விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
Saturday, 31 December 2011
சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வில்லை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2012
உலகெங்கிலும் வசிக்கும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.
படத்தை சொடுக்கி பெரியதாக்கி பார்க்கலாம். வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளூங்கள்.
இந்த புத்தாண்டு ஈழத்தின் எழுச்சி ஆண்டாக!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2012 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெற்று சுபீட்சமாய் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
நம்மால் இயன்ற வரை பிறர்க்கு நனமைகள் செய்வோம். முடியாது போனால் துன்பம் செய்யாது இருப்போம்.
நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்
மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?
சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது.
மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?
இரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு இரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.
மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.
Friday, 30 December 2011
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இளங்கோவனுக்கு பா.ஜ., ஆதரவு
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்ற இளங்கோவன் நிலைபாட்டுக்கு, மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சுசீந்திரம் அருகே வனத்துறை ஊழியர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மாதங்கள் கடந்தும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. முதல்வர் ஜெ., இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும். கூடங்குளத்தில் மின் உற்பத்தி காலதாமதம் ஆனால் பல விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே உடனடியாக மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் பதவி ஏற்றதும் எடுத்திருந்த நிலைபாட்டை உறுதியாக செயல்படுத்த வேண்டும்.
முல்லைப்பெரியாறு பிரச்னையால் இருமாநில மக்களுக்கிடையே இருந்து வரும் உறவு முறிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தின் உரிமையை இழக்கவும் முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு செயல்இழந்து நிற்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்னையில் முரண்டு பிடிக்கும் முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருப்பதை பா.ஜ., ஆதரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
