Friday, 17 February 2012

போன வாரம் ஆறு… இந்த வாரம் அஞ்சு!

 
 
இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள் திரையைத் தொடுகின்றன.போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் தோணிக்கு நல்ல பெயர்.
இந்தவாரம் முப்பொழுதும் உன் கற்பனைகள்,காதலில் சொதப்புவது எப்படி?, உடும்பன்,காட்டுப்புலி மற்றும் அம்புலி என 5 படங்கள்.இவற்றில் முப்பொழுதும் உன் கற்பனைகள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.
காதலில் சொதப்புவது எப்படி படம் தமிழ் – தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான்.
சில நெருக்கடிகளைத் தாண்டி உடும்பன் படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜூன் நடிப்பில் வரும் காட்டுப் புலியும் ஆக்ஷன் த்ரில்லர்தான். அம்புலி ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி.
இவற்றோடு, கவுதம் மேனனின் ஏக் தீவானா தா (விண்ணைத் தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்!
ஆங்கிலப்படம் தி வுமன் இன் பிளாக், ரவி தேஜாவின் தெலுங்குப் படம் நிப்பு போன்றவையும் இன்றுதான் ரிலீஸ்.

ரஜினியுடன் நடிக்காதது ஏன்? – கத்ரீனா விளக்கம்

 
 
ரஜினியுடன் கோச்சடையானில் நடிக்க முடியாதது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் அவரும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வராமலா போய்விடும் என்கிறார் கத்ரீனா கைஃப்.கோச்சடையானில் ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப்தான் முதலில் அறிவிக்கப்பட்டார். தனது கால்ஷீட்களை அட்ஜஸ்ட் செய்து தருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் பின்னர் அவருக்குப் பதிலி தீபிகா படுகோன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. கத்ரீனா விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து கத்ரீனா பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "கோச்சடையானுக்கு20 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் என்றார் சௌந்தர்யா. அதற்காக எனது மற்ற பட ஷூட்டிங்குகளை எந்த அளவு அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்று பார்த்தேன். அடுத்து நான் ஷாரூக்கான் படத்தில் நடிக்கிறேன். அந்தப் படம் காரணமாக அடுத்த 10 மாதங்கள் எங்கும் நகர முடியாத நிலை. உலகின் வேறு வேறு பகுதியில் இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் நடக்கும் நிலையில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
கோச்சடையான் உயர்ந்த தொழில்நுட்பம் நிறைந்த படம் வேறு. எனவேதான் நடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்து வரும் படமொன்றில் நான் ரஜினி சாருக்கு ஜோடியாக நடிப்பேன்," என்றார்.

பயிற்சிக்கு இந்திய வீரர்கள் NO

 

இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஓட்டல் அறையில் "ரெஸ்ட்' எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், 2 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றனர்.
 
இப்போது முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் துவங்கி 64 நாட்கள் ஆனநிலையில், 22 நாட்கள் போட்டியில் பங்கேற்றனர்.
 
போக்குவரத்துக்கு 10, பயிற்சியில் 16 நாட்கள் செலவிட்டனர். 15 நாட்கள் ஓய்வில் இருந்தனர். நேற்று 16வது நாளாக முழு ஓய்வில் இருந்தனர்.
 
பெரும்பாலான வீரர்கள் தங்கள் அறைகளில், "வீடியோ கேம்ஸ்' விளையாடி பொழுது போக்கினர். வேறு சிலர் தங்கள் வீடுகளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.
 
 
எதுவும் தெரியாது:
 
இதுகுறித்து விராத் கோஹ்லி கூறுகையில்,""நான் "டிவி' பார்ப்பதில்லை. செய்திகள் கேட்பதில்லை. தோனி சொன்னதுக்கு ஏற்ப, கடந்த ஒரு மாதமாக எந்த பத்திரிகையும் தொடவில்லை. இந்தியாவில் இருந்து என்ன செய்திகள் வருகின்றன என்றும் தெரிந்து கொள்வதில்லை. இதனால் தற்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது,'' என்றார்.
 
