின் ராசியில்லாத நடிகையாக இருந்த ஸ்ரேயா, ரஜினியுடன் சிவாஜியில் நடித்த பிறகு உச்சத்துக்குப் போனார்.

கோடிகளில் சம்பளம், தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் குவியும் வாய்ப்புகள் என பயங்கர பிஸி.

ஆனால் வடிவேலுவுடன் ஒரு குத்தாட்டம் போட ஒப்பந்தமானார். உடனே அஜீத் இவரை தனது படத்திலிருந்து விலக்கினார். அதிலிருந்து இறங்குமுகம்தான் .

இன்றைக்கு தமிழில் படமில்லை அம்மணிக்கு. இந்திப் படம் இருக்கு, ஆங்கிலப் படம் இருக்கு என்மறு சொல்லி வருகிறார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட்டில் ஆட்டம் போடுவதில்தான் அவர் பொழுது போகிறது.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால், "வாய்ப்பில்லை என்று நான் கவலைப்படப் போவதில்லை. தினமும் நிறைய புது நடிகைகள் வந்து கொண்டிருந்தால் பழைய நடிகைகள் வாய்ப்பு குறையாமல் என்ன செய்யும்...

அதற்காக புது நடிகைகளை வரக்கூடாது என்றா சொல்ல முடியும்... நான் சினிமாவில் அறிமுகமான போது நிறைய சீனியர் நடிகைகள் என்னை வரவேற்றனர். அதே மாதிரி தான் நானும் வரவேற்கிறேன். நிறைய படங்களில் நடித்து விட்டேன்.

இப்போதும் நிறைய படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியுமோ அதுவரை நடிப்பேன்," என்கிறார்.

லஞ்ச, ஊழல் ஒழிய என்ன வழி அப்துல் கலாம் யோசனை

 
 
 
லஞ்ச ஊழல் ஒழிப்பு, அவரவர் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும்; குழந்தைகள், பெற்றோரிடம் இதை வலியுறுத்த வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பேசினார்.
 
கோவை, காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில், டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்ற, சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் கருணாகரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேச பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோவை மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிட்டல் (கே.எம்.சி.எச்.,) மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி வரவேற்றார். கே.எம்.சி.எச்., சேர்மன் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி தலைமை வகித்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பேசியதாவது:
 
மாணவர்கள், வாழ்க்கையில் மூன்று பேரை, முக்கியமாக பின்பற்ற வேண்டும். தாய், தந்தை மற்றும் ஆரம்பக் கல்வி அளிக்கும் ஆசிரியர். தாய், தந்தையர், ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர், ஒழுக்கத்தைப் போதிப்பவராக இருக்க வேண்டும். அறிவே, மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். அறிவால், எதையும் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். என்னாவாக விரும்புகிறோம் என நினைக்கிறோமோ, அதை அடையும் வல்லமை படைத்தது. தடைகளை எல்லாம், உடைக்கக்கூடிய ஆற்றல் பெற்றது, அறிவு.இந்தியா ஆற்றல் மிகுந்த நாடாக மாற வேண்டும் என்றால், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைய வேண்டும். தூய்மையான குடிநீர், சரிசம மின்சக்தி கிடைக்க வேண்டும். இந்தியாவை மாற்ற, அனைவரும் உழைக்க வேண்டும். விவசாயம், தொழில்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டும். சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்க அனைவரும் உழைக்க வேண்டும். வறுமை, நோய் இல்லாத கிராமங்கள் உருவாக வேண்டும்.ஒவ்வொரு மாணவருக்கும் தலைமைப் பண்பு அவசியம். தொழில் நுட்பங்கள் நிறைந்த உலகில், சுகாதாரம் மிகவும் அவசியம். அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
 
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, அப்துல் கலாம் பேசியதாவது:
 
நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க, ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தைகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை, ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி, அவரது தவறை உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளையும், சமுதாயத்தில் ஊழல் செய்வோரின் நிலையையும் எடுத்துக் கூற வேண்டும். ஊழல் செய்து வரும் பணத்தை வாங்க மறுத்தாலே, ஒரு குடும்பத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது. 40 கோடி மாணவர்கள் உள்ள இந்த நாட்டில், இவ்வாறு அனைவரும் கூறினாலே, பெருமளவு லஞ்ச ஊழல் மறைந்து விடும்.இவ்வாறு அப்துல் கலாம் பதிலளித்தார்.



குழந்தையை திருடி சென்ற சிறுத்தையை தேடும் காவல் துறையினர்

 

உத்தர்க்காண்ட் மாநிலத்தில் வீட்டுத்திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தையை சிறுத்தை கவ்விக்கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை தேடும் பணியினை வனத்துறையின் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தர்க்காண்ட் மாநிலம் டெஹரிகர்வால் மாவட்டத்தில் பஹாலிங்கானா பகுதியைச் சேர்ந்த ஜோதிர்குமாரி வயது 4. இவர் சம்பத்தன்று தனது வீட்டு திண்ணையில் விளையாடி கொண்டிருந்தார்.

நேற்று கிராமப்பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஜோதிர்குமாரியை, கழுத்துப்பகுதியை பிடித்து கவ்விச்சென்றது. இதனை பார்த்த அவரது தாய், பாட்டி ஆகியோர் அலறியடித்து கூச்சல்போட்டனர். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் வனப்பகுதியில் மறைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் பொலிசார் நேற்று மாலை வரை குழந்தையினை தேடினர்.

