Tuesday, 29 November 2011

திமுகவின் கூத்து :கனிமொழிக்கு கொ.ப.செ செயலாளர் பதவி

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைபட்டு மீண்டுள்ள கனிமொழிக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் பதவி தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி கடந்த மேமாதம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட கனிமொழி 6 மாத காலம் திகார் சிறையில் அடைபட்டிருந்தார். அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை மாலை ஜாமீன் வாழங்கியது. இந்த நிலையில் விரைவில் சென்னை வர உள்ள கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மறுபடியும் ஆற்காட்டார் தியாகியாகிறார்?
 
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தற்போது திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் அவருக்கு தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
 
ஆற்காடு வீராசாமி வகித்து வரும் அந்த பதவியை அவர் விட்டுத்தர முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தான் வகித்து வந்த பொருளாளர் பதவியை மு.க ஸ்டாலினுக்காக விட்டுக்கொடுத்தார் ஆற்காடு வீராசாமி என்பது நினைவிருக்கலாம். இப்போது கருணாநிதி மகளுக்காகவும் தனது பதவியை விட்டுத் தருகிறார் ஆற்காட்டார். இதன் மூலம் அவரும் ஒரு தியாகியாகிறார்!
 
இதைப்போல துணைப் பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் சற்குணபாண்டியனும் தன் பதவியைக் கனிமொழிக்கு அளிக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பதவிகளில் ஏதாவது ஒன்று கனிமொழிக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 
அதேசமயம் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு அளித்து, அவரை தமிழகம் முழுவதும் கனிமொழியைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் செய்யவும் ஒரு பிரிவு கட்சித் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
 
அனைவரும் சம்மதம்
 
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த செய்தி அறிந்தவுடன் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கருணாநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் கனிமொழிக்கு பதவி தரவேண்டியது அவசியம் என கூறப்பட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்பட அனைவரும் சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது.
 
சந்தடி சாக்கில் பதவி கேட்கும் ஸ்டாலின்
 
இதற்கிடையில் மு.க.ஸ்டாலினும் தனக்குச் இந்த முறையாவது செயல் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
திமுக தலைவர் பதவிக்காக அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு செயல் தலைவர் பதவியைக் கொடுத்து பின்னர் தலைவராக்கலாம் என மூத்த தலைவர்கள் கருதுவதாகத்தெரிகிறது. மேலும் அழகிரியும் ஒருபக்கம் மல்லுக்கட்டி வருவதால் ஸ்டாலினுக்கு அது கூட கிடைக்க முடியாத நிலை நிலவுகிறது.
 
தற்போது கனிமொழியை ஜாமீ்னில் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டி வந்தார் ஸ்டாலின் என்பதால் இந்த முறை அவருக்குப் பதவியைக் கொடுத்து கட்சித் தலைமை குஷிப்படுத்த முயற்சிக்லாம் என்று தெரிகிறது.
 
திமுக பொதுக்குழு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் கூடும்போது கனிமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பதவி அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.



பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...

 
 
 
சென்னையில் நடக்கும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) விழாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய நாடகம் நடக்கிறது. இந்தத் தகவலை கமல்ஹாஸன் நேற்று தெரிவித்தார்.
 
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.
 
இதுதொடர்பாக ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.
 
இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.
 
மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.
 
கே பி இயக்கத்தில் நாடகம்
 
சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
 
பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.
 
மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான் (கமல்ஹாசன்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.
 
தமிழக அரசிடம் நிதி கேட்போம்
 
சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப் பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.
 
கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும். அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கேட்பது எங்கள் கடமை,'' என்றார்.
 
பேட்டியின்போது, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த லீனா ஜெய்சானி, பி.முராரி ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.



மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தையுடன் வசிக்க கோர்ட்டு உத்தரவு

 
 
 
சென்னை குடும்ப நல கோர்ட்டில் மடிப்பாக்கம் சக்திநகரை சேர்ந்த பிரபாகரன் தனது மனைவியுடன் நடிகர் சினேகன் தொடர்பு வைத்து இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
எனக்கும், ஜமுனாகலா தேவிக்கும் 2004-ல் திருமணம் நடந்தத. எங்களுக்கு சஞ்சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி நாட்டியப் பள்ளி நடத்துகிறார். அவ ருக்கும், நடிகர் சினேகனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜமுனாவிடம் சினேகன் நாட்டியம் கற்றார்.
 
