விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Thursday, 3 November 2011
அழியப் போகிறது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பேசும் அழகிய ஆலயம்!
சிங்கம் 2: சூர்யா ஜோடி ?
மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
இண்டர்நெட்டில் “7 ஆம் அறிவு”,“வேலாயுதம்” படங்களை வெளியிட்டது யார்? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அழகுப் பெண்ணுக்கு அமைந்த வக்கிர தோழி
கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த பெண் அவர்.அதே கிராமத்தில் உள்ள சுயமாகத் தொழில் செய்து கொண்டிருக்கும் பையனுக்கு காதல் வந்து விட்டது.பெண் இருக்கும் திசையிலேயே சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்.பெண்ணுக்கும் ஆர்வம் என்றாலும் பேச ஆரம்பிக்கவில்லை.
ஒரு நாள் பக்கத்து தெருவில் இருக்கும் அக்கா அழகுப் பெண்ணிடம் வந்து பேச ஆரம்பித்தார்." உனக்கு விருப்பமா? " என்று கேட்டு விஷயத்துக்கு வர இவருக்கு அக்காவை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.இருவரும் நெருக்கமாகி தோழமை கொண்டு விட்டார்கள்.அடிக்கடி வீட்டிலிருந்து சிக்கன்,மட்டன்,பலகாரம் என்று விஷேசமான சமையல் அனைத்தும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
அழகுப் பெண்ணும் அக்காவின் அன்பை நினைத்து உருகிப் போய்விட்டார்.காதலும் அவர் மூலமாகவே வளர்ந்து கொண்டிருந்தது.காதலனிடம் பேசும் ஆசை இருந்தாலும் அக்கா அறிவுரை சொன்னார்."நீ பேசாதே! அப்புறம் மதிக்க மாட்டார்கள்.ஆண்களிடம் அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுத்து விடக் கூடாது!" அக்காவே அவருக்கு போன் செய்து கொடுப்பார்.ஓரிரு வார்த்தைகள் பேசியதும் போதும் என்று கையாட்டி விடுவார்.
பையன் நண்பர்கள் யாருடனோ சொல்ல அவர்கள் மூலமாக அவனது பெற்றோருக்கு விஷயம் போய் விட்டது.ஓரளவுக்கு சம அந்தஸ்துள்ள குடும்பங்கள்தான்.ஒரு வழியாக இரண்டு வீட்டிலும் பேசி நான்கு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவாகி விட்டது.
ஒரு நாள் அழகுப் பெண்ணின் அண்ணன் வீட்டுக்கு வந்து ஒரே சத்தம்."அவன் யோக்கியன் இல்லை.அவளுடன் சினிமா தியேட்டரில் பார்த்தேன்" அவள் என்று குறிப்பிடப்பட்டவர்,அழகுப் பெண்ணிடம் தோழமை கொண்ட அக்காதான்.அந்த திருமணம் நின்று போய்விட்டது என்று சொன்னார்கள்.இரண்டு பேருக்கு காதல் மலர்வதை எப்படியோ கவனித்த அக்கா அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.தன் மீது அபாண்டமாக பழி போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நம் மீது அன்பைக் காட்டுகிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது.உயர் அதிகாரி ஒருவருடன் பேசிகொண்டிருந்தோம்.உடன் வந்தவர் எதையோ பேச ஆரம்பிக்க சில வார்த்தைகளிலேயே அவர் கேட்டார்! " இதை எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள்? பேச ஆரம்பித்தவர் திணறினார்.
ஒருவர் பேசும் வார்த்தைகளை பிரித்துப் போட்டு பார்த்தால் நோக்கம் தெரிந்துவிட வாய்ப்புண்டு." சார் அவன் சரியில்லை சார் ! " என்று சொல்பவரை கவனித்து பாருங்கள்.இன்னொருவரை மட்டம் தட்டி தன்னை உயர்த்திக்காட்டவா? நம்மை எச்சரிக்கவா என்பது புரியும்.ஆதாயத்திற்காக உறவாடுபவர்களே அதிகம்.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் சிக்கல்கள் நேராமல் தடுத்துக் கொள்ளலாம்.
இனி கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காது?
அழகாக உடை அணிபவர் விருது: கேத் மிடில்டன் முதலிடம்
இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் திருமணம் இங்கிலாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெகு விமரிசையாக நடந்தது.
