Monday, 13 February 2012

நடிகை பாவனாவின் காதல் விளையாட்டு!

 
 
செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் லீக் என்ற பெய‌ரில் இந்தியாவின் நட்சத்திரங்கள் கி‌ரிக்கெட்டை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
மைதானத்தில் நடக்கும் இந்த விளையாட்டைவிட கேல‌ரியில் நடக்கும் கோல்மால் ரொம்பவே சுவாரஸியம். கேரள நடிகர்களின் டீமை உற்சாகப்படுத்த பாவனாவை நியமித்திருக்கிறார்கள். மைதானத்துக்கு வந்தால் இவர் உற்சாகப்படுத்துகிறாரோ இல்லையோ, இவர் உற்சாகமாகிவிடுகிறார்.
 
காரணம் நடிகர் ரா‌‌ஜீவ் பிள்ளை. இந்த ஆறடி ஆணழகனைக் கண்டால் பாவனாவின் முகம் பல்ப் போட்டுவிடுகிறது என்று கேரள மீடியாக்கள் ச‌ரியாக கல்வீச, ஐயோ...
 
அது காதலேயில்லை, சும்மா பேசினாலே காதலா என்றெல்லாம் பாவனா பம்மிப் பார்க்கிறார். ஆனால் இது நிஜக்காதல்தான் என்று மீடியாக்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. சில வேளை டைம்பாஸாகவும் இருக்கலாமில்லையா.

மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!

 
 


பொங்கலுக்குப்பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும்இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாகஉணர்ந்தேன்.காரணம் மெரினாவின் நகைச்சுவை மட்டுமல்ல! சென்னையில் மாணவன் கொலை செய்தவிவகாரத்தில் பலரும் சினிமாவை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் உண்மைஇருக்கிறது என்பது வேறு விஷயம்.தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயமும் கூட! கொலைசெய்வதை பெருமையாக காட்டும் சினிமா,குடித்துக்கொண்டே நாட்டுக்கு நல்லது சொல்லும்நாயகர்கள் இன்னும் இன்னும்.....
 
மெரினாவில்சுண்டல் விற்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்யாண குணங்களை சொல்கிறதுமெரினா.கண்டெடுத்த நகையை உரியவர்களிடம் அடையாளம் கேட்டு ஒப்படைக்கும்சிறுவன்.இவனைத்தானே இன்றைய குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.அடுத்தவன் பணத்தை எப்போதுசுருட்டலாம் என்று குழந்தைகளின் முன்னால் திட்டமிடும் சூழலில் இதெல்லாம்கற்பிக்கப்படவேண்டிய விஷயம்.மருத்துவ உதவிக்கு பணம் பெற்று வழங்குவது,தாத்தாவின்உடலை வாங்க போராடுவது,நண்பனுக்காக ஏங்குவது என்று தமிழ் சினிமா சிறுவர்களுக்குகற்பிக்கும் நல்ல விஷயங்கள் அதிகம்.பிச்சை எடுக்க வேண்டாம் நான் காப்பாற்றுகிறேன்என்று பாண்டி சொல்கிறான்.
 
முதியவர்களைதெருவில் விடும் பிள்ளைகள் அதிகரிக்கும் சூழலில் தாத்தா,பாட்டி மீதுபேரக்குழந்தைகளுக்காவது பாசம் தோன்றும்.படம் முழுக்க அன்பும்,உதவும் குணமும்நெகிழ்ச்சியுமாக நகர்கிறது.நகைச்சுவையாகவும்தான்.பரிசு வழங்க தன்னை அழைக்கவேண்டுமென விரும்பும் தாத்தா.அந்த சூழலின் இயல்பான உளவியல்.சிறுவர்களுடன்தனக்குள்ள உறவில் நிச்சயம் அப்படியான எதிர்பார்ப்பு தோன்றவே செய்யும்.உயிருக்குயிரானதமிழ் சினிமா காதலை தாண்டி நிஜமான காதலை!? காட்டுகிறது படம்.நகைச்சுவைக்காகஎன்றாலும் பல காதல்கள் இப்படியும் ஆகிவிடுவதுண்டு.
 
பாடல்கள்அவ்வளவாக எடுபடாமல் போனது பலத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.ஆனால் ஆக்காட்டிஆறுமுகம் பாடும் பழைய பாடல்கள் இந்தக்குறையை போக்குவதாக இருக்கிறது.பாண்டியைதுவக்கத்தில் உதைக்கும் காட்சியும்,கல்லால் அடிக்கப்பட்டு ரத்தம் சிந்தும்காட்சியும் நெருடலை ஏற்படுத்துகிறது.தமிழ்சினிமா என்றால் ஏதாவது சண்டைக்காட்சிஇருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல!ஆனால் விளைவுகள் வருந்தும் காட்சியைதோற்றுவிக்கிறது.வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.இன்றையசமூகத்திற்கு எத்தகைய குணங்கள் தேவை என்பதில் இயக்குநர் தெளிவாகஇருக்கிறார்.இதற்காகவே பாண்டிராஜை தாராளமாக பாராட்டலாம்.

