Tuesday, 31 July 2012

கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி





வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்டர் (60), கூலி வேலை செய்து வந்தார். கொசவன் புதூரை சேர்ந்த ராசி என்பவரை முதலாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

விக்டர் உமா (50), என்பவரை 2-வது திருமணம் செய்து பசுமாத்தூரில் வசித ்து வந்தார். உமாவுக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 

விக்டருக்கு உமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் விக்டர் மாயமானார். அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். 

இந்தத நிலையில் விக்டரை அவரது மனைவி உமா கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் உமாவிடம் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

சம்பவத்தன்று விக்டர் உமா இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்டர் கத்தியால் உமாவை வெட்ட பாய்ந்தார். சுதாரித்து க� �ண்ட உமா கத்தியை அவரிடம் இருந்து பறித்து விக்டரை வெட்டி சாய்த்தார். 

ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்டர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நடந்த இந்த கோர சம்பவத்தை மூடி மறைக்க உமா திட்டமிட்டார். வீட்டின் அருகில் இரவோடு இரவாக குழிதோண்டினார். அதில் விக்டரின் பிணத்தை தூக்கி போட்டு புதைத்தார். 

காலையில் எதுவும் நடக்காததுபோல வழக்கமான வேலைகளை செய்துள்ளார். பிணம் புதைக்கப்பட்ட இடத்தை யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கட்டுக்கல் வைத்து அடுப்பு அமைத்தார். அதில் சமையல் வேலைகளை செய்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்த தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் விக்டர் கொலை தொடர்பாக உமாவின் மகன் சந்திரனிடம் விசாரணையை தொடங்கி உள்ள� ��ர். 

கணவனை மனைவியே புதைத்த இடத்தில் சமையல் கூடம் அமைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா





இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3,1 என முன்னிலை பெற்றதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியது. அபாரமாக விளையாடிய கோஹ்லி 128 ரன் விளாசினார். கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று பகல்/ இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தில்ஷன், தரங்கா கள மிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தனர். தில்ஷன் 42, தரங்கா 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். திரிமன்னே , சண்டிமால் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. சண்டிமால் 28, கேப்டன் ஜெயவர்தனே 3, மேத்யூஸ் 14, ஜீவன் மெண்டிஸ் 17 ரன்எடுத்து மனோஜ் திவாரி சுழலில் வெளியேறினர்.

பெரேரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய திரிமன்னே 47 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்� ��ுக்கு 251 ரன் எடுத்தது. ஹெராத் 17, மலிங்கா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் மனோஜ் திவாரி 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 2, சேவக், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கம்பீர் டக் அவுட் ஆகி வெளியேற, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. � �ேவக் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் 4, திவாரி 21 ரன்னில் வெளியேறினர்.

இதை தொடர்ந்து கோஹ்லி , ரெய்னா ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. கோஹ்லி 128 ரன் (13வது சதம்), ரெய்னா 58 ரன் விளாசினர். இந்தியா 42.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து வென்றது. கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 3,1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி 4ம் தேதி நடக்கிறது.







மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற டாக்டர் கைது





மதுரையை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் மேரி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்-2 மாணவியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையட ுத்து அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் மேரியை மதுரை, சொக்கலிங்கம் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக மேரிக்கு ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
 
இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சைக்கு வந்த மேரிக்கு அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் சங்கரநாராயணன் ஊசி போட்டார். இதனால் மயக்கம் ஏற்படும் என்பதால் அங்குள்ள ஒரு அறையில் சிறிது நேரம் தங்கிவிட்டு செல்லும்படி டாக்டர் கூறினாராம். அதன்படி மேரியை ஒரு அறை கட்டிலில் ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு அவரது சகோதரியும், மாமாவும் பழங்கள் வாங்க வெளியே சென்றனர்.  
 