இந்நிலையில் வனப்பகுதியில் குழந்தை கிடைத்ததாகவும், அவரது உடல்மீட்கப்பட்டு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் குடும்பத்தினருக்க ரூ. 1 லட்சம் உத்தர்க்காண்ட் அரசு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி மாணவியின் காதலால் விபரீதம் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

 

கல்லூரி மாணவியின் காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அம்மா, மகன், மகள் என 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ளது கூடல்நகர். கடற்கரையையொட்டி உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). இவரது மனைவி இந்திராகாந்தி(50). இவர்களது மகன்கள் குணசேகர்(27), முத்துகிருஷ்ணன்(24), ராமகிருஷ்ணன்(22). மகள்கள் விஜி என்ற லதா(20), ரேணுகா(18). யாருக்கும் திருமணம் ஆகவில்லை. கடந்த 4 ஆண்டுக்கு முன் கோவை மாவட்டம் உடுமலை சென்று அங்கு மளிகைகடை ஆரம்பித்தனர். ஒட்டுமொத்த குடும்பமே ஊடுமலையில் இருந்தபோதிலும் ராமச்சந்திரன் மட்டும் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார். இதற்கிடையில் கல்லூரியில் படித்து வந்த விஜிக்கு தந்தையின் உறவினர் மகனுடன் காதல் ஏற்பட்டது. இது வீட்டுக்கு தெரியவரவே, அவர்கள் உறவு பையன்தானே பேசி முடித்து விடலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் காதலனின் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் தட்டிக் கழித்து வந்தனர். இதனால் ராமச்சந்திரனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. தங்கையின் காதல் விவகாரத்தால் மனமுடைந்த குணசேகர் 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை அருகே காட்டுப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து மகள் விஜியை அழைத்துக்கொண்டு இந்திராகாந்தி ஊருக்கு வந்துவிட்டார். உடன்குடியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோர்ஸ்சில் விஜி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் அவரது தாய் 'உன் காதல் விவகாரத்தால்தான் அண்ணனும் தற்கொலை செய்தான். உன்னால் தான் எல்லா பிரச்னையும் வருகிறது' என்று அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் விஜி மனமுடைந்தார். தாயிடம் எதும் பேசாமல் கடைக்கு சென்றுவிட்டார். அங்கு யாரும் இல்லாதநேரம் பார்த்து விஷம் குடித்து இறந்தார். தகவல் அறிந்து உடுமலையில் உள்ள மகன்கள், மகள் மற்றும் தந்தை ஆகியோர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தனர். விஜியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இந்நிலையில் அன்று நள்ளிரவு, இந்திராகாந்தி, ரேணுகாதேவியை அழைத்துக் கொண்டு இயற்கை உபாதையை கழிக்க கடற்கரைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. நேற்று காலை வீட்டில் உள்ளவர்கள் கண்விழித்து பார்த்தபோது தாய், மகளை காணாது திடுக்கிட்டனர். இதைத்தொடர்ந்து மகன் முத்துக்கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அங்கு ரேணுகா மற்றும் இந்திராகாந்தியின் உடல்கள் ஒதுங்கிக் கிடந்தன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. காதல் விவகாரத்தால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல .... ! எப்போதும் சின்ன பொண்ணுதான்!

 
 
நான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த நேரத்தில் தேவையில்லாமல் எனக்கு திருமணம் என்றெல்லாம் எழுதலாமா, உண்மைய சொன்னா இன்னும் வயசுக்கு கூட வரேல நான்! என்று சூடாகக் கேட்டுள்ளார் தமன்னா.
 
தமன்னாவுக்கும் இன்னொரு நடிகருக்கும் காதல் என்றும், தமன்னா திருமணத்துக்குத் தயாராவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
அவர் தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த தமிழ்ப்பட வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
 
இந்த நிலையில், அஜய் தேவ்கனுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறியிருக்கிறார் தமன்னா. எனவே திருமண செய்தியில் எதுவும் உண்மை இருக்குமோ என்ற கேள்வியை அவரிடமே கேட்டனர் நிருபர்கள்.
 
இதற்கு பதிலளித்த தமன்னா, "தெலுங்கில் மூன்று படங்களை நான் முடிக்க வேண்டி உள்ளது. மூன்றுமே பெரிய படங்கள். அதனால்தான் வேறு வாய்ப்புகளில் கவனம் செலுத்தவில்லை. அடுத்து நான் தமிழில் ஒரு படம் ஒப்புக்கொள்ளவிருக்கிறேன். அதனால்தான் இந்திப் பட வாய்ப்பையே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
 
அடிக்கடி என் திருமணம் எப்போது என மீடியா கேட்டு வருகிறது. என் திருமணத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு நன்றி. ஆனால் நான் சின்னப் பொண்ணு. இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் திருமணம் பற்றி எழுத ஒன்றுமே இல்லையே," என்றார்.

தமிழ் யுவதியை கூட்டாக கற்பழித்துக் கொன்ற கருணாவின் சகாக்கள்! விக்கிலீக்ஸ்


மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர்.

தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைத்து உள்ளன.

தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இவர்களில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டாக கற்பழித்து விட்டு கொலை செய்து உள்ளனர். ஆண் ஊழியர்களில் ஒரு தொகையினரை கொன்று புதைகுழி தோன்றி விட்டு சுட்டுக் கொன்று அப்புதைகுழிகளுக்குள் சடலங்களை போட்டு உள்ளனர் என்று உள்ளது.