 
தோனி ஆதரவு:
 
வீரர்கள் ஓய்வு குறித்து அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" எங்களது பயிற்சிகள் நீண்ட நேரம் நடக்கும். குறைந்தது நான்கு மணிநேரங்கள் செலவிடுவோம். இதனால் தான் இன்று பயிற்சி செய்யவில்லை,'' என்றார்.
 
வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாததால், இவர்களை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
 
அதிக வித்தியாசம்:
 
அதேநேரம் இன்று போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் ஹசி, பீட்டர் பாரஸ்ட், வார்னர், மெக்கே ஆகியோர், நேற்று முன்தினம் சிறுவர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பாண்டிங் உள்ளிட்ட சிலர் ரசிர்களுக்காக சமையலில் ஈடுபட்டனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வீரர்கள், ரசிகர்கள் இடையே மோதல் வராது.
 
பொதுவாக இந்திய அணியினர் "டாஸ்' போடுவதற்கு அரைமணி நேரம் முன்னதாகத்தான் மைதானத்துக்கு வருவர். நமது வீரர்கள் வரும் போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

முன்னணி ஹீரோக்களின் தூக்கத்தைக் கெடுத்த அரவான் நாயகி

 

அரவான் பட நாயகி அர்ச்சனா கவியை தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலரும் விரும்புகிறார்களாம். இந்த தகவலை அர்ச்சனா கவியே வெளியிட்டுள்ளார். டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரவான் படத்தில் தன்ஷிகாவுடன் இன்னொரு நாயகியாக நடித்திருப்பவர் புதுமுக நடிகை அர்ச்சனா கவி.

அரவான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அர்ச்சனாவை பல முன்னணி இயக்குனர்களும், முன்னணி ஹீரோக்களும் விரும்பி தங்களது படத்தில் நடிக்கும்படி அழைத்திருக்கிறார்களாம்.

இதுபற்றி அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில், அரவான் சூட்டிங் முடிந்தவுடனேயே நான் கேரளாவுக்கு வந்து விட்டேன். படத்தின் ரிலீசுக்குப் பின்புதான் சென்னைக்கு வருவேன். தமிழில் பல முன்னணி இயக்குநர்கள் பேசினார்கள். இப்போதைக்கு நடிக்க மாட்டேன். அரவான் படத்தைப் பார்த்து விட்டு பேசுங்கள் என்று சொல்லி விட்டேன்.

இன்னொரு விஷயம் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். விஜய், விக்ரம் போன்ற மல்டி ஸ்டார்களின் படங்களில் கூட நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, என்று கூறியிருக்கிறார்.

நைட் கிளப் சென்ற பெண் 5 நபர்களால் காரில் வைத்து கதற கதற கற்பழிப்பு!!

 


கொல்கத்தாவில் 30 வயதுடையை பெண் 5 நபர்களால் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3வது நபரை அப்பெண் பேஸ்புக் மூலம் அடையாளம் காட்டியுள்ளாராம்.
பிப்ரவரி 4ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக தற்போது 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பெண் போலீஸாரிடம் கூறுகையில், பார்க் தெருவில் உள்ள ஒரு நைட் கிளப்புக்கு வெளியே டாக்சிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தனது காரில் அந்தப் பக்கமாக வந்தார். எனக்கு லிப்ட் கொடுப்பதாக அவர் கூறினார். அவரை நைட் கிளப்பில் வைத்து நான் பார்த்து பரிச்சயமாகியிருந்ததால் தயக்கம் காட்டாமல் ஏறிக் கொண்டேன்.

முதலில் காரில் 2 பேர் இருந்தனர். ஆனால் நான் காரின் பின் சீட்டில் ஏறியதும் திமுதிமுவென மேலும் 3 பேர் காருக்குள் புகுந்து ஏறிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் என்னைத் தாக்கினார். மற்றவர்கள் என்னை, அடுத்தடுத்து பலாத்காரம் செய்தனர்.