அப்போது மேரி இருந்த அறைக்கு வந்த டாக்டர் சங்கரநாராயணன் அவரை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கூச்சல் போட்ட மேரி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். கடைக்கு சென்ற அவரது சகோதரியும், மாமாவும் திரும்பி வந்த நிலையில் நட� �்த சம்பவம் குறித்து அறிந்த அவர்களும் ஆத்திரம் அடைந்து சத்தம் போட்டனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன் கூடினர். அவர்கள் தன்னை தாக்குவார்கள் என்று பயந்த டாக்டர் சங்கர நாராயணன் ஒரு அறைக்குள் சென்று கதவினை பூட்டிக் கொண்டார்.  
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் கணேசன் மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். அறைக்குள் இருந்து வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து திறந்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பாக்கம்






சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் படம் என்றாலே அப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பில் இருந்து 'மாற்ற� ��ன்' படமும் தப்பவில்லை.

'அயன்' வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் 'மாற்றான்'. இந்த மெகா பட்ஜெட் படத்தினை தயாரித்து இருக்கிறார் கல்பாத்தி S. அகோரம்.

இப்படம் ஆரம்பித்த உடனேயே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தினை யார் வாங்குவது என்று பெரும் போட்டி நிலவியது.

இப்படத்தின் மொத்த உரிமையையும் EROS நிறுவனம் 84 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு உரிமையை பேலம்கொண்டா சுரேஷ் 17 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு விலை பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் இசையை சோனி நிறுவனம் 1.2 கோடிக்கு வாங்க இருக்கிறது. இது தான் தற்போதைய ஆடியோ உரிமையில் பெரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கூட்டணியில் 'அயன்' பாடல்கள் வெற்றி என்பதால் தான் 'மாற்றான்' படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு.

இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி NATIONAL DAY OF SINGAPORE என்பதால் சிங்கப்பூரில் அரசு விடுமுறை. ஆகவே அன்று அங்கே பிரம்மாண்டமாக இவ்விழாவை நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.









Monday, 30 July 2012

யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பாக்கம்





சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் படம் என்றாலே அப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இரு� ��்கும். அந்த எதிர்பார்ப்பில் இருந்து 'மாற்றான்' படமும் தப்பவில்லை.

'அயன்' வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் 'மாற்றான்'. இந்த மெகா பட்ஜெட் படத்தினை தயாரித்து இருக்கிறார் கல்பாத்தி S. அகோரம்.

இப்படம் ஆரம்பித்த உடனேயே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தினை யார் வாங்குவது என்று பெரும் போட்டி நிலவியது.

இப்படத்தின் மொத்த உரிமையையும் EROS நிறுவனம் 84 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு உரிமையை பேலம்கொண்டா சுரேஷ் 17 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவு� ��், வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு விலை பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் இசையை சோனி நிறுவனம் 1.2 கோடிக்கு வாங்க இருக்கிறது. இது தான் தற்போதைய ஆடியோ உரிமையில் பெரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கூட்டணியில் 'அயன்' பாடல்கள் வெற்ற� �� என்பதால் தான் 'மாற்றான்' படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு.

இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி NATIONAL DAY OF SINGAPORE என்பதால் சிங்கப்பூரில் அரசு விடுமுறை. ஆகவே அன்று அங்கே ப� ��ரம்மாண்டமாக இவ்விழாவை நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.







சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி பறிப்பின் பின்னணி





சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் இருவர் வகித்து வந்த கட்சிப் பதவிகளை பறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உ� ��்தரவிட்டதற்கு கவுன்சிலர்களின் அடங்காத அடாவடி வசூல்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் துறைமுகம் கவுன்சிலர் ஆவின் அருள், சேப்பாக்கம் கவுன்சிலர் அலிகான் பஷீர் ஆகியோ வகித்து வந்த கட்சிப் பதவிகளை நீக்கி ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டிர� ��ந்தார்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவர்களை நேரில் அழைத்து கடுமையாக டோஸும் விட்டிருந்தார். ஆனாலும் சில கவுன்சிலர்கள் இஷ்டம் போல் ஆடி வந்திருக்கின்றனர்.