நடிகரின் விரலை கடித்த ரசிகை

 
 
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆப்ரகாம், 12.02.2012 கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தார். விழா முடிந்ததும், அந்த வளாகத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அப்போது, அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
 
ஒவ்வொரு ரசிகரும், அவரிடம் கைக்குலுக்கினார்கள். அப்போது ஒரு ரசிகை திடீரென அவர் கையைப் பிடித்து விரலை கடித்துவிட்டார். அலறி அடித்த ஜான் ஆப்ரகாம் ரசிகையை தள்ளிவிட்டார்.
 
 
உடனடியாக பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அந்த இடத்தில் இருந்து கொண்டு சென்றனர். நடிகரின் விரலை கடித்த ரசினை ஜான் ஆப்ரகாமை தொண்டு விட்டேன் என்று கூச்சலிட்டவாறு ஓடினார்.



தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் - தமன்னா பதில்

 


தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். அதில், எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. தரமான படங்களாக இருக்க வேண்டும். எந்த மொழியாக இருந்தால் என்ன…? சில நடிகைகள் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களில் நடிக்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த நடிகைகளை போல் நான் இருக்கமாட்டேன். நிறைய படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது பயன் தராது என கருதுகிறேன். தமிழ் படங்களை நான் ஒதுக்கவில்லை. நல்ல கதை, நம்பிக்கையான இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன், என்றார்.

கவர்ச்சிக்கு புது விளக்கம் சொல்லும் தமிழ் நடிகை

 



தமிழில், 'ராமன் தேடிய சீதை', 'ஆட்டநாயகன்', 'குள்ளநரிக்கூட்டம்' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்துள்ள 'முறியடி' படம் ரிலீஸ் ஆக வேண்டி இருக்கிறது. மலையாளத்தில், 'பேச்சலர் பார்ட்டி', 'ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா' படங்களில் நடித்து வருகிறேன். 'சாப்பா குரிசு' என்ற மலையாள படத்தில் நான் நடித்துள்ள முத்தக் காட்சி பற்றி கேட்கிறார்கள். இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சிலரிடமிருந்து எதிர்ப்பும் வந்தது.

இதையடுத்து செக்ஸியான நடிகை என்று சொல்கிறார்கள். இப்படி சொல்வதை ஏற்பதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. ஏனென்றால் கவர்ச்சியாக இருப்பது ஒன்றும் ஈசியில்லை. இதை எனக்கான பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். எனக்கு வரும் கதைகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தே நடிக்கிறேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கான கதைகள் வரவேண்டும். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.

இன்று காதலர் தினமாம்

 
 

வாழ்த்துக்கள். {கணவன் - மனைவி உட்பட}


இன்று மட்டும்தானா காதலர்களுக்கு அர்ப்பணம்.எல்லா நாட்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானே.
இது போன்ற நாட்கள் ஒதுக்கலும் ,குறிப்பிட்ட நாளை கொண்டாட வைப்பதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கண்டு பிடிப்புதான்.
அன்னையர் தினம்,நண்பர்கள் தினம் என புதிது புதிதாகக் கண்டு பிடித்தது தங்களின் அலங்கார,பரிசுப் பொருட்கள் விற்பனையை பெருக்கத்தான்.
அதற்கென பரிசுப்பொருட்கள்,வாழ்த்துக்கள் என தாயரித்து தள்ளிவிடும் தன்மைதானே அவர்களின் நோக்கம்.
காதலர்களுக்கு என ஒருதினம் ஒதுக்கலும் அவர்களின் சிறந்த வணிகப்புத்திதான்.
அன்று ஒருநாள் மட்டும் தான் காதலா?
அன்பு செலுத்த நாள் பார்ப்பது முறையா?
தோல்வியுற்ற லைலா-மஜ்னு,அம்பிகாவதி-அமராவதி,ரோமியோ-ஜூலியட் போன்ற இணிகளை மட்டும் காதல் சின்னமாக்குவது முறையா?
காதலில் வென்று வாழ்வை நடத்தியவர்களைத்தானே காடலின் சின்னமாக,உதாரணமாகக் காட்ட வேண்டும்.


அம்பிகாவதி- அமராவதி காதல் வெற்றியடந்தால் அதன் பின் நாட்டை விட்டு வாழ்வை வேறு நாடு சென்று துவக்கினால் என்ன துன்பங்களை அவர்கள் அடைந்திருப்பார்கள்.அத்துயரங்கலுக்குப்பின்னரும் அவர்கள் மனதில் காதலுக்கு இடம் இருந்திருக்குமா?
மையலும் குடி கொண்டிருக்குமா?
எதார்த்த உலகை அவர்களின் காவியக்காதல் எதிர் கொண்டு பிழைத்திருக்குமா? அல்லது அமராவதி விலக்கு கேட்டு தனது மன்னராகிய தந்தையை அடைந்திருப்பாளா?
இங்கு தோற்றுப்போன காதல்கள் தான்சோகக் காவியங்களாகி இருக்கின்றன.
வெற்றியடைந்து இணைந்த காதல்கள் சோகவாழ்வாகியே மடிந்துள்ளன.