நான் கத்த முயன்றபோது என்னை ஒருவன் தாக்கி விட்டான். மேலும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டினான். பின்னர் துப்பாக்கி முனையில் என்னை ஐவரும் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் என்னை காரை விட்டு இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றனர் என்றார்.

சம்பவத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக உடனடியாக காவல் நிலையத்தை அணுகவில்லை என்று கூறும் அப்பெண் பிப்ரவரி 9ம் தேதி புகார் கொடுத்தார்.

காவல் நிலையத்திற்கு அன்று அவர் போனபோது போலீஸார் அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நைட் கிளப்புக்குப் போனால் இப்படித்தான் நடக்கும் என்று போலீஸார் கிண்டல் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அப்பெண்ணுக்கு தற்போது மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது. ஆனால் பலாத்காரம் நடந்து இத்தனை நாட்களாகி விட்டதால் தேவையான ஆதாரங்களை சேகரிப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பேஸ்புக்கில் பார்த்து அடையாளம் காட்டியுள்ளார் இப்பெண். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ஜனவரி 1ம் தேதி முதலே இந்தியாவில் இல்லை, வெளிநாடு போய் விட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அதற்கான ஆதாரத்தையும் போலீஸாரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர்.

இதனால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுடன், இப்பெண்ணையும் தீவிரமாக விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

அந்த விளம்பரமா ? சிங்கம் சரிப்பட்டு வராது , தனுஷை பிடித்த விளம்பர நிறுவனம்!

 

விளம்பரப்படமா, வேணாம்ப்பா என்று கட் அண்டு ரைட்டாக சொல்லி வருகிறவர் அஜீத் மட்டுமே. மற்றபடி கோடம்பாக்கத்தை பொருத்தவரை அடகுக்கடை விளம்பரத்திலிருந்து ஆணிக்கடை விளம்பரம் வரைக்கும் பேசி பேசியே துட்டு பார்த்து வருகிறார்கள் நம்ம ஊரு ராசாக்கள்.

லேட்டஸ்ட்டாக இந்த இன்ப குளத்தில் நீச்சலடித்து கோடிகளுக்கு குறி வைத்திருக்கிறார் தனுஷும். வேஷ்டி விளம்பரத்தில் நடிக்கணும் என்று சில கம்பெனிகள் அழைத்தபோதெல்லாம், ஏன்ப்பா... அது என் இடுப்புல நிக்கும்னு நம்பிக்கை வேற இருக்கா உங்களுக்கெல்லாம்? என்று கேட்டு வேஷ்டி கோஷ்டியை விரட்டியடித்தவர் தனுஷ்.

இதுபோல நாளொரு விளம்பரத்தையும் பொழுதொரு கோடியையும் அலட்சியப்படுத்திய தனுஷ், வெகுநாள் யோசனைக்கு பின் ஒரு எண்ணை விளம்பரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். வேடிக்கை என்னவென்றால் இந்த எண்ணை விளம்பரத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் சூர்யா.

என்ன காரணத்தாலோ இதில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாம் அந்த நிறுவனம். கைக்கு வந்த கோடிகளை லவட்டிக் கொண்டாரே என்று லேசாக சீறுகிறதாம் சிங்கம்.

இதுவரை வெளிவராத வித்யாபாலனின் Hot Video

 


இதுவரை வெளிவராத வித்யாபாலனின் Hot Video

15th February 2012 11.48PM
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள்
இவரை எவ்வாறு புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதனையே ஒரு வீடியோவாக எடுத்துவிட்டார்கள்.
இந்த வீடியோ இப்பொழுது You Tube இல் வெளியாகியுள்ளது.
 