அந்த வகையில்தான் ஆவின் அருளும் அலிகான் பஷீரும் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டிருக்கின்றனர். ஆவின் அருளைப் பொறுத்தவரையில் வடமாநில பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் அலிகான்பஷீர், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கார் பார்க்கிங் நடத்தி வருவதாகவும் புகார்கள் போயஸ் தோட்டத்துக்குப் போயின. இதனை விசாரித்த பிறகுதான் இருவரது கட்சிப் பதவிகளையும் பறித்து மற்ற கவுன்சிலர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார் ஜெயலலிதா என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.







என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த் பேட்டி




தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- 
தி.மு.க. நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது. பிரபாகரன் உயிரோடு இருந்தபோது அவரை தி.மு.க. தலைவர் கருணாநிதி காப்பாற்றவில்லை. இன்று முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். 

எனது ரிஷிவந்தியம் தொகுதியில் கால்வாய் தூர்வாருவத ற்காக தமிழக அரசிடம் ரூ.14 கோடி கேட்டேன். ஆனால் தரவில்லை. சென்னையில் காலரா வாந்தி-பேதியால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆனால் இதை மேயர் ஏற்க மறுக்கிறார். 

என்னை ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக முதல்வரும், அமைச்சர்களும் மதிக்கவில்லை. எனவே மக்களை நேரில் சந்திக்க இருக்க� �றேன். ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை மக்களுக்காக மக்கள் பணி செய்வதற்கு ஒரு மாதம் தீவிர சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறேன். 

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து இருக்கிறது. நெல்லையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சட்டம்-ஒழு ங்கு சீர்கெட்டு வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாதமாக கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அங்கிருந்து திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்வதாக அறிக்கை விடுகிறார். ஆனால் எந்த திட்டமும் செயல்பட்டதாக தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது எங்கள் விருப்பம். துணை ஜனாதிபதி தேர்தலையும் தே.மு.தி.க. புறக்கணிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு விஜயகாந்த் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தலைமை நிலைய செயலாளர் ப ார்த்தசாரதி எம்.எல்.ஏ., இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.








34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பேஸ்புக் மூலம் சேர்ந்தார்





லண்டனை சேர்ந்த சூசன் ஆர்டிரான் என்பவர் தனது கணவர் சிட் மற்றும் 4 குழந்தைகளுடன் கடந்த 1975ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் குடியேறி வசித்து வந்தார். 1978ம் ஆண்டில் ஒரு கார் விபத்தில் சூசனுக்கு மனநிலை பாதித்தது. அதன்� �ின், அவர் தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டார். நோய் முற்றி தன்னை பற்றியே அறியாதவராக சூசன் இருந்த நிலையில், அவரை ஒரு சாலையோரமாக விட்டுவிட்டு கணவர் வீடு திரும்பினார். பின்னர், குழந்தைகளுடன் சிட் மீண்டும் லண்டனுக்கு சென்று குடியேறினார். சூசன் காணாமல் போய் விட்டதாக, சூசனின் குடும்பத்தினரிடம் சிட் கூறி விட்டார்.

இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் சூசனை காப்பாற்றிய ஒரு குடும்பத்தினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, சூசனின் சகோதரர் மற்றும் சகோதரிகள் அவரை கண்டுபிடிப்பதற்காக ரெட்கிராஸ் உள்பட பல அமைப்புகளின் மூலம் முயற்சித்தனர். அதற்கு எந்த பலனும் இல்லாததால் அந்த முயற்சியை கைவிட்டனர்.
தற்போது 61வயதை எட்டி விட்ட சூசன் பூரண குணம் அடைந்து பழைய நினைவுகள் திரும்பி விட்டது. அவர் தனது குழந்தைகளை பார்க்க விரும்பினார். அவருக்கு உதவிய குடும்பத்தினர் அதற்காக இங்கிலாந்தில் தெரிந்தவர்கள் மூலம் தேடிப் பார்த்தனர்.

