Monday, 27 August 2012

மங்களூருவில் கன மழை

மங்களூருவில் கன மழை

கருநாடக மாநிலம் மங்களூருவில் கன மழை பொழிந்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி

கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பாரதீய � �னதாவில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்கிய குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேலும் நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். இவற்றுக்கு பதிலடி கொடுக்க நரேந்திர மோடி திட்ட மிட்டுள்ளார். மீடியாக்கள் மூலம் பதிலடி கொடுத்து சண்டை போட விரும்பாத நரேந்திர மோடி இணைய தளம் தொடங்கி அதன் மூலம் எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முறியடிக்க முடிவு செய ்துள்ளார். 

இந்த இணைய தளத்துக்கு "நமோ பாரத்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாளர்களாக நரேந்திரமோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான மனிஷ் பர்தியா, பரிந்து பகத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த இணைய தளத்தில் நரேந்திர மோடி அரசின் சாதனைகளும் இடம் பெற்று இருக்கும். மனிஷ் பர்தியா ஏற்கனவே நரேந்திர மோடியின் பேச்சுக்கள், சாதனைகள் அடங்கிய ஏராளமான சி.டி.க்கள் தயாரித்து வைத்துள்ளார். இவையும் புதிய இணைய தளத்துக்கு பயன்படுத்தப்படும். அவ்வப் போது கிளப்பி விடப்படும் புகார்கள் குற்றச்சாட்டுகளுக்கு நரே� �்திர மோடியின் பதில் நேரடியாக இடம் பெறும். இந்த இணைய தளம் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் வீடுகளுக்கும் கேபிளில் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.



நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி

நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி

நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார ்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Monday, 6 August 2012

கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு





தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட ஒருசில நிறுவனங� �கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மூலம் வெட்டி எடுத்ததால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அதிகமானது என்று மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மிக விரிவாக கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சட்டவிரோத கிரானைட் கடத்தல் பற்றிய சகாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

6 மாதங்களில் சுமார் 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப்பட்டு வருகிறது என்று தினபூமி நாளிதழின் ஆசிரியர் தமது புகார் மனுவில் கூறியிருந்தார். இப்புகார் எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே மேலூர் சுற்றுவட்டார த்தில் சட்டவிரோத கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 14,24, ஜனவரி 28, பிப்ரவரி 3 ஆகிய நாட்களில் இரவு முழுவதும் வாகன சோதனை நடத் தப்பட்டது. தினபூமி ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் 6 மாதத்தில் ரூ1650 கோடி மதிப்பிலான கிரானைட் கற்ககள் கடத்தப்படவில்லை. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 13-ந் தேதி மேலூர் தாசில்தாரால் ஒரு கிரானைட் கல் வாகனம் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒலிம்பஸ் நிறுவனம்

தினபூமி நாளிதழ் ஆசிரியர் தமது புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களான துரை தயாநிதி, நாகராஜ் ஆகியோரின் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கீழவளவு கிராமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாக புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக கீழவளவு மற்றும் கீழையூரில் ஒலிம்பஸ், சிந்து, பி.ஆர்.பி. கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. 3 குவாரிகளில் மட்டும் ரூ23.42 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ரூ16,338 கோடி ரூபாய் இழப்பு

இதேபோல் எஞ்சிய 91 குவாரிகளிலும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அரசின் டாமின் குவாரிகளில் இருந்து சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. மேலும் கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது

கனிம வள அதிகாரிகள் உடந்தை

பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற கிராமங்களில் கிர ானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழ� ��க்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப்பட்டு உள்ளன. ஒரு காலத்தில் இதற்காகப் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர். ச� �ல நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர்.

கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தலை க� �்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர் மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வ� �ாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சகாயம் தமது அறிக்கையில் கூறிய ுள்ளார்....!







Sunday, 5 August 2012

4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா





கர்நாடக மாநிலத்தில் சம்பள திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அரசு டாக்டர்கள் இன்று அதிரடியாக ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம ் கொடுத்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இதுபற்றி மாநில மருத்துவ அலுவலர்கள் சங்க செயலாளர் சீனிவாசன் கூறுகையில், 'மாநிலம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 4500 டாக்டர்க� ��் தங்கள் ராஜினாமா கடிதங்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் கொடுத்துள்ளனர். மாவட்ட மருத்துவமனைகளை மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்' என்றார்.
 