 
 
You Tube இல் வெளியிட்டால் சொல்லவா வேண்டும்..? செக்கனில் இணையப்பரப்பில் இவர் வீடியோ பிரபல்யமாகிவிட்டது
 

மேக்அப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை - த்ரிஷா

 


எனது அழகை மேக்கப் மூலம் மிகைப்படுத்தி காட்ட எனக்கு விருப்பம் இல்லை, என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷாவுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அம்மணிக்கு வயதாகி விட்டதால் வாய்ப்புகள் குறைந்து விட்டதாக வெளியான செய்தியை த்ரிஷா ஏற்கனவே மறுத்திருந்தார். த்ரிஷாவின் போட்டி நடிகைகளான அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்டோருக்கு தெலுங்கு திரையுலகில் நிறைய வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதனால் தனது தோற்றத்தில் சிறு மாற்றங்களை செய்திருக்கும் த்ரிஷா, மேக்கப் போடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், மேக்கப் போட்டு அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் எனக்கு ஆர்வம், விருப்பம் இல்லை. இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு தரும். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். கண்களில் மட்டும் மேக்கப் போடுகிறேன். ஆடைகளிலும் எனக்கு பொருத்தமானவற்றையே தேர்வு செய்து அணிகிறேன், என்று கூறியுள்ளார்.

அனுஷ்கா,ரிச்சா,ஜெனிலியாவை காதலிக்கும் தனுஷ்

 


ரஜினி, ஐஸ்வர்யா, அனுஷ்கா, ரிச்சா, ஜெனிலியாவை மறக்க முடியாது என்றார் தனுஷ்.இன்று காதலர் தினம்.

இதையொட்டி தனுஷ் தனக்கு பிடித்தமானவர்கள் பற்றி கூறியது:

சினிமாவில் என்னுடன் ஜோடியாக நடித்த சிலரின் கதாபாத்திரங்களை இன்றும் காதலிக்கிறேன். அதுவொரு கனா காலம் படத்தில் பிரியாமணி ஏற்ற துளசி, மயக்கம் என்ன படத்தில் ரிச்சா ஏற்ற யாமினியை மறக்க முடியாது. அனுஷ்கா எனது ரோல் மாடல்.

வாழ்வில் என்ன வருகிறதோ அப்படியே ஏற்றுக்கொள்பவர். எனக்கு பொருத்தமான ஜோடி ஜெனிலியா. தோற்றம், பாடி லாங்கு வேஜ் எல்லாமே எங்களுக்கு ஒரே பாணியில் இருக்கும். சிம்புவுக்கும் எனக்கும் பகைபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

அவருடன் எந்த பிரச்னையும் இல்லை. இருவரும் சந்திக்கும்போது 'ஹாய்' சொல்லிக்கொள்வோம். என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் சமமான புரிதல் இருக்கிறது. எந்த வதந்தியும் எங்களை பாதிக்காது. இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் என் அண்ணன் செல்வராகவன்.

அவர்தான் எனது குரு. நான் மிகவும் நேசிப்பவர் ரஜினி. அவர் உடல் நலமில்லாதபோது என்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பெரும்பாலான நேரத்தை அவருடனே கழித்தேன். காதலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்,

தனித்தன்மையை தக்க வைக்க இடம் தர வேண்டும், உங்களை நேசிப்பதைவிட நீங்கள் அதிகம் நேசிக்க வேண்டும். 4 சுவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை இருவருக்குள் ரகசியம் காக்க வேண்டும். இருவரது பிரச்னைக்குள் 3வது நபரை தலையிடவிடக்கூடாது.

மகிழ்ச்சியில் மைனா -

 


தப்படிக்கிற மகராசன், கூடவே மப்படிச்சுட்டும் வந்த மாதிரி தாறுமாறாக சத்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். இந்த சத்தம் நடிகை அமலாபால் குறித்து என்பதுதான் ஆம்புலன்சில் ஏற்ற வேண்டிய அவசரச் செய்தி.