எனது மனைவியிடம் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறினார். என் பேச்சை கேளாமல் ஜமுனா சினேகனுடன் சுற்ற தொடங்கினார். அவர்கள் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
 
தற்போது குழந்தை என்னுடன் வசிக்கிறாள். குழந்தையை அபகரிக்க ஜமுனா முயற்சிக்கிறார். என்னிடமே குழந்தை வாழ உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜாசொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது குழந்தை சஞ்சனாஸ்ரீ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாள். குழந்தை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 1-ந்தேதி வரை தந்தையுடன் குழந்தை சஞ்சனாஸ்ரீ வசிக்க நீதிபதி உத்தரவிட்டார்.



'தட்டாம்பூச்சி' மூலம் உளவு பார்க்கப் போகும் இந்தியா!

 
 
எதிரிகளை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் பறவைகள், தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம் தயாரிக்கப்படவிருப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முதன்மை கட்டுப்பட்டாளர் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவதாணுப்பிள்ளை கூறியதாவது,
 
வருங்கால மக்களின் வாழ்க்கையில் நானோ டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கும். நானோ டெக்னாலஜி மூலம் உணவு பதப்படுத்துதல், எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பான குடிநீர் உள்ளி்ட்ட துறைகளில் மக்கள் பயன் பெற முடியும்.
 
ஒளியை விட 7 மடங்கு வேகமாக சென்று தாக்கக் கூடிய பிரமாஸ் ஏவுகணையின் வேகத்தை மேலும் அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. உயர்வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் ஏவப்பட்டால் அவை மனித உடலில் படும் போது அவர்களுக்கு கதிர்வீச்சு ஏற்படும். அந்த கதிர்வீச்சு பாதிப்பை குறைக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் கொடுக்க வேண்டும்.
 
இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி. ஆகியவற்றை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட சீருடை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் உடல்நிலையை ராணுவ அதிகாரிகள் முகாமில் இருந்தவாறே தெரிந்து கொள்ள முடியும். ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிக்கவும் இந்த சீருடை பயன்படும்.
 
நானோ டெக்னாலஜியின் மூலம் தட்டாம்பூச்சி, பறவைகளின் அளவில் உளவு விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் வெளிநாட்டு எதிரிகளின் ஊடுருவல், நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானங்களில் 5 ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என்றார்.



விடுதலையானார் கனிமொழி-டிச. 3ம் தேதி சென்னை வருகிறார்

 
 
 
6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கழித்து விட்ட திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிறையிலிருந்து விடுதலையானார். திஹார் சிறையின் 3வது வாசலில் பெருமளவிலான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்புவதற்காக பின்வாசல் வழியாக வெளியேறிய கனிமொழி கார் மூலம் புறப்ட்டுச் சென்றார்.
 
டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு நேற்று நிபந்தனை ஜாமீன்அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவே அவர் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திஹார் சிறைக்கு வெளியே மீடியாக்கள் குழுமியிருந்தனர். அதேபோல திமுகவினரும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். இருப்பினும் ஜாமீன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு, 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு தாமதமாக வந்தது.
 
அதற்குள் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி வீட்டுக்குக் கிளம்பி விட்டார். இதனால் கனிமொழியை விடுவிப்பது நேற்று இயலாததாகி விட்டது. இதனால் நேற்று இரவும் கனிமொழி சிறையிலேயே கழித்தார்.
 
இன்று சிறப்பு சிபிஐ நீதிபதியிடம் உயர்நீதிமன்ற உத்தரவு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவருவதற்காக அங்கு கனிமொழி சார்பில் பிணைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை சிபிஐ நீதிமன்றம் இன்று மாலை நான்கரை மணியளவில் பிறப்பித்தது.
 
இந்த உத்தரவு பின்னர் திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பல்வேறு நடைமுறைகள் முடிந்து இரவு ஏழரை மணியளவில் கனிமொழி விடுதலை செய்யப்பட்டார்.
 
கனிமொழியை வரவேற்க திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரும், திமுக எம்.பிக்களும், கட்சி நிர்வாகிகளும் திஹார் சிறைக்கு வந்திருந்தனர்.
 