டாக்டர்களின் கோர ிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் லிமாபாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும்படி மருத்துவ பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







Saturday, 4 August 2012

பிரதமர் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்: நரேந்திரமோடிக்கு ஆப்பு வைத்த பா.ஜனதா




பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடுத்த� � தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வாகத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறுத்தப்பட்டுள்ளார். 

எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை 2014 பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக நிறுத்தினால் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பது பாரதீய ஜனதாவில் உள்ள சில தலைவர்கள� ��ு கணிப்பாகும். 

ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார் பகிரங்கமாக நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலின்போதும் அவர் இந்த பிரச்சினையை எழுப்பி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மத சார்பற்ற தலைவர் ஒருவரையே நிறுத்த வேண்டும். 

இதுதொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்கார ி தனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் நிதிஷ்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். 

நிதிஷ்குமாரின் கடும் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதா நரேந்திரமோடியை நிறுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியது. இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளதாக � ��கவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை கட்சி இன்றும் முடிவு செய்யவில்லை. 2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை முன் நிறுத்தமாட்டோம் என்று நிதின் கட்காரி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. 

இதுபற்றி நிதின் கட்காரியை நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த தகவலை உறுதி செய்தார். நிதின் கட்காரி கூறியதாவது:- 
ஒரு வாரத்துக்கு முன்பு டெல்லியில் கூட்டணி தலைவர்கள் கூட் டம் நடந்தது. அப்போது பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

பீகாரில் லல்லு பிரசாத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு முஸ்லிம்கள் ஆதரவு இருந்தது. அதன் பிறகு நிதிஷ்குமார் ஆட்சியை கைப்பற்றினார். முஸ்லிம்கள் ஆதரவை பெறுவதற்காக நரேந்திரமோடியை நிதிஷ்குமார் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. 

மேலும் பீகார் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக நரேந்திரமோடி தெரிவித்த கருத்தும் அவரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் இருவருக்கும் 2005-ம் ஆண்டு முதல் பனிப்போர் நிலவி வந்தது. அது ஜனாதிபதி தேர்தலின் போது வெளிப்படையாக வெடித்தது. முக்கிய கூட்டணி கட்சியின் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதாவும் அதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.








ப.சிதம்பரம்... இவர் அமைச்சரா? அல்லது CEOவா?





புதிய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் தனது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்துவிட்டார� ��. ஆகஸ்ட் 8ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதால் அதற்கான குறிப்புகளைத் தயார் செய்ய வார இறுதியில் விடுமுறை நாட்களிலும் அவர்களை பணி செய்யச் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

சிதம்பரத்துடன் பணியாற்றிய நிதித்துறை அதிகாரிகளுக்கு இது புதிதல்ல. வழக்கமாக காலை 8.30 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிடும் சிதம்பரம், முதல் வேலையாக மூத்த அதிகாரிகளுடன் ந ாட்டின் அன்றைய நிலவரம் குறித்து விவாதிப்பார்.

அடுத்ததாக அவர் செய்யும் வேலை தான் மிக இன்ட்ரஸ்டிங்கானது. நேற்று எவ்வளவு வருமான வரி வசூல் ஆனது என்ற விவரம் அவரிடம் தரப்பட வேண்டும். அதைப் பார்த்துவிட்டுத் தான் அடுத்த வேலையை ஆரம்பிப்பார்.

ஆனால், ஜனாதிபதியாகிவிட்ட பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது நிலைமை வேறு. அவர் மிக லேட்டாகவே அலுவலகம் வருவார். ஆனால், இரவில் நெடுநேரம் அலுவலகத்தில் இருப்பார்.

ஆனால், சிதம்பரம் காலையில் மிக சீக்கிரமே வந்துவிடுவார். இதனால் அதிகாரிகளும் காலையில் சீக்கிரமே அலுவலகம் வந்துவிடுகின்றனர்.

மாலையில் இத்தனை மணிக்குப் போவார் என்றில்லாமல் எந்த நேரம் வரையும் வேலையில் இருப்பார். இதனால் அவர் போகும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர் எப்போது கிளம்புவார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

ஒரு பைலில் கையெழுத்துப் போடும் அதன் விவரங்களை மிகத் தெளிவாக உள்வாங்கும் திறமை கொண்டவர் சிதம்பரம். இந்த பைலை சிதம்பரத்திடம் தந்த அதிகாரியிடம் கேள்விகள் கேட்டு, விளக்� �ங்களை வாங்கிய பிறகே கையெழுத்துப் போடுவார். இதனால், அவரிடம் பைலை கொண்டு செல்லும் முன் அதிகாரிகள் அது குறித்த முழு விவரத்தோடு போக வேண்டும். இல்லாவிட்டால் திட்டு உறுதி.