அதில் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், பேஸ்புக்கில் சூசன் படத்தை போட்டு, அவரத ு கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் விவரங்களை குறிப்பிட்டனர். இதை பார்த்த சூசனின் சகோதரிகள் டான், ஜூலி, கெயில், சகோதரர் கோலின் ஆகியோர் உடனடியாக சூசனை தொடர்பு கொண்டு பேசினர். தனது குழந்தைகளை சூசன் மறக்காமல் பெயர் சொல்லி கூப்பிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது லண்டனுக்க� �� வரவிருக்கும் சூசனுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.







Friday, 27 July 2012

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ தங்கம் பரிசு-சகாரா நிறுவனம் அறிவிப்பு





லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு, 5 கிலோ தங்கம் அளிக்க போவதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் வழங்க சகாரா நிறுவனம் முன்வந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 204 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சுமார் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் மொத்தம் 13 விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து அதிகளவிலான வீரர்கள், வீராங்கனைகள், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதால், இந்த முறை நாட்டிற்கு அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகமடையும் வகையில், சகாரா நிறுவனம் ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியர்களில் தங்கப்பதக்கம் வெல்லும் நபருக்கு 5 கிலோ தங்கம் வழங்கப்பட உள்ளது. வெள்ளிப் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலம் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் பரிசளிக்க உள்ளதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் குழு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கம் பெறும் அணியின் வீரர்களுக்கு, தங்கம் பகிர்ந்து அளிக்கப்படும். பரிசளிக்கப்படும் தங்கம் பதக்கம் வடிவில் வழங்கப்படும்.

இது குறித்து சகாரா இந்தியா பரிவார் நிறுவன தலைவர் சுப்ரதா ராய் கூறியதாவது,

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதன் மூலம் ஒவ்வொரு இந்திய வீரர்களும் நமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். ஒரு விளையாட்டு வீரரால் இதை விட நாட்டிற்கு வேறெந்த வகையிலும் பெருமை சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்தியர்களை உற்சாகப்படுத்த இது ஒரு சிறிய அளவிலான பரிசு அறிவிப்பு ஆகும். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர் நாட்டின் ஒரு வெற்றி சின்னமாகவே கருதப்படுவார் என்றார்.







Thursday, 26 July 2012

பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் அன்னா ஹசாரே




சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
2014-ம் ஆண்டு பாராள� �மன்ற தேர்தலுக்கு முன்பு நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். தேர்தலில் நிறுத்துவதற்காக நல்ல மனிதர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வேன். 

அவர்களில் சிறந்த வேட்பாளரை அன்னா ஹசாரே குழு தேர்வு செய்யும். அந்த வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்� �ேன். அந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் நிற்கலாம் அல்லது ஒரே கட்சியாகவும் நிற்கலாம். இதற்காக புதிய கட்சி தொடங்குவதில் தவறு இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.








லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் வில்வித்தை பந்தயம் இன்று தொடக்கம்




30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று கோலாகலமாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கால்பந்து போட்ட� �� தொடங்கி விட்டது. ஆனால் இன்று கால்பந்து போட்டிக்கு ஓய்வு நாளாகும். தொடக்க விழா நாளான இன்று வில்வித்தை பந்தயம் மட்டும் நடைபெறுகிறது. 

பழம்பெருமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியமான லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல்நாளில் பிற்பகல் 1.30 மணியளவில் தொடங்கும் இந்த பந� �தயம் மாலை 7 மணி வரை நடக்கிறது. 6 வீரர்-வீராங்கனைகள் ஆண்கள் தனிநபர், அணிகள், பெண்கள் தனிநபர், அணிகள் ஆகிய 4 பிரிவுகளில் தொடக்க சுற்று (ரேங்கிங் ரவுண்ட்) இன்று நடக்கிறது. 

இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஜெயந்தா தலுத்கர், தருண்தீப்ராய், ராகுல் பானர்ஜி ஆகியோரும், பெண்கள் பிரிவில ் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைல்யா தேவி, செய்க்ரோஸ்வாலு ஆகியோரும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள். இந்தியா இரண்டு பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் வில்வித்தையில் இந்திய வீரர்-வீராங்கனைகள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு பந்தயங்களில் பங்கேற்கிறார்கள். 

தனிநபர் பிரிவில் தலா 62 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். அணிகள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் அணிகள் பிரிவில் நாளை (28-ந் தேதி) பதக்க சுற்று பந்தயங்கள் நடக்கிறது. பெண்கள் அணிகள் பிரிவில் பதக்க சுற்று 29-ந் தேதி நடக்கிறது. தனிநபர் ஆண்கள் பிரிவில் பதக்க சுற்று ஆகஸ்டு 2-ந் தேதியும், தனிநபர் பெண்கள் பிரிவில் பதக்க சுற்று ஆகஸ்டு 3-ந் தேதியும் ந� �க்கிறது. 

சாதித்து காட்டுவோம் என்ற முனைப்புடன் சென்றுள்ள வில்வித்தை வீரர்-வீராங்கனைகள் நெருக்கடிக்கு ஆளாகாமல் அம்பை எய்தால் புகழ் பெற்ற மைதானத்தில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு உத்வேகமும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








Wednesday, 25 July 2012

செல்வராகவன் இயக்கும் ''பொன்னியின் செல்வன்''?





இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு, தமிழில் முன்னணி நடிகர்களான விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் ச� ��ல்வராகவன். தனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பை ரகசியமாக வைத்துக் கொள்வது தான் செல்வராகவனின் வழக்கம்.

ஆனால் முதல் முறையாக தனது அடுத்தபடம் பற்றி ட்வீட் செய்திருக்கிறார் செல்வராகவன். மிகவும் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வனை தான் படமாக்க ஆசைப்படுவதாக செல்வராகவன் கூறியுள்ளார். அதில் 'இராஜ இராஜ சோழனாக' விக்ரமும், 'ஆதித்த கரிகாலனாக' � �ர்யாவும், 'வல்லவரையன் வந்திய தேவனாக' ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என செல்வராகவன் கூறியுள்ளாராம். அதே போல் குந்தவையாக காஜல் அகர்வாலும், நந்தினியாக நயன்தாராவும் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என செல்வராகவன் கூறியுள்ளாராம். செல்வராகவனின் இந்த கற்பனை நிஜமாக்குவாரா என்பதை பொருத்திருந்த� ��ன் பார்க்க வேண்டும்.







பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி: பொதுமக்கள் பேருந்துக்கு தீவைப்பு





சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசுராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தனர்.
 
இந்நிலையில் முடிச்சூர் சாலையில் வந்தபோது பஸ ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டனர்.  சிறுமி கீழே விழுந்து இறந்ததையறிந்த டிரைவர் சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
 
பேருந்தில் இருந்த மற்ற மாணவிகள் கீழே இறங்க தொடர்ந்து கூச்சலிட, அங்கு ஏராளமானோர் திரண்டனர். விபத்தில் மாணவி இறந்ததை அறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள் பஸ்சுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







ஒபாமா அரசில் மேலும் ஒரு அமெரிக்க இந்தியர் நியமனம்





அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தலைமையிலான அரசில் புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்துள்ளார். அதில் ஒருவர் அமெரிக்க இந்தியரான ராணி ராமசாமி. இவருக்கு கலைகளுக்கான தேசிய கவுன்சிலில் முக்கிய உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஒபாமா கூறும்போ� ��ு: 
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் நிறைவேற்றும் திறன் கொண்ட தனிநபர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறையில் சிறப்பாக செயலாற்றுவர் என்று எதிர்ப்பார்க்கிறேன். வரும் நாட்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என கூறினார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட ராண ி ராமசாமி ராகமாலா நடன அமைப்பினை நிறுவி நடத்தி வருகிறார். பரதநாட்டிய கலைஞரான இவர் நடனம் கற்றுக் கொடுப்பதோடு நடன இயக்குநராகவும் இருக்கிறார். 

அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளினால் இவரது கலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்க நடன விழா, மும்பையில் உள்ள தேசிய நடன மையம் ஆகியவற்றில் பங்கேற்று தனது முத்திரையை பதித்துள� �ளார். 

மேலும் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர் என்கிற விருதையும் பெற்ற பெருமைக்குரிய இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










விவாகரத்தான, அழகான, எதற்கும் தயாராக உள்ள ஆண் வேண்டும் - சோனாவின் அறிவிப்பு





மேரேஜா.. சீச்சீ... எனக்கு ஆண்களைப் பிடிக்கவே பிடிக்காது. ஆண்களோடு வாழவே முடியாது, என்றெல்லாம் தத்துவம் பொழிந்து வந்த சோனா, இப்போது திருமணம் செய்ய ஆசையாக இருப்பதாகக் கூறிவருகிறார்.


சோனா 'கோ', 'குரு என் ஆளு', 'பத்து பத்து', 'குசேலசன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'கனிமொழி' படத்தை தயாரிக்கவும் செய்தார்.
தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் ஆண்களைப் பிடிக்காது என்று கூறிவந்தாலும், ஆண்களுடன் எல்லா பார்ட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு கலாட்டா செய்து வந்தார்.

இப்போது, தனது டுவிட்டரில், "விவாகரத்தான, அழகான, புத்திசாலியான ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. என்னை நன்றாக புரிந்து கொள்பவராகவும், எதையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்பவரா� ��வும் அவர் இருக்க வேண்டும்.. சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறேன், " என தெரிவித்துள்ளார்.

சோனா தயார்.... யாராவது இருக்கீங்களா?







அமெரிக்காவில் வசிக்கும் 4 இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி விருது





அமெரிக்கா அரசாங்கம் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கிறத ு. அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 96 விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.
 
இந்த விருது பெறுவோர் பட்டியலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ஸ்ரீதேவி வ� ��துலசர்மா, பவான் சின்கா, பராக் ஏ.பதக், பிஜு பாரிக்கதான் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். ஸ்ரீதேவி விதுலசர்மா, பவான் சின்கா ஆகியோர் துணை பேராசிரியராக இருக்கிறார்கள். பராக் ஏ.பதக் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலும், பிஜு பாரிக்கதான் ஹார்வார்டு மருத்துவ கல்லூரியிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.







Tuesday, 24 July 2012

பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ் விலையும் உயருகிறது: மத்திய அரசு முடிவு





பெட்ரோல் விலை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து உயர்த்தப்பட்டு உள்ளது. லிட்டருக்கு 70 காசு முதல் 91 காசு வரை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் விலை நிர்ணய உரிமை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால், ச� ��்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
 
ஆனால், டீசல், சமையல் கியாஸ் போன்ற மற்ற பெட்ரோலிய பொருட்களின� � விலை நிர்ணயம் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
 
இந்தநிலையில், பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அ மைச்சக உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது:-
 
டீசல், சமையல் கியாஸ் மட்டுமின்றி, மண்எண்ணெயின் விலையையும் உயர்த்துவதில் முழுமையான கருத்து ஒற்றுமை ஏற்பட்� ��ு உள்ளது. ஆனால், இந்த விலை உயர்வு எப்போது இருக்கும்? எந்த அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
 
ஆகஸ்டு 7-ந் தேதி அன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, அத� ��்கு முன்பாக விலை உயர்வை அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கருதுகிறது. துணை ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும், பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கூட இருக்கிறது. பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது விலை உயர்வை அறிவித்தால் ஆளும் காங்கிரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும். எனவே விலை உயர்வு எப்போது என்பதை பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு அந்த அதிகாரி க� ��றினார்.
 