கனிமொழி வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட 3வது நுழைவாயில் முன்பு பெருமளவில் பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். இருப்பினும் அந்த வழியாக கனிமொழி வரவில்லை. மாறாக சிறையின் பின்வாசல் வழியாக அவர் வெளியேறி விட்டார்.
 
3ம் தேதி சென்னை வருகிறார்:
 
முன்னதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இன்னும் 3 நாட்கள் சிபிஐ தரப்பு நடைமுறைகளை முடித்து விட்டு அவர் டிசம்பர் 3ம் தேதி சென்னை வருவார் என்றும், டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் இருக்கும் கனிமொழி, பின்னர் மீண்டும் டெல்லிக்குச் செல்வார் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
தடபுடல் வரவேற்புக்கு திமுக தயார்
 
சென்னை வரும் கனிமொழிக்கு தடபுடலான வரவேற்பு அளித்து பிரமாண்டமாக அவரை வீட்டுக்கு அழைத்து வர கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
 
விழாக்கோலத்தில் திமுகவினர்
 
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது திமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கனிமொழி கவலையால்தான் கருணாநிதி பெரும் சோர்வுடன் காணப்பட்டார். அவரது வழக்கமான அதிரடியைக் கூடக் காண முடியவில்லை. இப்போது அவர் நிம்மதியாக இருப்பார். தனது வழக்கமான அரசியலில் அவர் இறங்குவார். அது பல கட்சிகளுக்கு நிம்மதியான தூக்கத்தைப் பறிப்பதாக அமையும் என்று திமுகவினர் கருதுகிறார்கள்.



அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி!

 
 
 
மதுரையில் ஆடியோ வெளியிடுவது, மலேசியாவில் ஒற்றை பாடல் வெளியிடுவது... என கோலிவுட்டின் இசை வெளியீட்டு வைபவங்கள், கோடம்பாக்கத்துக்கு வெளியேயும் சமீபகாலமாக அரங்கேறி வரும் வேளையில், தன் இயக்கத்தில் உருவாகும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் படத்தொடக்க விழாவையே, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் ஆர்ப்பாட்டமாக நடத்தி முடித்தார் இயக்குநர் பாரதிராஜா. அவரைத்தொடர்ந்து பழம் பெரும் அரசியல்வாதியும், படஅதிபரும், இயக்குநருமான முக்தா சீனிவாசனின் வாரிசும், திரைப்பட இயக்குநருமான வி.சீனிவாசன் சுந்தர் புதிதாக இயக்க இருக்கும் பத்தாயிரம்கோடி எனும் திரைப்படத்தின் தொடக்க விழாவை, பாண்டிச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை(30.11.11) 9 மணிக்கு நடத்த இருக்கிறார்.
 
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெறும் இப்படத்தின் தொடக்க விழாவில், காமிராவை முடுக்கி வைக்க இருப்பவர் புதுவை சட்டசபை உறுப்பினர் அஷோக் ஆனந்தன். மாயா கிரியேஷன் எனும் பேனரில் பத்தாயிரம் கோடி படத்தை என்.ஆர்.சீனிவாசன் தயாரிக்கிறார்.
 
அரசியல்வாதிகளின் வாரிசுகள், அரசியல் பிரபலங்கள் புடைசூழ படத்தின் தலைப்பு "பத்தாயிரம்கோடி" என்றிருப்பது தான், புதுவையில் இதன் தொடக்கவிழா இருப்பதைகாட்டிலும் கோடம்பாக்கத்தில் பலரது புருவங்ளை உயர செய்திருக்கும் சமாச்சாரமாகும்!



கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்தார் ஜெ.

 
 
 
முதல்வர் ஜெயலலிதா நாளை, நீலகிரி மாவட்டம் கோடநாடு செல்வதாக இருந்தார். முதல்வர் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி (பொறுப்பு) அம்ரேஷ் பூஜாரி, டிஐஜி ஜெயராமன், நீலகிரி எஸ்பி நிஜாமுதீன், குன்னூர் டிஎஸ்பி மாடசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
 
 
கோத்தகிரி முதல் கோடநாடு வரை சாலையில் எந்தெந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டது.
 
உள்ளூர் போலீசார் மட்டுமில்லாமல், கோவையில் இருந்து அதிவிரைவு படை போலீசாரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டது.
 