வழக்கமாக அதிகாரிகள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடுபவர்களே அமைச்சர்களாக உள்ள நிலையில், சிதம்பரத்தை அறிந்தவர்கள், அவர் மிக மிக வித்தியாசமானவர் என்கின்றனர்.

சட்டமும் படித்தவர் என்பதால் எந்த ஒரு சிறிய திட்ட மாறுதல்களையும் அதன் விளைவுகளோடு சேர்த்து யோசிப்பது தான் சிதம்பரத்தின் பலம். இதனால், திட்டங்கள் தொடர்பான பைல்களை அவர� �டம் கொண்டு செல்லும் முன் பலமுறை யோசித்துவிட்டு, முழு விவரங்களோடு தான் போக வேண்டும் என்கின்றனர்.

அதே நேரத்தில் பைல் முழு விவரத்துடன் இருந்தால், அதை இழுத்தடிக்காமல் படாரென முடிவெடுத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்.

அதே போல உள்துறையில் இருந்தபோதும் தனது காலையை உளவுப் பிரிவின் தலைவர்களுடனான சந்திப்புடன் தான் ஆரம்பிப்பார். அன்று நடக்கப் போகும் சம்பவங்கள் குறித்த உளவுப் பிரிவினரின் சில முன் தகவல்களை வைத்துக் கொண்டு, அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாக உத்தரவு போடுவார்.

தீவிரவாதம், தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மாநில உளவுப் பிரிவினருடன் real-time basis-� �் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளச் செய்வதோடு, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதையும் உடனுக்குடன் தனக்கு அப்டேட் கிடைக்க வேண்டும் என்பார்.

அதே போல தன்னைச் சந்திக்க மிக மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றில்லாமல், துணைச் செயலாளர் அளவில் இருப்பவரைக் கூட இன்டர்காமில் கூப்பிட்டு அவரிடம் கருத்துக் கேட் பார்.

சிறிய அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கூட சீரியஸாக படிப்பார். அந்த அதிகாரியின் குறிப்பை சீனியர் அதிகாரிகள் எந்த அளவுக்கு மதித்தனர் என்பதையும் பார்ப்பார் என்கிறார்கள்.

முகர்ஜியைப் பொறுத்தவரை அவரை கீழ்நிலை அதிகாரிகள் யாரும் தொடர்பு கொள்ளக் கூட முடியாதாம்.

சிதம்பரம் அனுப்பிய சர்க்குலர்:

இந் நிலையில் துணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள நிதித்துறை அதிகாரிகளுக்கு சிதம்பரம் ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளார். அதில், இப்போது நீங்கள் பார்க்கும் வேலை � �ங்களுக்குப் பிடித்துள்ளதா? என்று முதல் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஆம், பிடித்துள்ளது என பதில் எழுதினால், உங்களது பணியை மேலும் மேம்படுத்த என்ன ச� �ய்யப்பட வேண்டும்? என்று கேட்கிறது இரண்டாவது கேள்வி.

இல்லை, எனக்குத் தரப்பட பணி பிடிக்கவில்லை என்று பதில் எழுதினால், பெரிய வம்பு க� �த்திருக்கிறது. அதாவது அடுத்து 3 கேள்விகளுக்கு அவர்கள் பதில் தர வேண்டும்.

அதில் முதல் கேள்வி, மீண்டும் உங்களது சொந்த பணிக்கே (நிதித்துறைக்கு வரும் முன் இருந்த பதவி) செல்ல விருப்பமா?, வேறு அமைச்சகத்துக்குச் செல்ல விருப்பமா?, அல்லது நிதியமைச்சகத்திலேயே வேறு பதவிக்குப் போக விருப்பமா? என கேள்விகள் தொடர்கின்றன.

நிதியமைச்சகத்திலேயே வேறு பதவிக்குப் போக விருப்பம் என்று பதில் எழுதினால், அந்தப் பதவியில் நீங்கள் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று கருதுகிறீர்கள்..? என்று அடுத்த கேள்வியும் வருகிறது.

இதனால் பெரும்பாலான அதிகாரிகள், நான் இருக்கும் பதவியிலேயே சந்தோஷமாகத் தான் இருக்கேன் என்று பதில் எழுதிவிட்டுத் தப்பும் மூடில் இருப்பதாக சொல்கிறார்கள்.

