நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Saturday, 11 February 2012
போதையில் இருந்த ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகர் ?
நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.டாக்டர் ஆகவேண்டுமேன்பது பெற்றோர்களின் ஆசையாம் , மேடையில் உணர்ச்சி வசப்பட்டு பொங்கியெழுந்த விஜய்!
தான் நடித்த நண்பன் படத்தின் விளம்பரத்துக்காக ரசிகர்களை திரையரங்குகளில் சந்தித்துப் பேசி வருகிறார் விஜய்.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் நேற்றைய நண்பன் காலைக் காட்சியின் இடையில் விஜய் தோன்றிப் பேசினார்.
அவர் கூறுகையில், "ரசிகர்கள் என்றைக்கும் எனது நண்பர்கள்தான். எல்லோருக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் போன்ற பல உறவுகள் இருக்கும். ஆனால், நண்பன் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம். ஆனால், அனைத்து விஷயங்களையும் நண்பனிடம்தான் பகிர்ந்து கொள்வோம்.
எனக்கு ப்ரண்ட்ஸ் என்றாலே ஒருவித சந்தோஷம் வந்துவிடும். ப்ரண்ட்ஸுக்குதான் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன்.
இந்தப் படத்தை மட்டுமல்ல, என்னுடைய எல்லா திரைப்படத்தையும் வெற்றிப் படமாக்குவதற்கு இரவு, பகல் பாராது சுவரொட்டி ஒட்டியும், தோரணம் கட்டியும், பட்டாசு வெடித்தும் எனக்காக ரசிகர்களாகிய நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். எனக்கு ஒரேயொரு சின்ன ஆசை. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என் மீது அன்பு செலுத்தும் உங்களுக்காக நண்பன் படத்தில் சில யோசனைகளை கூறியுள்ளேன். என்னுடைய மத்த படங்கள் மாதிரியில்லாமல், இந்தப் படத்தின் வசனங்களை நானே உங்களுக்காக பேசியுள்ளேன்.
என்னைப் பொருத்தவரை நீங்கள் எல்லோரும் என் நண்பர்கள். உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள். அந்த துறையில் உங்களால் நம்பர் 1 ஆக வரமுடியும். நாம் வராவிட்டால் வேறு யார் வரப்போகிறார்கள்?
டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க...
என் வாழ்க்கையில் போராட்டங்களை அனுபவித்திருக்கிறேன். என்னை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் எங்கப்பா அம்மா ஆசை. எனது இளமைக் காலம் ஒரு போராட்டம்தான். பெரும் போராட்டத்துக்கு பிறகு எனக்குப் பிடித்த இத் துறையில் முயன்று இந் நிலைக்கு வந்துள்ளேன்," என்றார்.
தில்... தில்தில்தில்தில்.....காதல் தில்தில்...... கன்னத்தில் கடித்து விட்டால்..
புரியவில்லையா ? வம்பயர் என்னும் மனித ரகுல்லா விளையாட்டாம். படங்களில் வருவதுபோல ரகுல்லா வந்து மனித ரத்தத்தை உரிஞ்சிக் குடிக்குமே அதுபோல தான் விளையாடியதாகவும், இந்த விளையாட்டை அச் சிறுமி தன்னோடு விளையாடுமாறு கூறியதாவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் அவர் கன்னத்தில், கழுத்தில் மற்றும் துடையில் செல்லமாகக் கடித்துள்ளாரம். ஆனால் முத்தம் இடவில்லை என அவர் வதிடுகிறார். அவளை நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவே இல்லை ! அவளது கன்னத்தைக் கடித்த போதும் அவளுக்கு முத்தம் கொடுக்க நான் முயற்சிக்கவில்லை என்று சொல்கிறார் அவர்.
அது சரி, எல்லாம் போகட்டும் ரகுல்லாவுக்கும் ஒரு வரை முறை இருக்குது தெரியுமோ ? அது கழுத்தில் மட்டும் தான் கடித்து மனித ரத்தத்தை உறுஞ்சிக் குடிக்கும்.(காலாதி காலமா இப்படி தான் அது செய்யுது:) ஆனால் இங்கே இந்த இலங்கையர் கன்னத்தில் மற்றும் தொடையில் எல்லாம் உறுஞ்சியுள்ளார். இந்த விடையம் நீதிபதி ஐயாவுக்கு தெரியுமோ தெரியாது. எதுக்கும் அவர் வீட்டில் ஒரு ரகுல்லா படத்தை போட்டுப் பார்ப்பது தீர்ப்புச் சொல்வது நல்லது !
மாணவி திருமணம் நிறுத்தம்!!