ஒன்றிரண்டு தப்பிமகிழ்ந்திருக்கலாம்.
அன்னையை நேசி,தந்தையை நேசி.
மகனை நேசி,மகளை நேசி.
முதலில் மனைவியை நேசி.
நேசிப்பதின் மறு வாழ்வுதானே காதலாகிப்போகிறது.
காதல் என்பது மனிதன் பாசத்தின் வெளிப்பாடு.
அதற்குத்தான் காதல் என்ற பெயர்.
ஆதலினால் காதல் செய்வீர் .
இன்று ஒரு நாள் மட்டுமா காதலர் தினம்.



தலைமைச் செயலகமே சங்கரன்கோவிலுக்கு வந்தது போல உள்ளது: வைகோ பிரச்சாரம்

 
 
 
இடைத்தேர்தலை முன்னிட்டு தலைமைச் செயலகமே சங்கரன்கோவிலுக்கு வந்துவிட்டது போன்று உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மதிமுக தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சங்கரன்கோவிலுக்கு வந்தார். கோவில்பட்டி வழியே வந்த அவர் களப்பாகுளம் உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் ஆதரவு கேட்டார்.
 
சங்கரன்கோவிலில் அவர் பேசியதாவது,
 
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு மாற்றாக மதிமுக சட்டசபையில் செயல்படும். கடந்த திமுக ஆட்சியில் ஊழல், குடும்பத்திற்கு முக்கியத்துவம், மத்தியில் பதவியில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அக்கட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். தற்போது அதிமுக பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய பிறகும் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கின்றனர்.
 
பெரும்பான்மையான அதிமுக அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமை செயலகமே ஜார்ஜ் கோட்டையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்துவிட்டதை போல் உள்ளது. அவர்கள் லாரி, லாரியாக இலவசப் பொருட்களை அள்ளிக் கொடுக்கிறார்கள்.
 
எனவே, அதிமுக அரசுக்கு சட்டசபையில் கடிவாளமாகவும், காருக்கு பிரேக் போலவும், மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போலவும் மதிமுக செயல்படும். நான் 1977ம் ஆண்டில் இருந்தே அடிமட்ட தொண்டனாக இந்த தொகுதியில் வலம் வந்துள்ளேன். எனவே, மதிமுகவிற்கு ஒரு பிரதிநிதித்துவம் தரும் வகையில், சங்கரன்கோவிலில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.



ஸ்டாலினுக்கு எதிராக கிளம்பும் வீரபாண்டியார் மகன்

 
 
 
சேலத்தில் தன்னிச்சையாக இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவுக்கு திமுக மேலிடம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
திமுக இளைஞர் அணியைப் பலப்படுத்த அக்கட்சியின் பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் 30 வயதுக்குட்பட்டவர்களிடம் மனு வாங்கி தானே நேரில் சென்று நிர்வாகிகளைத் தேர்வு செய்து வருகிறார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் சேலம் மாவட்டத்திற்கான இளைஞர் அணி நிர்வாகிகளைத் தன்னிச்சையாகத் தேர்வு செய்யும் பொருட்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா இன்று சேலத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த திமுக தலைமைக்கழகம் இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகத்தின் சார்பில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் அளவில் பல இடங்களில் இளைஞர் அணிக்கு உறுப்பினர்களை சேர்த்து நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்து கொண்டிருக்கும் நிலையில் இளைஞர் அணி உளபட பல்வேறு அணிகளுக்கு நேரடியாக மாவட்ட கழகமே தேர்வு செய்வதாக சேலம் மாவட்டத்தில் தனியாக அறிவிக்கப்பட்டு இருப்பது தலைமை கழகத்தின் அனுமதி பெறாதது மட்டுமல்லாமல் கழக கட்டுப்பாட்டை மீறியதாகவும் ஆகிவிடும் என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி வரை நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடக்கவில்லை. இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றனர். இருப்பினும் ஒரு சிலர் வீரபாண்டி ஆறுமுகம் வீடு உள்ள பூலாவாரியிலும், கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையிலும் கூடியிருந்தனர்.
 
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் திமுக தலைமைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று அறிவித்தபடி நேர்காணல் நடக்குமா என்று தெரியவில்லை.
 
ஏற்கனவே திமுக நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் பெயரைச் சொல்ல வீரபாண்டி ஆறுமுகம் மறந்ததால் அவரை சிலர் பேச விடாமல் தடுத்தது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது மகன் வீரபாண்டி ராஜா தன்னிச்சையாக நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது.
 
வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.