சிதம்பரத்தின் செயல்பாடுகள் வழக்கமாகவே இவர் அமைச்சரா? அல்லது CEOவா? என்று கேள்வி கேட்க வைக்கும். இந்த முறையும் அது தொடர்கிறது.







அஜீத் -20! எஸ்.பி.பி தான் கைகாடினார்!





திரையுலகில் பெரும் பின்புலம் இல்லாமல், தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர் அஜீத். இன்று அஜீத் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிகிறது.

பல்வேறு ஏற்ற, இறங்கங்களைச் சந்தித்தாலும் எதற்கும் பதற்றப்படாமல் தான் சரி என நினைப்பதைச் செய்வதே அஜீத்தின் பலம். அவரது இந்த குணமே அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சே ர்த்தது.  தன் பெயரைச் சொல்லி யாரும் தன் ரசிகர்களை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என முடிவு செய்த அஜீத்தன் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் என்று  அறிவித்த பின்னர்  தான் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

இன்று 21வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜீத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசிய போது " அமராவதி படத்தின் கதையினை தயார் செய்த உடன், ஒரு நாள் எஸ்.பி.பியை சந்திக்கும் போது கதையினை கூறினேன். "இக்கதைக்கு புதுமுக நாயகன், நாயகி இருந்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்" என்றேன்.

உடனே எஸ்.பி.பி " தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் நாயகனாக புதுமுகம் ஒரு பையன் நடித்து இருக்கிறான். அவனது முகம் அனைவரையும் வசீகரிக்கும் முகம். ஆனால் ஆள் ஒல்லியாக இருப்பான்.. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்" என்றார்.


உடனே நான் 'பிரேம புஸ்தகம்' படக்குழுவினை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கூறி� � செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்னை மந்தவெளியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

நான் உடனே சென்று அவரைச் சந்தித்தேன், கதைக்கு பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தேன். அவர் தான் அஜீத் " என்று கூறினார்.

20 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து முன்னணியில் இயங்கி வருவதே சாதனை தான். திரையுலகில் தன் பயணத்தைத் தொடரும் அஜீத்திற்கு வாழ்த்துகள்! வரும் வருடங்களில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துவோம்!







Friday, 3 August 2012

ஒலிம்பிக் குத்துச் சண்டை: விகாஷ் கிருஷ்ணன் வெற்றி திரும்ப பெறப்பட்டது!





லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் விக� ��ஷ் கிருஷ்ணன் வெற்றி பெற்றதை சர்வதேச குத்துச் சண்டை சங்கம் திரும்பப் பெற்றதால் இந்தியாவின் பதக்க கனவு பறிபோனது.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் � �ோதினார்.

இப்போட்டியில் அமெரிக்க வீரரை 13-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதிபெற்றார். 2011-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவரான விகாஸ், செவாய்க்கிழமை நடக்க உள்ள காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஆண்ட்ரே சாம்கொவோவுடன் மோதுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விகாஷ் கிருஷ்ணன் பெற்ற வெற்றியை திரும்பப் பெறுவதாக சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவின் எர்ரால் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளில் ஒன்று பறிபோய்விட்டது.







அரசு இசைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை





கலை பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கலை பண்பாட்டுத் துறையின் கீழ், திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம், கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், புதுக்கோட்டை, சீர்காழி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராமநாதபுரம் ஆகிய 17 இடங்களில் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்தப் பள்ளிக்கூடங்களில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மி� �ுதங்கம் ஆகிய துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு, 996 மாணவ, மாணவிகள் இசை பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.200-ல் இரு� �்து ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, கலை பண்பாட்டுத் துறை ஆணையரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலித்தது.

அதையடுத்து கலை பண்பாட்டுத் துறையின் கீழ் 17 இடங்களில் இயங்கும் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 996 மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த தற்போது மாதந்தோறும் வழங்கப்� ��டும் கல்வி உதவித் தொகையை 2012-2013-ம் ஆண்டுமுதல் ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தி 10 மாதங்களுக்கு வழங்க உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.