உத்தமபாளையம் ஒன்றியம், ராமசாமி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் லாவண்யா ,15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தந்தை இல்லை. தாய் பராமரிப்பில் உள்ளார். அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வடமலைராஜ், 45 (விவாகரத்து பெற்றவர்) லாவண்யாவை, அவரது தாய் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இன்று ரகசிய திருமணம் நடத்த ஏற்பாடானது.நிறுத்தம்: தன்னை சந்தித்த தோழியிடம், விவரங்களை லாவண்யா கூறினார். ஆசிரியர்கள், சின்னமனூர் கிரீன் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தந்தனர்.
தொண்டு நிறுவன செயலர் போஸ், மகளிர் போலீசிடம் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா நடவடிக்கையால் கட்டாய திருமணம் நிறுத்தப்பட்டது. மாணவியைத் தொடர்ந்து படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நாமும் ஆயுதம் கொடுத்தோம்! இலங்கை போர்க் குற்றம் புரிந்தது!! அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட பாகிஸ்தான்!!!
நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன், ஒரு நாட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்தோம். எனினும் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றமை உண்மைதான்.
இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.
நோர்வே பாராளுமன்றத்தில் தமிழ் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் முன்னாள் இலங்கைக்கான பிரதி பாகிஸ்தான் தூதுவராக இருந்து தற்போது நோர்வேக்கு தூதுவராக பதவி உயர்த்தப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதுவர்.
இவர் பாகிஸ்தான் தூதுவராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை பணிப்பாளர் இலங்கையில் நிலை கொண்டிருந்தமையும் கொழும்பில் நடந்த தற்கொலை தாக்குதலில் குறித்த தூதுவர் உயிர் தப்பியும் இருந்தார்.
அல்கொய்தா இயக்க பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லபட முதலே பாகிஸ்தான் நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு தென்கிழக்கு ஆசியாவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டது.
இன்று அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில் சீனாவின் சலுகைகளுக்கு மட்டும் கை ஏந்தும் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் தூதுவராக இருக்கும் நீங்கள் காஷ்மீரில் இந்திய படைகள் செய்யும் அவலத்திற்கு இங்கு 300 பேர் மத்தியில் உரையாற்றுகிறீர்கள்.
காஷ்மீரில் அழிக்கபட்ட இனத்தில் இருந்து வந்ததாக கூறும் நீங்கள் தூதுவராக இருக்கும்போதுதான் தமிழர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உங்கள் ராஜதந்திர அறிவுப்படி இலங்கையில் கொல்லப்பட்டார்கள்.
இது தமிழருக்கு மட்டும் அல்ல நோர்வேயின் சமாதான முகத்திரைக்கு நீங்கள் வைத்த தீயே. இவ்வாறு இருக்கும்போது நோர்வேயின் உதவியை காஷ்மீருக்கு எந்த நிலையில் கேட்கிறீர்கள் என கேட்டபோது?
இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஆனால் நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு.
இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன்.
பாகிஸ்தான் எந்தவித முன்னணிச் செயற்பாடுகளிலும் இலங்கை யுத்த விடயத்தில் ஈடுபடவில்லை. இராணுவ போர் குற்றம் மனிதஉரிமை விடயங்களை கவனித்தால் நான் அதைப்பற்றி விரிவாக போகவிரும்பவில்லை.
நான் இலங்கையில் அண்ணளவாக ஒரு வருடமும் 6 மாதங்களும் தங்கி இருந்தேன். எனக்கு தெரியும் இரண்டு பக்கமும் முறைப்பாடுகள் உள்ளது.
இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். (கதிர்காமரும் பாகிஸ்தான் உளவுத்துறையும் வாழ்ந்தவீடுகள் அருகில்) ஒரு அமைதியான நல்ல முதியவர். அவர் கொல்லபட்ட விதம் அவ்வாறு நடந்திருக்க கூடாது.
எனது நண்பரே! யுத்தம் மிகவும் வலியானது. இலங்கைக்குப் பாகிஸ்தான் ஒரு நட்பு நாடு என்ற முறையில் தனது உதவியை செய்தது. இலங்கை அரசு ஜனநாயகப்படி தெரிவு செய்யபட்ட ஒரு அரசு என்பதால் பாகிஸ்தானின் உதவியை நாடியது. ஆயுதங்களை தருமாறு கோரியது.
ஐ.நா. சட்டப்படி நாம் அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்தோம். எனக்கு தெரியும் புலிகள் சில விடயங்களுடன் முரண்பட்டனர். அவை மிகவும் சிறியவை.
பின்னர் சுனாமி வந்தது. சுனாமியே புலிகளை பலவீனபடுத்தியது. ஆனால் பாகிஸ்தான் அரசு புலிகளை பலவீனபடுத்தவில்லை. நான் இலங்கையில் தங்கி இருந்தபோது சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் உயிர்களை சுனாமியில் பரிதாபமாக பறிகொடுத்தனர்.