புதுமண தம்பதிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பேஷன் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் சிறப்பான அலங்காரம் மற்றும் உடை அணிவதில் கேத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஓன்லைன் மற்றும் நேரடியாக ஏராளமானவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த விருதுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
சமீபத்தில் நடந்த இந்த ஆண்டுக்கான போட்டியில் ஏராளமானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் கேத் உடையணியும் விதம் மிகவும் அசத்தலாக இருப்பதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் இந்த ஆண்டின் "பெஸ்ட் டிரெஸ் லேடி" விருதுக்கு கேத் முதலிடத்தில் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் 9 மாதங்களைக் கடந்த ராசா- இதுவரை ஜாமீன் கோரவில்லை!
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா 9 மாதத்தை நிறைவு செய்துள்ளார். இதே வழக்கில் கைதான கனிமொழி தொடர்ந்து ஜாமீன் கோரி வந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட விடுதலை கோரி அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அத்துறையின் அமைச்சராக இருந்த அ.ராசா கடந்த பிப்ரவரி 2ம் தேதி கைது செய்யப்பட்டார். நவம்பர் 2-ம் தேதியோடு அவர் 9 மாதங்களை சிறையில் கழித்துவிட்டார். இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கனிமொழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 22ம் தேதி இவர்கள் அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கலானது.
இவர்களில் ராசா இதுவரை ஜாமீன் கோரி ஒரு முறை கூட மனு செய்யவில்லை. மாறாக, கனிமொழி, ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர். கே. சண்டோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் ஊக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார், குசேகாவோன் காய்கறி, பழங்கள் விற்பனை நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கறீம் மொரானி, யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, டி.பி. ரியால்டி நிர்வாக இயக்குநர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் நிர்வாகிகள் கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜாமீன் கோரி மனுச் செய்தனர்.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அனைத்திலுமே ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தும் யாரும் இதுவரை விடுதலை பெற முடியவில்லை. ஆனால் ராசா இதுவரை ஒருமுறை கூட ஜாமீன் மனு தாக்கல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராசா சிறையில் 9 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ‘கிளர்ச்சிப்’புயல் அனுஷ்கா!
நடிகை அனுஷ்கா தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மறுக்கிறாராம். காரணம் அவரது ரகசிய சினேகிதராம்.
அனுஷ்கா தமிழிலும் சரி, தெலுங்கும் சரி கவர்ச்சி காட்ட தயங்கியதில்லை. அவர் சும்மா வந்தாலே 'சுரீர்'னுதான் இருக்கும். அவர் கவர்ச்சியாக நடிக்காத ஒரே படம் அநேகமாக தெய்வத் திருமகளாகத் தான் இருக்கும். அரை குறையாக வந்தாலும் சரி, முழுசா உடை அணிந்து வந்தாலும் அழகாகத் தான் இருக்கிறார். இதனால் அனுஷ்காவுக்கு ரசிகர்கள் ஜாஸ்திதான்.
சகட்டுமேனிக்கு கவர்ச்சியாக நடிக்க அனுஷ்கா தயங்குவதில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் செக்ஸியான கதாபாத்திரங்களுக்கு அவரைத் தான் அணுகுகின்றனர். அப்படி ஒரு படத்திற்கு பிகினியில் நடிக்க அனுஷ்காவை கேட்டுள்ளனராம். கவர்ச்சியான கதாபாத்திரமா அதுவும் பிகினியா நான் மாட்டேன்பா என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாராம்.
ஏன் இந்த திடீர் பதற்றம் என்று வந்தவர் குழம்பிப் போய் திரும்பி விட்டாராம். பிறகு ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்த பிறகுதான் தெரியவந்ததாம் – அனுஷ்காவின் ரகசிய சினேகிதர் போட்ட தடாவால்தான் கவர்ச்சி காட்ட மறுத்து விட்டார் என்று.
அன்புக் கட்டளைக்கு அடி பணியாவிட்டால் பிறகெப்படி!
விஜய் அம்மாவுக்கு ஜெயலலிதா தந்த புதிய பதவி!
சென்னை: நடிகர் விஜய்யின் அம்மாவும் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனின் மனைவியுமான ஷோபாவுக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு இசைப் பள்ளிகளின் கலை இயல் அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.
கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருச்சி, நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம், சேலம், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, சீர்காழி, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கும் 17 அரசு இசைப்பள்ளிகளுக்கும் இனி ஷோபா சந்திரசோகரன் அறிவுரைஞராக செயல்படுவார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தப் பதவியை அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஷோபா சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணியாற்றியது விஜய்யின் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.