ஒலிம்பிக்கின் 7-வது நாளில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்





ஒலிம்பிக்கில் இந்திய வீரர்-வீராங்கனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்கும் ஆட்டங்கள் (இந்திய நேரப்படி) விவரம் வருமாறு:

நீச்சல்:
ஆண்கள் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் தகுதி சுற்று, உலால்மத் ககன், நேரம்: பிற்பகல் 2.54 மணி

ஆக்கி:
ஆண்கள் லீக் சுற்றில் இந்தியா-ஜெர்மனி, நேரம்: மாலை 6.15 மணி

குத்துச்சண்டை:
ஆண்கள் வெல்டர் வெயிட் பிரிவில் விகாஷ் கிருஷ்ணன்(இந்தியா)-எர்ரோல் ஸ்பென்ஸ் (அமெரிக்கா), நேரம்: அதிக� �லை 2 மணி.

துப்பாக்கி சுடுதல்:
ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் (புரோன்), ககன் நரங், ஜாய்தீப் கர்மாகர், தகுதி சுற்று பகல் 1.30 மணி, இறுதிப்போட்டி மாலை 4.30 மணி,
ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல், விஜய்குமார், தகுதி சுற்று பிற்பகல் 3 மணி,
இறுதிப்போட்டி இரவு 7 மணி.

தடகளம்:
ஆண்கள் குண்டு எறிதல்:
ஓம்பிரகாஷ் சிங், தகுதி சுற்று ப ிற்பகல் 2.30 மணி, இறுதிப்போட்டி நள்ளிரவு 1 மணி.
பெண்கள் வட்டு எறிதல் தகுதி சுற்று: கிருஷ்ணபூனியா, சீமா அன்டில், நள்ளிரவு 11.40 மணி .
பெண்கள் டிரிபிள் ஜம்ப் தகுதி சுற்று: மயூக்கா ஜானி, அதிகாலை 2.55 மணி







Thursday, 2 August 2012

கோபப்படுவது என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு






கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல் என்று தேனியில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசின ார்.

தேனியில் தே.மு.தி.க., சார்பில், வறுமை ஒழிப்பு தின விழா நடந்தது. நாட்டுப்புற கி ராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். நாங்கள் தொண்டர்களின் சொந்த பணத்தில் உதவிகள் செய்கிறோம். ஏழை மக்கள் வறுமையில் வாடும் போது, கொடநாட்டில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். வெறும் அறிக்கையில் ஆட்சி நடத்துகிறார்கள்.



கேரள மருத்துவ கழிவுகளை, குமுளியிலும்,பொள்ளாச்சியிலும் கொட்டுகின்றனர். இத� � கேட்க ஆள் கிடையாது. நான் ஆட்சிக்கு வந்தால் போலீசார் லஞ்சம் வாங்க முடியாது. படித்த போலீஸ் அதிகாரிகள், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படாததால், 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதன்முதலில் போராடியவன் நான். தண்ணீர் கொள்ளை, கனிம வளம் கொள்ளை, எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். விலைவாசி உயர்ந்துள்ளது.


ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்காது வேலை கொடுக்க முடியுமா. விஜயகாந்த் கோபப்படுகிறான், என்று சொல்கிறார்கள். கோபப� ��படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்.



விஜயகாந்த் எதற்கும் பயப்பட மாட்டான். எதிர்த்து பேசினால் என்ன செய்வீர்கள். சிறை செல்லவும் தயார். வருகிற எம்.பி., தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். நில அபகரி� ��்பு என்று கைது செய்கிறீர்கள். நாளை இந்த சட்டம் உங்களுக்கும் திரும்பும். இதற்காக 2016 வரை காத்திருக்க வேண்டாம். 2014 ல் நாம் தனியாக ஆட்சியை பிடிப்போம். 16 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு குறித்து கலெக்டர் சகாயத்தின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன. இவ்வாறு பேசினார்.











'பில்லா 2' நஷ்ட கணக்கு...ஒரு கோடிகூட வசூலாகல்ல





அஜீத்தை 'க� �ங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள்  திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது.

விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என  நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது.

இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக � �ெரியவந்துள்ளது.  அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் செய்யவில்லை.

பிரிட்டனில் 'பில்லா 2' முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அய ர்லாந்தில் 20 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

அமெரிக்காவில் மிகவும் பிரம்மாண்டமாக 31 திரையரங்குகளில் இப்படத்தை வெளியி்ட்டனர். அங்கு முதல்வாரம் மொத்தம் 64 லட்சத்தை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.

மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம், பிரிட்டனில் 79 லட்சம் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உரிமையை வாங்கிய  விநியோகஸ்தருக்கு 'பில்லா 2' பெரும் நஷ்டத்தை ஏற்ப டுத்தி இருக்கிறது.