Thursday, 8 December 2011

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாசம்: வித்யாபாலன் கைதாவாரா?

 
 
 
பிரபல இந்தி நடிகை வித்யாபாலன். இவர் `த தர்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரான படத்தில் ஆபாசமாக நடித்துள்ளார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை இதில் படமாக்கப்பட்டு உள்ளது.
 
சில்க்ஸ்மிதாவின் சினிமா பிரவேசம், நடிகர்கள் அவரை தவறாக பயன்படுத்தியது, காதல் தோல்வி, இறுதியில் தற்கொலை என சில்க் ஸ்மிதா வாழ்வில் நடந்த அனைத்து சம்பவங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் வித்யாபாலன் பல ஆண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
 
படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரி சில்க் ஸ்மிதா உறவினர்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டு படம் கடந்த வாரம் ரிலீசானது.
 
இதற்கிடையில் இப்படத்தில் வித்யாபாலன் ஆபாசமாக நடித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆந்திராவைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஐதராபாத் நாம்பள்ளியில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
பெண்களை கேவலப்படுத்தும் வகையில் வித்யாபாலன் ஆபாசமாக நடித்துள்ளார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். படத்தின் இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டில் வற்புறுத்தப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை வித்யாபாலன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி நல்லகுண்டா போலீசாருக்கு உத்தர விட்டார். வருகிற 31-ந் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
 
இதையடுத்து வித்யாபாலன் கைதாகலாம் என இந்தி, தெலுங்கு திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்க்கிறது.



தமிழக சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது எப்.ஐ.ஆர்.

 
 
 
 
 
தமிழக சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
திருச்சையைச்சேர்ந்த டாக்டர் ராணி, மு.பரஞ்சோதியை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்றும், அவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றும், தன்னிடம் பணம், நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்று புகார் கூறினார். இந்த புகாரை பரஞ்சோதி மறுத்தார்.
 
இதையடுத்து ராணி, பரஞ்சோதி தனது கணவர் என்பதற்கும், தான் பரஞ்சோதியின் மனைவி என்பதற்கும் உரிய ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்தார்.
 
இதன்பிறகும் பரஞ்சோதி மீது நடவடிக்கை எடுக்காததால், ராணி கோர்ட்டுக்கு சென்றார்.
 
திருச்சி மே.எம். நீதிமன்றத்தில் ராணியின் மனு மீதான விசாரணை நடந்தது.
 
 
மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, பரஞ்சோதி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், நாளை (9. 12.11) பரஞ்சோதி குறித்து விசாரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
 
 
 
தீர்ப்புக்கு பின்னர் போலீசார், பரஞ்சோதி மீது 294B, 323, 406, 420, 493, 506/2 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
 
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 


மருத்துவமனையிலிருந்து மனோரமா டிஸ்சார்ஜ்!

 
 
 
 
 
ஒரு மாதத்திற்கு மேல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, நடிகை மனோரமா இன்று, "டிஸ்சார்ஜ் ஆகிறார். குடும்பத்துடன் காளஹஸ்தி ‌கோயிலுக்கு சென்றபோது, தலையில் அடிபட்டு, கடும் தலைவலி காரணமாக, நடிகை மனோரமா, கடந்த அக்., 25ம் தேதி, சென்னை தேனாம்பேட்டை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரின் தலையில் ரத்தம் உறைந்தது கண்டறியப்பட்டது.
 
இதை சரிசெய்ய, கடந்த மாதம் 1ம் தேதி, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு, உடல் வீக்கம், சளி ஆகிய பிரச்னைகள் இருந்தன. இதனால், டாக்டர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே, மனோரமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார் .



10ம் தேதி முழு சந்திர கிரகணம் : கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தா?

 
 


2011ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜூன் 15ம் தேதி ஏற்பட்டது. மேகமூட்டம் காரணமாக இந்தியாவில் இக்கிரகணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டின் 2வது முழு சந்திர கிரகணம் நாளை மறுதினம் (டிச.10) ஏற்படுகிறது. மாலை 6.15 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 9.48 மணி வரை நீடிக்கிறது. மேலும், முழு சந்திர கிரகணம் சரியாக இரவு 7.36 மணிக்கு தொடங்கி 8.28 மணி வரை 51 நிமிடம் நீடிக்கிறது.



இந்த கிரகணத்தை கொல்கத்தா உள்ளிட்ட பெரும் பகுதியில் பார்க்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிரகணத்தன்று இரவு 9 மணிக்கு பிறகு முழு விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

இரவு 10 மணிக்கு பிறகு குளித்துவிட்டு பூஜை செய்து சாப்பிடுவது சிறந்தது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பழம் சாப்பிடலாம்.

வீடுகளில் மாலை 5.30 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபம் அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மதியம் 3 மணிக்கு பின் வெளியே போகக் கூடாது. இல்லையென்றால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

ஜோதிடர்களின் இந்த கருத்தை கேட்டு கர்ப்பிணி பெண்கள் அதிர்ச்சியடைய தொடங்கியுள்ளனர். இந்த தகவல் ஆங்காங்கே பரவியுள்ளதால் கர்ப்பிணி பெண்கள் பீதியில் உள்ளனர்.



ரகசிய கேமரா: சினிமா பாணி சந்தேக கணவர் கைது

 
 
 
சென்னை அம்பத்தூர், சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலா. இவரின் கணவர் மகேந்திரன். அரசு பஸ் டிரைவர். கணவர் கொடுமைப்படுத்துவதாக, அம்பத்தூர் போலீசாரிடம், கமலா புகார் கொடுத்தார்.
 
புகாரில் கூறப்பட்டிருந்ததாவது: பத்து வயது மூத்தவரான மகேந்திரனுக்கு, இளம் வயதிலேயே எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஐந்து வயதில் மகனும், ஏழு வயதில் மகளும் உள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் அசிங்கமாக திட்டுகிறார். அடித்து உதைக்கிறார். சந்தேகம் அளவுக்கு மீறி வீட்டில் கழிவறை, குளியலறை, சமையலறை என அனைத்து இடங்களிலும், ரகசிய கேமரா பொருத்தி சி.சி.டி.வி.,யின் மூலம் உளவு பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.
 
 
போலீசார் வழக்கு பதிந்து, மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த மகேந்திரன், மீண்டும் தவறு செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். மீண்டும், அவர்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்த, மகேந்திரன் மீண்டும் மனைவிக்கு தெரியாமல், வீட்டில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.அதை தட்டிக் கேட்ட மனைவியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பான புகாரின்படி, மகேந்திரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர்.




கோல்கட்டா தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ - 35 நோயாளிகள் பலி

 
 
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், நர்சுகள்,ஊழியர்கள் என பலர் கட்டடத்தில் சிக்கியிருக்கின்றனர். எத்தனை பேர் சிக்கியிருக்கின்றனர். எத்தனை பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை.
 
கோல்கட்டாவில் தகுரியாவில் உள்ள எ.எம்.ஆர்.ஐ., ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை 3. 30 மணியளவில் தீ தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் 24 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கீழ் அறையில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து பின்னர் தீப்பற்றியிருக்கலாம் என்றும் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இன்னும் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
தீவிபத்து குறித்து ஆஸ்பத்திரியில் இருந்த ஒருவர் கூறுகையில், இன்று காலையில் குளியலறைக்கு சென்றேன் அப்போது மருத்துவமனையின் 2 வது மாடியில் திடீரென புகையாய் பரவியது. உடனே ஆபத்து காப்பாற்றுங்கள் என கதறினேன் அதற்கு பின்னர் கட்டடம் முழுவதும் புகை மண்டலமாக இருந்தது என்றார்.
 
 
தப்பிக்க முடியாமல் திணறிய நோயாளிகள்:

ஆஸ்பத்திரியில் தீ பிடித்து புகை கிளம்பிய பின்னர் ஏற்கனவே பலம் இல்லாமல் தளர்ந்த நிலையில் இருந்த நோயாளிகள் தங்களால் ஓடவும், முடியாமல் நகர்ந்து செல்லவும் முடியாமல் திணறியிருக்கின்றனர். பல நோயாளிகள் உறங்கிய நிலையில் இறந்து விட்டனர். இந்த ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் பலரும் கிட்னி கோளாறு, வயிறு உபாதை மற்றும் குழந்தைகள் நோயாளிகள் ஆவர். பல நோயாளிகளும் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சு திணறி இறந்திருக்கின்றனர். உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு கொண்டிருக்கின்றனர்.
 
தாமதமாக வந்த தீயணைப்பு படை:
காலை 3. 30 க்கு தீ பிடித்திருக்கிறது. ஆனால் தீயணைப்பு படையினர் 4.15 க்குத்தான் வந்திருக்கின்றனர். தீ எங்கிருந்து பரவகிறது என்பதை கண்டறிய ஒரு மணி நேரம் பிடித்தது. காலை 7 .20 வரை தீ அணைக்கும் பணி நடந்தது. தற்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
 
யார் குற்றவாளி ? விசாரணைக்கு உத்தரவு :

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளை கொண்ட குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீதான குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவர் என மாநில மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பந்தோயாபத்தாய் கூறியிருக்கிறார்.
 
கோல்கட்டாவில் அடிக்கடி தீ விபத்து :

கடந்த ஆண்டு கோல்கட்டாவில் மாபெரும் நட்சத்திர ஓட்டல் மற்றும் ஷாப்பிங் மாலில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது ஆஸ்பத்திரியில் துயரச்சம்பவம் நடந்திருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்று நடக்காத வண்ணம் நகர்ப்புற துறையினர் முக்கிய வீதிகளில் ஆய்வு நடத்துவதுடன் தீ முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பயிற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தீ விபத்து ஏற்பட்டுள்ள இந்த ஆஸ்பத்திரியில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பாதுகாப்பு விதிகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இந்த எ.எம்.ஆர்.ஐ., ஆஸ்பத்திரியல் தற்போது நடந்திருப்பது 2 வது தீ விபத்து ஆகும்.
 
 
முதல்வர் மம்தா ஸ்பாட்டுக்கு வந்தார்:
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீ பிடித்த ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு நடக்கும் மீட்பு பணிகள் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற உறவினர்களுக்கு மம்தா ஆறுதல் கூறி வருகிறார்.
 