வழக்கமாக ஜெயலலிதா கோடநாடு வரும்போது சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வது வழக்கம்.
 
ஆனால், நீலகிரியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மேகமூட்டம் நிலவி வருகிறது. நாளையும் இதே போல் மேகமூட்டம் நிலவினால் ஹெலிகாப்டர் தரையிறங் குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, வாகனம் மூலம் தரைமார்க்கமாக முதல்வர் கோடநாடு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
 
தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் சில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தோழி சசிகலா ஆகியோரும் கோடநாடு செல்வதாக இருந்தனர். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா சுமார் 3 வார காலம் தங்கி இருப்பார். டிசம்பர் கடைசியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் சென்னை திரும்புவார் எனவும் பேசப்பட்டது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, தனது கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.
 
 

 


இன்றைய முக்கிய செய்திகள்




போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 4 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை  போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 4 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை
போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 4 பெண்களுக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை - கோவா திரைப்பட விழாவில் பரபரப்பு  முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை - கோவா திரைப்பட விழாவில் பரபரப்பு
முல்லைப் பெரியாறு அணையைக் காத்து இந்திய ஒற்றுமையைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி

பொங்கலூர் பழனிச்சாமி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை   பொங்கலூர் பழனிச்சாமி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து
ஜெயலலிதா கோடநாடு பயணம் தள்ளிவைப்பு  ஜெயலலிதா கோடநாடு பயணம் தள்ளிவைப்பு
முதல்வர் ஜெயலலிதா கோடநாடு செல்லும் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீலகிரி
1-ந்தேதி கடையடைப்பு- உண்ணாவிரதம்: வெள்ளையன் அறிவிப்பு  1-ந்தேதி கடையடைப்பு- உண்ணாவிரதம்: வெள்ளையன் அறிவிப்பு
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில்லரை வணிகத்துறையில்
வெள்ள சேதப் பகுதிகளை ஜெயலலிதா நேரில் ஆய்வு செய்தார்   வெள்ள சேதப் பகுதிகளை ஜெயலலிதா நேரில் ஆய்வு செய்தார்
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை, ஹெலிகாப்டரில் பறந்தபடி,
துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை  துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை
பரமக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஒவ்வொரு
 ஹசாரே மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு
"பார்லிமென்ட் நிலைக் குழு தயாரித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவில், எங்களின் முக்கிய கோரிக்கைகள்
 தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 திகார் சிறையிலிருந்து விடுதலையானார் கனிமொழி
2ஜி வழக்கில் ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து 165 நாள் சிறை வாசத்திற்கு பின்னர்
 2ஜி வழக்கு: ஷாகித் பல்வாவுக்கு ஜாமீன்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஸ்வான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு
 ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலினின் மகள் மரணம்
ரஷிய நாட்டின் சர்வாதிகாரியாக இருந்து மறைந்த ஸ்டாலினின் ஒரே மகள் ஸ்வெத்லானா மரணம்
 உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 இடங்கள்
உலகத்தில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் எவை என்று மெர்சர் என்ற நிறுவனம்
 மைக்கேல் ஜாக்சன் டாக்டருக்கு நான்காண்டு சிறை
மறைந்த உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்த டாக்டருக்கு நான்காண்டு
 இலங்கை சிறையில் தமிழ் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம்
இலங்கை அனுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை நிர்வணப்படுத்தி, சிறைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
 முதல் ஒருநாள் கிரிக்கெட் - இந்தியா வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 1 விக்கெட்
 மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு
"அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549
 கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் 3D படமான கோச்சடையான் படத்தை ரஜினிகாந்த் மகள்
 மயக்கம் என்ன - விமர்சனம்
செல்வராகவன் படம் என்றால் இனிமேல் யோசித்துப் பார்த்து ,முடிவு கேட்டு
 மம்பட்டியான் மூலம் பிரசாந்த்க்கு ஒரு பிரேக் கிடைக்கும் : தியாகராஜன்
எனது திரையுலக வாழ்க்கையில் மலையூர் மம்பட்டியான் படம், எனக்கு எப்படி ஒரு பிரேக்
 `சென்செக்ஸ்' 159 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க்கிழமை அன்று மந்தமாக இருந்தது. சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும்