Friday, 7 October 2011

"The Rise of Damo" 7am Arivu Chinese song Lyrics

 
 


I Requested MR.MADHAN KARKY @ Twitter for this Lyrics and he responded me. Here the conversation below!
THANK YOU SIR, FOR RESPONDING TO MY REQUEST
- SP BLOG 10
 

Mr.Madhan Karky's Blog!
http://madhankarky.blogspot.com/


Note: This post is not for self publicity, just a dedication to Mr.Madhan Karky.

MANKATHA SUCCESSFUL 25th DAY

 
 

"MACHI OPEN THE BOTTLE" VIDEO SONG


"VILAYADU MANKATHA" VIDEO SONG

 

அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஆசை! – ஏ.ஆர்.ரஹ்மான்

 

அதிக தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க ஆசையாக உள்ளது என்றார் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா ஜோடி நடித்துள்ள அரவான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. டி சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பின்னணிப் பாடகர் கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமான வரலாற்றுப் படமாக அரவான் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் நடந்தது. முதல் இசைத் தட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.

விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்திருக்கிறது. ஒரு படத்தின் 'டிரைலரை' பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள்.

ஒரு சிறுவனிடம் ட்ரெய்லரைக் காட்டினால், அதுபற்றி அவன் என்ன சொல்கிறானோ அதுதான் உண்மையாகிறது. அதைவைத்தே அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று கூறிவிடலாம்.

நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

இந்த (அரவான்) பட காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது," என்றார்.

தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் குவிந்துவிட்டது போல, ஏராளமான பிரமுகர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் கேயார் ஆகியோர் தங்கள் அணியுடன் வந்து விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பட அதிபர் டி.சிவா வரவேற்று பேசினார். இயக்குநர் வசந்தபாலன் நன்றி கூறினார்.

குரும்பசிட்டிப் பகுதியில் மீள்குடியேற்றம்

 

வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக நீண்ட காலமாக அங்கிருந்த படையினரின் காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த மக்களின் மீள்குடியேற்றம் நேற்று செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் குறைகூறியுள்ளனர்.

உயர்பாதுகாப்பு வலயமான பலாலிக்கு அண்மையிலுள்ள குரும்பசிட்டிக் கிராம மக்கள் 21 வருடங்களின் பின்னர் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குரும்பசிட்டி ஜே242 மற்றும் குரும்பசிட்டி கிழக்கு ஜே243 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 100 குடும்பங்கள் நேற்றையதினம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பொன் பரமானந்தா மகா வித்தியாலயம், ஆலயங்கள் என்பனவும் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குரும்பசிட்டி வசாவிளான் வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.முரளிதரன், உதவி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் உட்பட இராணு அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முதல்வருடன் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு ?

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் இன்னொரு அணியும் மோதிக் கொள்கிறார்கள். இருவருமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் அரசின் சலுகைகளை உரிமையோடு பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை சங்க உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

யாருக்கு வாக்களிப்பது என்பதுதான் அந்த குழப்பம். 2007 ம் ஆண்டிலிருந்து ஒரு படத்திற்கு ஏழு லட்சம் வீதம் சுமார் 500 படங்களுக்கு அரசின் மானியத் தொகை தர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தொகை கடந்த ஆட்சியிலேயே வழங்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையில் இருந்த உறுப்பினர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே நிலவியது. இந்த முறை இந்த தொகையை வாங்கித்தர இருவருமே முயற்சி எடுப்பதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முதல் நாள் கூட தங்கள் பலத்தை காண்பிப்பதற்காக தனித்தனி ஆதரவாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்க முன் அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கும் இந்த சந்திப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று எஸ்.ஏ.சி தரப்பில் கூறப்பட்டாலும், முதல்வருடனான இந்த சந்திப்பு தேர்தல் முடிவுகளை லேசாக அசைக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

வெள்ளைக் கொடி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழங்கு விசாரணைகளின் போது பொன்சேக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

வெள்ளைக்கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு வழங்கப்பட்டதாக அறியக் கிடைத்து எனக் கூறப்பட்டமையும் குற்றமாகும் என்று பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே தெரிவித்தார். அவசரகால சட்டவிதிமுறைகளை மீறி இனவாத உணர்வுகளைத் தூண்டும் மற்றும் மக்களை குழப்பமடையச் செய்யும் கருத்தினைத் தெரிவித்தமை சரத் பொன்சேக்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களின் உள்ளடக்கமாகும்.

இத்தகைய கருத்தினை சரத் பொன்சேக்கா கூறியமை, சன்டே லீடர் செய்தி ஆசிரியர் பிரெட்ரிகா ஜேய்ன்ஸ் அளித்த சாட்சியத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் குறிப்பிட்டார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிரிகேடியர் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சாட்சியங்களின் பிரகாரம் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த உத்தரவு வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டதாகவும் புவனேக அலுவிஹாரே கூறினார்.

எனினும் அவ்வாறான உத்தரவு வழங்கப்பட்டமை குறித்து இரண்டு ஊடகவியலாளர்கள் ஊடாக தெரியவந்தது என்று சரத் பொன்சேக்காவின் பிரதிவாதி தரப்பிலிருந்து கூறப்பட்டதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் தெரிவித்தார். அத்துடன் தாம் அறிந்த வரையில் அவ்வாறான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என பொன்சேக்கா தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வெள்ளைக்கொடி ஏந்தியவாறு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடப்பட்டதாக வதந்தி பரப்புவதற்கு சரத் பொன்சேக்கா முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் நாயகம் கூறினார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் புதன்கிழமைவரை ஒத்திவைக்கப்பட்டன.

குரும்பசிட்டிப் பகுதியில் மீள்குடியேற்றம்

 

வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக நீண்ட காலமாக அங்கிருந்த படையினரின் காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த மக்களின் மீள்குடியேற்றம் நேற்று செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் குறைகூறியுள்ளனர்.

உயர்பாதுகாப்பு வலயமான பலாலிக்கு அண்மையிலுள்ள குரும்பசிட்டிக் கிராம மக்கள் 21 வருடங்களின் பின்னர் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குரும்பசிட்டி ஜே242 மற்றும் குரும்பசிட்டி கிழக்கு ஜே243 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 100 குடும்பங்கள் நேற்றையதினம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பொன் பரமானந்தா மகா வித்தியாலயம், ஆலயங்கள் என்பனவும் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குரும்பசிட்டி வசாவிளான் வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.முரளிதரன், உதவி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் உட்பட இராணு அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சூர்யா - கார்த்தியை இயக்குகிறார் வெங்கட் பிரபு?

 
 
 
அஜீத்துக்கு மங்காத்தா வெற்றியைக் கொடுத்தாலும், மது விருந்தில் நடந்த சோனா விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.
 
இப்போது, அதைச் சரிகட்டும் விதத்தில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார்.
 
ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிப்பாளர். ஹீரோ?
 
சூர்யா அல்லது அவர் தம்பி கார்த்தி இருவரில் ஒருவராக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரில் ஒருவரை இயக்குவது பெரிய விஷயமில்லை. இருவரையுமே ஒரு கதையில் இணைப்பதுதான் சவால். வர்த்தகமும் பெரிதாக இருக்கும் என்கிறாராம் வெங்கட் பிரபு.
 
ஏற்கெனவே அஜீத், அர்ஜூன் என இரு பெரிய ஹீரோக்களை திறமையாக இணைத்து வெற்றி கண்டவர் என்பதால், வெங்கட் பிரபுவின் இந்த ஐடியாவும் பரிசீலனையில் உள்ளதாம்!
 
விரைவில் படம் குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள். அதுவரை, வதந்திக்கு பஞ்சமிருக்காதல்லவா!!



அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை முப்பெண்கள் வசம்

 

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை 3 பேருக்கு பகிர்ந்தளிக்கபடுகிறது. லைபிரியாவின் ஜனாதிபதி எலீன்ஜான்சன் சர்லீப், லைபிரியாவை சேர்ந்த லேமா போவி, ஏமன் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் தவக்குள் கர்மன் (இவர் பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார்) ஆகிய 3 பேருக்கு நோபல பரிசு அளிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இவர்கள் மூவரும் பெண்கள் என்பது குறிப்பிட்தக்கது.

வரவு – செலவு திட்டம் நவம்பர் 21ம் திகதி சபையில் சமர்பிப்பு

 

2012ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பிற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதென தெரியவருகிறது.

அவுஸ்திரேலியா தப்பவிருந்த 37 பேரில் அறுவர் புலிகள்?


மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் தமிழீழ விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றத் தடுப்புப் பிரிவால் இது குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா தப்பிச் செல்லவிருந்த 37 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் குறித்த 6 பேரும் இனங்காணப்பட்டதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாணவ சிப்பாய்கள் பயிற்சிக்குச் சென்ற 15 வயது மாணவி திடீர் மரணம்

 

மாணவர் சிப்பாய்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவமொன்று குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

குருநாகல் – பொல்காஹவெல – ரத்மல்தொட்ட மத்திய மகா வித்தியாலய மாணவிகளுக்கு மாணவ சிப்பாய்கள் பயிற்சி ரன்டெம்பே முகாமில் இடம்பெற்று வருகிறது.

கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது திடீர் சுகயீனமுற்ற மாணவி ஒருவர் அம்பகஹபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

 

செங்கல்பட்டு, பூந்தமல்லியில் சிறப்பு முகாம்களில் உள்ள 29 இலங்கை அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது பாராட்டிற்குரியது.

ஈழத்தில் இனப்படுகொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கே படுகாயமுற்றுக் கிடந்த மக்களுக்கு மருந்துவப் பொருட்களையும், மண்ணெண்ணை உள்ளிட்ட சில அத்யாவசியப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் போரில் இங்குள்ள பல ஈழத் தமிழ் அகதிகளை தமிழக போலீசார் கைது செய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத்தனர்.

அவர்களுக்கு எதிரான வழக்குகளில், பிணை விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைக் கூட பெறுவதற்கு அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழின அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

மேலும், சிறப்பு முகாம்களில் அடைப்பட்டுக் கிடந்தவர்கள் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தி தங்களை உடனடியாக விடுவித்து, தமிழகத்தில் உள்ள இதர முகாம்களில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களில் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னமும் 29 பேர் பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை தமிழக அரசு அணுகி, மீதமுள்ள 29 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் படம்: கிணற்றில் விழுந்த ஹீரோ

 
 
 
சீமான் நடிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் ஷூட்டிங்கில் தருண் சத்ரியா என்ற புது நடிகர் கதவறி கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயது இளைஞர் தயாரிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.
 
முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதை நாயகன் இயக்குநர் சீமான். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார்.
 
போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.
 
காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழய கிணற்றைக் கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.
 
நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணறில் தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மயக்கமான தருணை, அந்த ஊரைச் சேர்ந்த இருவர் கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றினர்.
 
அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது!



'ரா ஒன்'னில் ரஜினி போட்டோக்கள்