பின்னர் நான் வெளியேறும்போது இலங்கை இராணுவம் யுத்தத்தை ஆரம்பித்தது. நான் வெளிக்கிட்ட பின்னரே யுத்தம் ஆரம்பமானது. நான் நேரடியாக சம்மந்தபடவில்லை.
யுத்தில் மேலும் இலங்கை இராணுவம் எங்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கவில்லை. அவர்கள் அனுபவம் வாய்ந்த படைகள். அவர்களின் அனுபவத்தில் செய்தனர். நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் உணர்கிறேன். அங்கு சில மனித உரிமை மீறல்கள் கொலைகள் நடந்துள்ளது.
எனது நண்பரே! யுத்தம் என்பது மிகவும் கொடிய ஒரு பாதை. எவர் எந்த பக்கத்தால் வருபவர் என்று தெரியாது. நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு. இரண்டு பக்கமும் இந்த கொடிய இன மோதலில் துன்பப்பட்டுள்ளார்கள்.
தற்போது நான் நினைக்கிறேன் அந்த நிலமை மாறிவிட்டது. புதிய ஒரு அத்தியாயம் இலங்கையில் உருவாகி உள்ளது. அங்கு எல்லோரும் நிம்மதியாக வாழலாம் என்று நான் உணருகிறேன்.
ஜெர்மனிய அழகி மீதான பாலியல் வல்லுறவு: நாட்டை விட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்
இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் இந்த நிலையில் இதனை மறுப்பக்கம் மாற்றும் வகையில் தற்போது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.கடந்த தினங்களில் தங்கல்லையில் வெள்ளைக்கார பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற வேளையில்,வெள்ளைக்காரர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில் மற்றுமொறு வெள்ளைக்கார யுவதி நித்திரையில் இருந்து சமயம், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாத்தறை திக்வெலையில் பதிவாகியுள்ளது.மாத்தறை திக்வலை பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அழகிய யுவதி ஒருவர் ஹேட்டல் அறையில் இனந்தொரியாத நபரினால் பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த யுவதி,தமது காதலனுடன் 2.30 மணிவரைக்கும் மது அருந்திவிட்டு, பின்னர் தமது காதலனுடன் நித்திரைக்குச் சென்றுள்ளார்.அதிக மது போதையில் இருந்த அவரும், அவரது காதலனும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் அந்த யுவதி திடீரென விழித்தெழுந்த நிலையில், யாரோ ஒருவர் அவருடன் உடலுறவு கொண்டிருந்துள்ளார்.முதலில் அந்த பெண் தன் காதலனே தன்னுடன் உறவு கொண்டிருக்கிறார் என்று நினைத்துள்ளார்.எனினும் தன்னுடன் இருந்த நபர் வேறொருவர் என சற்று நேரத்திற்கு பின்னரே தெரியவந்துள்ளது.
அந்த கட்டிலிலேயே அடுத்த பக்கத்தில் தமது காதலன் கடும் நித்திரையில் இருந்துள்ளார்.இந்தநிலையில்,அவர் கூக்குரலிட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த நபர் நிர்வாணமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.இச் சம்பவத்தை தொடர்ந்து எழுந்துள்ள நிலைமைகளை தொடர்ந்து இலங்கை வந்திருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிலிருந்து வெளியேறினர்.இந்த சம்பவத்தை தொடந்து குறித்த பிரதேசத்தில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டாம் என்று போய்விட்டது.
தாய்மொழிபால் கொண்ட அன்பால் அமலாபாலின் ஆசை!!
தமிழ், தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருந்தாலும் தனது தாய்மொழியான Amala Paulமலையாளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு நல்ல படம் வரவில்லையே என்ற ஏக்கம் அமலாபாலுக்கு எப்போதுமே உண்டு. ஏனெனில் 'மைனா' ஹிட் ஆவதற்கு முன்பு 'நீலத்தாமர' போன்ற ஒரு சில படங்களில் குட்டி குட்டி கேரக்டர்களில் மட்டுமே நடித்திருந்தார் அமலா. இப்போது அவரது வாட்டத்தைப் போக்கும் வகையில், பிரபல இயக்குனர் லால்ஜோஷ் இயக்கும் 'டைமண்ட் நெக்லஸ் படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா. இந்தப் படம் ஒப்பந்தமானதை ஒட்டி தனது கல்லூரி நண்பர்கள் சிலபேரை துபாய் வரை அழைத்துப்போய் பார்ட்டி கொடுத்து அசத்திவிட்டு வந்தாராம் அமலா. முரண்பாடான இந்த சமூகத்தில், ஒரு இளைஞனுக்கும், மூன்று பெண்களுக்கும் இடையில் நடக்கும் காதல் போராட்டத்தை அலசுகிறதாம் 'டைமண்ட் நெக்லஸ்'.. |
பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களே அதனால் நீயும் படுக்க வா
என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா இப்படி ஒரு சமாச்சாரத்தை
போட்டுடைத்திருப்பதுதான் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தில் பாலிவுட்டில் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
20 வயதான ஹைதராபாத் ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா, அமெரிக்காவில் வளர்ந்தவர்.மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். .