அவர் மேலும் கூறும்போது,
 
சில்லரை வர்த்தகத்த� �ல் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதி மறுப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை விட, தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், டீசல், மண் எண்ணெய் மற்றும் சமையல் கியாசுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்துவதுதான் என்றார்.
 
பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
 
கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இறக்குமதி செலவு அதிகரித்த போதிலும் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதிக்குப்பிறகு பெட்ரோல் தவிர மற ்ற பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11.26-ம், மண்எண்ணெய்க்கு ரூ.28,56-ம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.319-ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே விலையை உயர்த்தாவிட்டால் இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும்.
 
பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்துக்காக பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிகளைக் கொண்ட உயர் அதிகார குழு அமைக்கப்பட்டு இருந்தது. ஜனாதிபதி தேர்தலையொட்டி அந்த பதவியில் இருந்து பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்தபின் அந்த குழு இன்னும் மாற்றியமைக்கப்பட வில்லை.
 
எனவே, விலை உயர்வு குறித்த அறிக்கையை மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகார குழுவிற்கு அனுப்பி வைக்க பெட்ரோலிய துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் பரிந்துரைப்படி, விலை உயர்வு குறித்து பிரதமர் மன்மோ கன்சிங் இறுதி முடிவை எடுப்பார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.   










அமெரிக்காவில் அழகை மெருகேற்றினார்: புதுப்பொலிவில் அமலாபால்





நடிகை அமலாபால் அமெரிக்காவில் இரண்டு வாரம் இடங்களை சுற்றி பார்த்துவிட்டு திரும்பியுள்ளார். முன்பைவிட இப்போது பொலிவு அவரிடம் தெரிகிறது.

சமீபத்தில் ரிலீசான வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி படங்கள் ஹிட்டாகி அமலாபால் மார்க்கெட்டை உயர்த்தி உள்ளது. அடுத்து ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் கூறியதாவது:-

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்க பேரவையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். குடும்பத்தினருடன் இடங்களை சுற்றி பார்த்தேன். உறவினர் வீடுகளுக்கும் சென்றேன்.

புது மேக்கப்பில் எனது தோற்றத்தையும் மாற்றியுள்ளேன். சிகை அலங்கார நிபுணரிடம் சென்று எனது கூந்தலை அழகுபடுத்தியுள்ளேன்.

இவ்வாறு அமலாபால கூறினார்.







'கரீனாவை திருமணம் செய்தாலும் ரூ 1000 கோடி சொத்துகளின் காப்பாளர் சயீப் அலிகான்!'





கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டாலும், ரூ 1000 கோடி வக்ப� �� வாரிய சொத்துகளுக்கு காப்பாளராக சயீப் அலிகான் பொறுப்பேற்க எந்த தடையும் இல்லை என்றும், எந்த மதத்தைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் மத்தியப் பிரதேச வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

படோடி சமஸ்தானத்தின் நவாபாக இருந்தவர் மன்சூர் அலிகான். அவர் கடந்த ஆண்டு மறைந்த பிறகு, அவர் மகன் சயீப் அலி கான் நவாபாக தொடர்கிறார்.

இந்த குடும்பத்துக்கு போபாலில் மட்டும் 2000 ஏக்கரில் சொத்துகள் உள்ளன. தவிர வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ 1000 கோடி சொத்துகளுக்கு மன்சூர் அலிகானின் மகள் சபா சுல்தான் பாதுகாவலராக (முத்தவல்லி) உள்ளார்.

அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தால், அப்போது சயீப் அலிகான்தான் முத்தவல்லியாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் இஸ்லாமியர் அல்லாத கரீனாவை திருமணம் செய்� �தால், அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனை எழுப்பியவர் சயீபின் அத்தை மகன் பைஜ் பின் ஜங்.

ஆனால் இந்தக் கேள்வி தேவையற்றது என மத்தியப் பிரதேச வக்பு வாரிய தலைவர் குப்ரான் ஆசாம் தெரிவித்துள்ளார்.