இவர் நடித்து வெளியான படங்களில் மைனாவை தவிர ஒரு படமும் வியாபார ரீதியாக வெற்றியடைந்த படங்கள் இல்லை. அதுமட்டுமில்லை, தமிழ் தவிர்த்த பிற மொழிகளில் கூட அமலாவின் ராசி, ஆசிட் வீச்சாகதான் இருக்கிறது என்கிறார்கள் இந்த சப்த சிகாமணிகள். இந்த வில்லங்க பேச்சு அமலாவின் மார்க்கெட்டுக்கு வலுவான சறுக்கலை ஏற்படுத்தும் என்பதை மட்டும் முன் கூட்டியே கணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

இவ்வளவு பதற்றத்திலும் அவர் நம்பிக் கொண்டிருப்பது 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தைதான். அதற்கேற்றார் போல முன் கூட்டியே படத்தை பார்த்த சில விஐபிகள் 'ஷ்யூர் ஹிட்' என்று பாராட்டுரைகளை அள்ளிவீச, அமலாவின் மனசு ஜில்லாகிக் கிடக்கிறது.

காதல் வலையில் த்ரிஷா

 


தெலுங்கு நடிகர் ராணாவை திரிஷா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.இதற்கு பதில் அளித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

நான் நடிகையாக இருப்பதால் என்னை பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. ராணாவை நான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர். ராணாவும் நானும் நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.

திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூற மாட்டேன். முதலில் எனக்கு மாப்பிள்ளையாக வருவதற்கு தகுதியானவரை நான் சந்திக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட நபரை நான் சந்திக்கவில்லை. இப்போது நான் தனிமையில் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு நிறைய தோழிகள் உள்ளனர்.

சினிமாவில் இரு நடிகைகள் நண்பர்களாக இருப்பது கடினம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். நானும் பழைய நடிகை ராதா மகளும் தற்போது நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். என்னுடன் பள்ளி காலத்தில் பழகிய தோழிகளுடனும் தற்போது நெருக்கமான நட்பு வைத்துள்ளேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

22 Feb ஆனந்த விகடன் டவுன்லோட் செய்ய

 
 

இந்த வார ஆனந்த விகடன் விளம்பர பிரச்சனை இல்லாமல் வேகமாக டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


 
22-2-2012 ஆனந்த விகடன்


எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கள் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன் தாரிக்


Karnan Movie Stills

 
Karnan is a 1963 Tamil Block Buster Movie, Directed by B. Ramakrishnaiah and Panthulu. Starring Sivaji Ganesan, N.T. Rama Rao, Savitri, Devika, Ashokan and R. Muthuraman in Lead Roles.


 
 
 
 
 
 

ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான் பரபரப்பு தகவல்

 
 
ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா. இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.
 
ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.
 
காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அனைவரையும் அதிரவைத்த வினோத உணவுப்பரிமாற்றம் (படங்கள்)

 

ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு பல விதமாக உணவுகளை பரிமாறி மகிழ்வார்கள். ஆனால் காதலர் தினத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வினோதமான முறையில் உணவு பரிமாறி மகிழ்ந்திருக்கின்றார்கள்.

அதாவது பெண்கள் சிலரை நிர்வாணமாகவும், அரைநிர்வாணமாகவும் கட்டிலில் படுக்கவைத்து அவர்கள் மீது விதம் விதமான உணவுகளை அழகாக அடுக்கி அலங்கரித்து அவற்றை பரிமாற்றம் செய்திருக்கின்றார்கள்.

டுவிட்டரில் நிர்வாண போட்டோ வெளியிட்ட பாலிவுட் நடிகை

 
 
ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு 'டைம் பாஸ்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
 

இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஷெர்லினுக்கு பிறந்தநாள். இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சி ஸ்டில்கள் வெளியிட்டிருக்கிறார். இதில் முழுநிர்வாண போஸும் அடக்கம்.

பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி கூறும்போது, 'ரசிகர்கள் என்னை நடிகையாக, மாடல் அழகியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசாக இந்த புகைப்படத்தை (நிர்வாண போட்டோ) அவர்களது ரசனைக்காக வெளியிடுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.