மாடலிங் மற்றும் பட வாய்ப்புக்காக 88 கிலோ ஆக இருந்த தனது உடல் எடையை,தினமும் மூன்று மணி நேர கடுமையான உடற்பயிற்சி மூலம் முறைத்து கட்டுமஸ்தான தோற்றமுடையவராக மாற்றினார்.
எதிர்பார்த்த தோற்ற பொலிவு வந்த நிலையில் மாடலிங் வாய்ப்பு வந்த அதே நேரத்தில், பாலிவுட் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்பு வந்தவுடன் உற்சாகமாக அவர்களை அணுகினார் கிருஷ்ணா.
ஆனால் அந்த உற்சாகம், தயாரிப்பாளர்களை சந்தித்ததுமே திகிலாக மாறிப்போனதாகவும், பாலிவுட்டின் திரை மறைவு சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனதாகவும் பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார் கிருஷ்ணா!
அப்படி என்ன நடந்தது?
அழைத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னதாகவும், அதற்கு அவர் மறுக்கவே, பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் அ அது ஞக்கு சம்மதித்தவர்களே என்று தயாரிப்பாளர்கள் சொல்லியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதெல்லாம் கூட மேட்டரில்லை. 'அது' க்கு அழைத்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆணா? பெண்ணா? என்ற ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேங்றார் கிருஷ்ணா மோனாலா.
ஆனால் அப்படி அழைத்தவர் ஆண் தயாரிப்பாளர் என்றால் அது நிச்சயம் ஓரின சேர்க்கை சமாசாரம்தான்!
அதே சமயம் பெண் தயாரிப்பாளர் அழைத்தால் அது நிச்சயம் 'ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல!' என்று சமத்துவமும், சம உரிமையும் (அட கஷ்ட காலமே! போயும்ஸ போயும் இந்த மேட்டரிலா?! ) உலாவும் இடம் பாலிவுட் என்று ஆறுதல்(?!) பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!
விரைவில் மீண்டு வருவேன் - யுவராஜ்
சச்சின் இல்லாமல் சாதிக்க முடியுமா?
கடலுக்கு அடியில் விசித்திர உலகம்: தமிழில் வரும் ஹாலிவுட் படம்
ஹாலிவுட்டில் 2008-ல் வெளியாகி வெற்றி பெற்ற ஜர்னி டூ சென்டர் ஆப் இயர் படத்தின் இரண்டாம் பாகமான ஜெர்னி-2 படம் தமிழில் ருத்ரபூமி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
பதினேழு வயது சிறுவன் ஜான் ஆண்டர்சன் உலகில் பெரிய மர்ம தீவு இருப்பதுபோல் உணர்கிறான். அதை காண தனது சித்தப்பா ராக்கை துணைக்கு அழைத்துக் கொண்டு விமானத்தில் செல்கிறான். வழியில் விமானம் வெடித்து சிதற தேடிச்சென்ற மர்மத் தீவு அருகே விழுகின்றனர்.
அங்கு பெரிய ருத்ரபூமி தெரிகிறது. இயற்கைக்கு மாறான விலங்குகள், எரிமலைகள், தங்க மலைகள், கொட்டும் தங்க மழை, அசுரப் பறவைகள், ராட்சத தேனீக்களை கண்டு மிரள்கின்றனர். அவற்றிடம் இருந்து தப்பி கடலுக்கடியில் உள்ள மர்ம தீவில் வசிக்கும் ஜான் ஆண்டர்சன் தாத்தாவை சந்திக்கின்றனர்.
அந்த தாத்தா விசித்திர உலகம் நான்கு நாளில் ருத்ர பூமியாக மாறி உலகை அழித்து விடும் என்ற அதிர்ச்சி தகவலை சொல்கிறார். அந்த ஆபத்தில் இருந்து மூவரும் எப்படி தப்புகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தை ராம நாராயணனின் அழகர் பிலிம்சும், வார்னர் பிரதர்சும் இணைந்து வருகிற 10-ந் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர்.
15 Feb ஜூவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் டவுன்லோட் செய்ய
இந்த வார ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் aஆகியவற்றை விளம்பர பிரச்சனை இல்லாமல் வேகமாக டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
15-2-2012 ஜூனியர் விகடன்
12-2-2012 குமுதம் ரிப்போர்ட்டர்
11-2-2012 நக்கீரன்
எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கள் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன் தாரிக்
தோனி நாட் அவுட் - மேட்ச் டிரா ...
டுவிட்டரில் வம்பிலுக்கும் சிம்பு - தனுஷ்!
கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை
உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.
உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.
உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.
உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.
"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!