நோயாளிகளின் உறவினர்கள் கதறல்:

žஸ்பத்திரியில் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் பலரும் ஆஸ்பத்திரியை சுற்றிலும் நின்று கதறி அழுதபடி இருக்கின்றனர். இது குறித்து ஒரு உறவினர் கூறுகையில்: எனது தந்தை விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படி தீ விபத்தினால் உயிர் போய் விட்டதே இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கதறியபடி. ஒரு சிலர் ஆத்திரத்தில் வரவேற்புறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
 

 


உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

 
 
 
சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் (வயது 33) மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 6 கிரவுண்டு நிலத்தை அபகரித்து கொண்டதாக என் மீது என்.எஸ்.சேஷாத்திரிகுமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
 
 
இந்த நிலத்தை அபகரித்ததில் சுபாரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாகவும், துணை பதிவாளரை புகார்தாரரின் வீட்டுக்கு அழைத்து வந்து அந்த நிலத்தை வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு விற்பனை செய்ய வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
நில விற்பனை தொடர்பாக என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பொய்ப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கும் நில விற்பனைக்கும், எனக்கும் தொடர்பு கிடையாது.
 
நான் நிரபராதி. புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். அதற்கு விதிக்கப்படும் எந்த நிபந்தனையையும் பின்பற்ற தயார் என்று அதில் கூறியிருந்தார்.
 
 
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இதுபோன்ற மனுவை தியாகராயநகர் திருமூர்த்திநகரைச் சேர்ந்த ராஜாசங்கரும் (53) தாக்கல் செய்துள்ளார்.
 
 
நீதிபதி பழனிவேலு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் எஸ்.ராமசாமி, குமரேசன், முனியப்பராஜ், சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
 
அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் ஐ.சுப்பிரமணியன் ஆஜரானார். விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும், சாட்சிகளை அவர்கள் கலைத்துவிடக்கூடும் என்பதாலும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அவர் வாதிட்டார்.
 
 
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
 
 
இந்த வழக்கில் சாட்சி, ஆதாரங்களை மனுதாரர்கள் கலைத்துவிடுவார்கள் என்று கூற முடியாது. எனவே இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்.
 
ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து அவர்கள் முன்ஜாமீன் பெறலாம். அதன் பிறகு 4 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீசில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின்னர் தேவைப்படும்போது போலீசார் முன்பு ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பயங்கரவாதிகளுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் : உலக நாடுகள் அதிர்ச்சி

 
 
 
 
 
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி வருகிறது என்று சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக், தலிபான் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மொகரம் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஷியா முஸ்லீம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. தலிபான் தலைமையிலான பயங்கரவாத அமைப்பு, இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது, பாகிஸ்தானில் மொகரம் பண்டிகை அமைதியாக நடைபெற்றது. இதற்கு, தலிபான் பயங்கரவாத அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளும், மதச் சடங்குகளை கடைப்பிடித்து வருவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது. அவர்கள் (பயங்கரவாதிகள்) தீவிரவாத செயலை கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முன்வரவேண்டும் என்று அவர் பயங்கரவாதிகளுக்கு கோரிக்கை விடு‌த்துள்ளார்.



குஜராத்தில் அதிரடி சட்டம்: சாராயம் விற்றால் தூக்கு தண்டனை

 
 
குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தி்ற்கு அமமாநில ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார்.
 
கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.
 
இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.
 
இந்த சட்ட திருத்தத்திற்கு குஜராத் ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.
 
குஜராத்தில் முழுமையான மதுவிலக்கு இருக்கையில் இவ்வாறு கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க தான் இந்த கடுமையான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரசாந்துடன் கலக்க வரும் வடிவேலு!!

 
 
 
கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் வடிவேலுவின் வெடி நகைச்சுவையை தமிழ் ரசிகர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.
 
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
நீண்ட காலம் அதிமுக அனுதாபியாக இருந்த போதும், பின்னர் கலைஞர் பக்கம் வந்த பிறகும், இருக்கிற இடம் எதுவாக இருந்தாலும் மிக விசுவாசமானவர் என்ற பெயர் தியாகராஜனுக்கு உண்டு.
 
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்கக் கூட எந்த இயக்குநரும் முன்வராத நிலையில், அவரை வைத்து படம் எடுக்கக் கூடாது என சில அதிகாரமிக்கவர்கள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தும்கூட, அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலுவை தான் இயக்கும் மம்பட்டியான் படத்தில் தொடர வைத்தார் (திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்ட படம் இது).
 
இப்போது வரும் டிசம்பர் 16-ம் தேதி மம்பட்டியான் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
 
இந்தப் படத்தில் பிரசாந்த் உடன் படம் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரசாந்தும் வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வடிவேலுவுடன் நடித்தது குறித்து பிரசாந்த் கூறுகையில், "மம்பட்டியான்'ல படம் முழுக்க என்னோடு வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். 'சிங்கம்தான்யா'னு வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு மிரட்டி எடுத்திருக்கார்," என்றார்.